டால்ஸ்டாய் பண்ணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1910ல் டால்ஸ்டாய் பண்ணையின் உறுப்பினர்களுடன் காந்தி நடுவில் (இரண்டாவது வரிசையில் வலதுபுறத்தில் ஐந்தாவது இடத்தில்)

டால்ஸ்டாய் பண்ணை (Tolstoy Farm) என்பது தென்னாப்பிரிக்க இயக்கத்தின் போது மோகன்தாஸ் காந்தியால் தொடங்கப்பட்ட முதல் ஆசிரமமாகும். 1910ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஆசிரமம், டிரான்சுவாலில் இந்தியர்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு எதிரான சத்தியாகிரக பிரச்சாரத்தின் தலைமையகமாகச் செயல்பட்டது.[1] இந்த ஆசிரமம் ரஷ்ய எழுத்தாளரும் தத்துவஞானியுமான லியோ டால்ஸ்டாயின் நினைவாகப் பெயரிடப்பட்டது. டால்ஸ்டாய் 1894ஆம் ஆண்டில் வெளியிட்ட‘கடவுளின் இராச்சியம் உங்களுக்குள் உள்ளது’ எனும் புத்தகத்தில் காந்தியின் அகிம்சை கருத்துக்களின் தாக்கங்களைக் காணலாம்.

காந்தி ஆதரவாளரான ஹெர்மன் கல்லன்பாக், காந்தி மற்றும் எழுபது முதல் எண்பது பேர் வரை உள்ளூர் இயக்கம் நடைமுறையில் இருக்கும் வரை அங்கு வாழ அனுமதித்தார். கல்லன்பாக் சமூகத்திற்கான பெயரைப் பரிந்துரைத்தார். இதன் மூலம் மூன்று புதிய கட்டிடங்கள் விரைவில் கட்டவும், அங்குப் பட்டறைகள், பள்ளி, மற்றும் தங்கும் இடத்துடன் உருவாக்கியது. [2] [3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tolstoy Farm". South African Historical Journal, No. 7. November 1975.
  2. For Kallenbach and the naming of Tolstoy Farm, see Vashi, Ashish (31 March 2011) "For Gandhi, Kallenbach was a Friend and Guide", The Times of India. Retrieved 1 January 2019.

    For Johannesburg, see "Gandhi – A Medium for Truth" (link to article in Philosophy Now magazine) பரணிடப்பட்டது 24 மார்ச்சு 2014 at the வந்தவழி இயந்திரம். Retrieved March 2014.
  3. Corder, Catherine; Plaut, Martin (2014). "Gandhi's Decisive South African 1913 Campaign: A Personal Perspective from the Letters of Betty Molteno". South African Historical Journal 66 (1): 22–54. doi:10.1080/02582473.2013.862565. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டால்ஸ்டாய்_பண்ணை&oldid=3446857" இலிருந்து மீள்விக்கப்பட்டது