முனி தாண்டவம்
(முனித் தாண்டவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
முனி தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. முனிதாண்டவம் என்பது பார்வையை பல கோணங்களில் செலுத்தி அந்தக் கோணங்களில் கைகளையும், கால்களையும் வளைத்து ஆடுவது. இந்த நடனத்தை அங்க அசைவுகளையட்டி ஆடுவதால் வித்தாரம் எனவும் அழைக்கின்றனர். [1]
சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசிக்க, சிவபெருமான் ஆடிய தாண்டவம் முனி தாண்டவம் எனப்படுகிறது. இந்த தாண்டவம் நவராத்திரியின் ஆறாம் நாளில் சிவபெருமானால் ஆடப்படுகிறது. [2]