கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி

கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி (Karamchand Uttamchand Gandhi) (1822-1885)[1] இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் போர்பந்தர், ராஜ்கோட், பிகானேர் சமஸ்தான மன்னர்களுக்கு திவான் எனும் தலைமை அமைச்சராக பணிபுரிந்தவர்.

போர்பந்தர் சமஸ்தானத்தின் திவான் பொறுப்பிலிருந்து விலகிய கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி [2]பின்னர் ராஜ்கோட் மற்றும் பிகானேர் சமஸ்தானங்களில் திவானாக பணிபுரிந்தார்.

குடும்பம்[தொகு]

சௌராட்டிர கற்பத்தின் போர்பந்தரின் வணிகர் குலத்தில் பிறந்த கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி[3] புத்லிபாய் இணையருக்கு நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தன. ஆண் குழந்தைகளில் மிகவும் இளையவரான மகாத்மா காந்தி தற்போது இந்திய நாட்டின் தந்தை எனப்போற்றப்படுகிறார்.

மறைவு[தொகு]

பவுத்திரம் என்ற நோயால் உடல் நலிந்த கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி, தமது 63-ஆம் வயதில், 1885-ஆம் ஆண்டில் மறைந்தார். கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி தமது மறைவுக்கு முன்னரே, மகாத்மா காந்தி உட்பட அனைத்து குழந்தைகளுக்கும் திருமணம் முடித்து வைத்தார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Karamchand Uttamchand Gandhi
  2. The Story of Gandhi (Complete Book Online)
  3. "All about the Father of the Nation - Mahatma Gandhi". Archived from the original on 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.