கெரஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பைசா அல்லது பைசி அல்லது கெரஜ் (மொங்கோலியம்: Пайз, பாரசீக மொழி: پایزهpāiza, páizi) என்பது மங்கோலிய அதிகாரிகளாலும் தூதர்களாலும் சில சலுகைகள் மற்றும் அதிகாரங்களைக் குறிக்கப் பயன்பட்ட ஒரு தாயத்து ஆகும். இது மங்கோலிய உயர்குடியினரும், அதிகாரிகளும் பொது மக்களிடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளைக் கோருவதற்கு உதவியது.

பைசா கொண்ட ஒருவருக்கு மட்டுமே பொருட்களும், சவாரிக் குதிரைகளும் யாம் வழித்தடங்களில் வழங்கப்பட வேண்டும். எனினும், அரிதான இராணுவ பொருட்களைக் கொண்டு வந்தவர்கள் யாம் வழித்தடங்களை பைசா இன்றியும் பயன்படுத்தினர். மங்கோலியப் பேரரசின் அதிகாரிகள் மற்றும் பிரபுக்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பைசாக்களை வெளியிட்டனர். இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். எனவே, ஒக்தாயி கான் (ஆட்சி 1229-1241) பிரபுக்கள் பைசாக்கள் மற்றும் ஜர்லிக்குகள் வழங்குவதைத் தடை செய்தார்.

வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் திறமைசாலிகளை ஈர்ப்பதற்காக, பெரிய கான்கள் அவர்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிப்பதோடு அவர்கள் யாம் நிலையங்களைப் பயன்படுத்துவதற்கும் அனுமதி அளித்தனர்.[1] இருப்பினும், மோங்கே கான் (ஆட்சி 1251-1259) இதைத் தவறான வழியில் பயன்படுத்துவதைத் தடுக்க வணிகர்களின் வியாபாரத்தை மேற்பார்வையிடுவதற்கு ஏகாதிபத்திய விசாரணையாளர்களை அனுப்பினார். அவர் யாம் (சாம்) மற்றும் பைசா ஆகியவற்றைப் பயன்படுத்த அவர்களுக்குத் தடை விதித்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. Ata Malik Juvaini, trans. and ed. John Andrew Boyle, David Morgan-Genghis Khan: the history of the world conqueror, p.29
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெரஜ்&oldid=3460242" இலிருந்து மீள்விக்கப்பட்டது