காந்திகிராமம்
காந்திகிராமம் | |||||||
அமைவிடம் | 10°13′N 77°35′E / 10.21°N 77.58°Eஆள்கூறுகள்: 10°13′N 77°35′E / 10.21°N 77.58°E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | தமிழ் நாடு | ||||||
மாவட்டம் | திண்டுக்கல் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.gandhigram.org/ |
காந்திகிராமம், தமிழ்நாட்டில் திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில்(NH-7), திண்டுக்கல்லில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு மாதிரி கிராமம். இக்கிராமம், சிறுமலை அடிவாரத்தில், இரு ஓடைகளின் நடுவே, இயற்கை எழிலார்ந்த இடத்தில் அமைந்துள்ளது.
காந்தியடிகளின் கிராமியப் பொருளாதாரக் கருத்துக்களைப் பரப்பும் நோக்கத்தில் திருமதி டாக்டர்.டி.எஸ்.சௌந்திரம் அம்மையார், அவரது கணவர் திரு.ஜி.ராமச்ச்சந்திரன் ஆகியோர் முயற்சியால் 1947 ஆம் வருடம் காந்தி கிராமத்தை உருவாக்கினர்.
காந்திகிராம அறக்கட்டளை[தொகு]
காந்திகிராமம் என்ற மாதிரி கிராமத்தை நிறுவுவதற்கு இடம் கொடுத்து உதவியதில், அருகாமையில் உள்ள சின்னாளபட்டி மக்களின் பங்கு முக்கியமானது ஆகும். சௌந்திரம் அம்மையார் முதலில் இங்கு ஒரு ஆரம்பப் பள்ளியைத் துவங்கினார். இந்த சிறு தொடக்கம், படிப்படியாக வளர்ச்சி பெற்று காந்திகிராம அறக்கட்டளை உருவானது.
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்[தொகு]
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் (Gandhigram Rural University - GRI), 1956-ல், ஒரு சிறிய கிராமப்புறக் கல்லூரியாக தொடங்கப்பட்டு, 1976-ல் நிகர்நிலைப் பல்கலைகழகமாக முன்னேற்றம் அடைந்தது. இப்பல்கலைக்கழகம் ஏறத்தாழ 200 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது.
காந்திகிராமப் பாடல்[தொகு]
இதய நடுவினில் என்றும் போற்றும்,
எங்கள் காந்திகிராமம், இது எமது காந்திகிராமம்
சிறுமலை மீது கருமுகில் சூழ்ந்து,
சீதளத் துளிகள் வீசிடும் வேளை... (சிறுமலை)
இருசிறு ஓடைகள் இனிய பாடலை... (இருசிறு)
இசைத்து மகிழ்ந்து முறுவல்கள் பூக்கும்
எங்கள் காந்திகிராமம், இது எமது காந்திகிராமம்