மங்கோலியர்களின் ஜப்பானியப் படையெடுப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கோலியர்களின் ஜப்பானியப் படையெடுப்பு
மங்கோலியர்களின் கிழக்கு ஆசியப் படையெடுப்பு மற்றும் குப்லாய்கானின் படையெடுப்புகள் பகுதி

1274 மற்றும் 1281 இல் மங்கோலியர்களின் ஜப்பானியப் படையெடுப்புகள்
நாள் 1274, 1281
இடம் வடக்கு கியூஷூ, யப்பான்
தீர்க்கமான ஜப்பானிய வெற்றி
பிரிவினர்
யப்பான்
  • ஏகாதிபத்திய அவை
    • கமகுரா சோகுனரசு
    • ஹோஜோ குலம்
    • சோ குலம்
    • ஷோனி குலம்
    • சஷி குலம்
    • தைரா குலம்
    • கிகுச்சி குலம்
    • ஓட்டோமோ குலம்
    • ஷிமாசு குலம்
    • மத்சுரா குலம்
மங்கோலியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
பேரரசர் கமேயாமா
இளவரசர் கோரேயசு
ஹோஜே டோகிமுனே
ஷோனி சுகேயோஷி
ஓடோமோ யோரியசு
ஷோனி சுனேயசு
ஷோனி ககேயசு
கிகுச்சி தகேபுசா
தகேசகி சுவேனகா
மிச்சியசு ஷிரோயிஷி
புகுடா கனேஷிகே
தோகோ கோரேச்சிகா
ஹிடா நகமோட்டோ
மிட்சுயி யசுனகா
சோ சுகேகுனி
தைரா நோ ககேடகா
சஷி ஹுசாஷி
சஷி நவோ
சஷி டோடோ
சஷி இசமு
இஷிஜி கனே
இஷிஜி ஜிரோ
எமஷிரோ கயி
மங்கோலியர்கள் :
குப்லாய் கான்
கோல்டோன்
லியு புகெங்
அடகை
கோங் தகு
அலா தெமுர்
பன் வென்கு
லி டிங்
கொரியா :
அரசர் ஓன்ஜோங்
அரசர் சுங்னியோல்
கிம் பங்-கியோங்
பலம்
1274: 2,000-6,000[1]
1281: 40,000 (?)
ரோகுஹரா தன்டையின் வலுவூட்டல் படைகள்: 60,000 (அந்நேரத்தில் வந்து சேரவில்லை)
1274: 28,000-30,000[2][3]
1281: 100,000 and மற்றும் 40,000[4]
மேலும் 3,500 மற்றும் 900 கப்பல்கள் (முறையே)
இழப்புகள்
1274/1281: குறைந்த அளவு[சான்று தேவை] 1274: 13,500[5]
1281: 100,000[6]
20,000–30,000 பேர் பிடிக்கப்பட்டனர்[7]

மங்கோலியர்களின் ஜப்பானியப் படையெடுப்புகளானவை (元寇 Genkō?) 1274 மற்றும் 1281 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றன. கொரியியோ என்று அழைக்கப்பட்ட ஒரு கொரிய ராச்சியத்தை கப்பம் கட்டுமாறு அடிபணிய வைத்த பிறகு குப்லாய் கான் ஜப்பானிய தீவுகளை வெல்வதற்காக ராணுவ முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் இத்திட்டம் இறுதியில் தோல்வியில் முடிந்தது. இந்த படையெடுப்பு முயற்சிகள் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் மங்கோலிய விரிவாக்கத்திற்கு இவை ஒரு எல்லையை வகுத்தன. ஜப்பானிய வரலாற்றில் தேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது. பல்வேறு புனைகதைகளில் இந்த படையெடுப்புகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. கமிகசே ("தெய்வீகக் காற்று") என்ற சொல் பரவலாக பயன்படுத்தப்பட்ட ஆரம்ப கால நிகழ்வுகள் இவையாகும். மங்கோலிய கப்பல்கள் எதிர்கொண்ட 2  சூறாவளிகளை ஜப்பானியர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.

சீனாவுக்கு வெளியில் வெடி மருந்தானது உபயோகப்படுத்தப்பட்ட ஆரம்பகால  நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றமாக இந்தப் போரின் போது வெடிக்கக்கூடிய, கைகள் மூலம் எரியக்கூடிய வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன.[8]

உசாத்துணை[தொகு]

  1. Conlan, p. 261-263; cites a variety of estimate from various Japanese historians as well as the author's own.
  2. Twitchett 1994, ப. 437-442.
  3. Turnbull 2010, ப. 32.
  4. Turnbull 2010, ப. 55-57.
  5. Turnbull 2010, ப. 49-50.
  6. Turnbull 2010, ப. 69-76.
  7. 『元史』巻二百八 列傳第九十五 外夷一 日本國「(至元十八年)官軍六月入海、七月至平壷島(平戸島)、移五龍山(鷹島?)、八月一日、風破舟、五日、文虎等諸將各自擇堅好船乘之、棄士卒十餘萬于山下、衆議推張百戸者爲主帥、號之曰張總管、聽其約束、方伐木作舟欲還、七日日本人來戰、盡死、餘二三萬爲其虜去、九日、至八角島、盡殺蒙古、高麗、漢人、謂新附軍爲唐人、不殺而奴之、閶輩是也、蓋行省官議事不相下、故皆棄軍歸、久之、莫靑與呉萬五者亦逃還、十萬之衆得還者三人耳。」
  8. Stephen Turnbull (19 February 2013). The Mongol Invasions of Japan 1274 and 1281. Osprey Publishing. பக். 41–42. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4728-0045-9. https://books.google.com/books?id=Qo4amAg_ygIC&pg=PT41. பார்த்த நாள்: 16 April 2013.