முனி தாண்டவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முனித் தாண்டவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முனி தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. முனிதாண்டவம் என்பது பார்வையை பல கோணங்களில் செலுத்தி அந்தக் கோணங்களில் கைகளையும், கால்களையும் வளைத்து ஆடுவது. இந்த நடனத்தை அங்க அசைவுகளையட்டி ஆடுவதால் வித்தாரம் எனவும் அழைக்கின்றனர். [1]

சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசிக்க, சிவபெருமான் ஆடிய தாண்டவம் முனி தாண்டவம் எனப்படுகிறது. இந்த தாண்டவம் நவராத்திரியின் ஆறாம் நாளில் சிவபெருமானால் ஆடப்படுகிறது. [2]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.vikatan.com/sakthivikatan/2012-jun-26/special-story/20316.art
  2. http://www.maalaimalar.com/2012/10/22133002/9-days-shiva-thandavam.html பரணிடப்பட்டது 2012-10-26 at the வந்தவழி இயந்திரம் 9 நாள் சிவதாண்டவம் மாலைமலர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முனி_தாண்டவம்&oldid=3255275" இலிருந்து மீள்விக்கப்பட்டது