துரோல் சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துரோல் சமஸ்தானம்
ધ્રોલ રિયાસત
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
[[நவநகர் இராச்சியம்|]]
1595–1948 [[இந்தியா|]]
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of துரோல்
Location of துரோல்
தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில் துரோல் சமஸ்தானத்தின் அமைவிடம்
தலைநகரம் துரோல்
வரலாற்றுக் காலம் பிரித்தானிய இந்தியா
 •  நிறுவப்பட்டது 1595
 •  1947 இந்திய விடுதலை 15 பிப்ரவரி 1948
Population
 •  1901 21,906 
தற்காலத்தில் அங்கம் சௌராட்டிர தீபகற்பம், துரோல் தாலுகா, ஜாம்நகர் மாவட்டம், குஜராத், இந்தியா

துரோல் சமஸ்தானம் (Dhrol State), 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் துரோல் நகரம் ஆகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில் உள்ள ஜாம்நகர் மாவட்டத்தின் துரோல் தாலுகாவின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1921-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பம்பாய் மாகாணத்தின் கத்தியவார் முகமையில் இருந்த பாலிதானா சமஸ்தானம் 732 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 21,906 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் துரோல் சமஸ்தானம் குஜராத் மாநிலத்துடன் இணக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

நவநகர் இராச்சியத்தின் இராசபுத்திர குல ஜடேஜா வம்ச மன்னர் ஜாம் ராவல் லகாஜியின் தம்பி ஹர்தோல் என்பவர் 1595-ஆம் ஆண்டில் துரோல் சமஸ்தானத்தை நிறுவினார்.[1]துரோல் சமஸ்தானம், மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்தது. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற துரோல் சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் கத்தியவார் முகமையின் கீழ் இருந்தது. துரோல் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி துரோல் சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் சௌராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.[2][3][4][5] 1 நவம்பர் 1956 அன்று சௌராஷ்டிரா மாநிலம் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்ப்பட்டது. சௌராஷ்டிரா மாநிலப் பகுதிகள் 1 மே 1960 அன்று புதிதாக நிறுவப்பட்ட குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Imperial Gazetteer2 of India, Volume 11, page 335 – Imperial Gazetteer of India – Digital South Asia Library". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 17 August 2019.
  2. [http://www.indiankanoon.org/doc/1311425/ The Rulers of the Kathiawar States, including Wadhwan State, entered into a Covenant for the formation of the United States of Kathiawar on the
  3. The covenant, entered into by the rulers of Kathiawar States for the formation of the United States of Kathiawar.
  4. Political and administrative integration of princely states By S. N. Sadasivan. பக். 26, 27. http://books.google.co.in/books?id=kWptYbzpXE8C&pg=PA26&lpg=PA26&dq=UNITED+STATE+OF+KATHIAWAR&source=bl&ots=dErpdGrhEq&sig=mIHUfl5Q5GK4iLjZ84NxtL0oPq0&hl=en&ei=mjRoTtDxEIjYrQfv853mCg&sa=X&oi=book_result&ct=result&resnum=7&ved=0CEUQ6AEwBg#v=onepage&q=UNITED%20STATE%20OF%20KATHIAWAR&f=false. 
  5. [1]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துரோல்_சமஸ்தானம்&oldid=3377937" இலிருந்து மீள்விக்கப்பட்டது