உதய்பூர் இராச்சியம்

ஆள்கூறுகள்: 24°35′N 73°41′E / 24.58°N 73.68°E / 24.58; 73.68
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதய்பூர் அரசு
மேவார் இராச்சியம்
உதய்பூர் இராச்சியம்उदयपुर रियासत
சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
730–1949
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of மேவார் இராச்சியம்
Location of மேவார் இராச்சியம்
பிரித்தானிய இந்தியாவில் உதய்பூர் இராச்சியத்தின் வரைபடம்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 730
 •  இந்திய விடுதலை 1949
பரப்பு
 •  1941 33,517 km2 (12,941 sq mi)
Population
 •  1941 65,00,000 
மக்கள்தொகை அடர்த்தி 193.9 /km2  (502.3 /sq mi)
தற்காலத்தில் அங்கம் இராஜஸ்தான், இந்தியா
"Udaipur State (also called Mewar): History". The Imperial Gazetteer of India. 1909. pp. v. 24, p. 87.

உதய்பூர் இராச்சியம் அலலது மேவார் இராச்சியம் (Udaipur State or Mewar Kingdom), தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த மேவார் பிரதேசத்தை கி பி 730 முதல் சித்தோர்கார் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்டது. பின்னர் உதய்பூர் நகரத்தை புதிய தலைநகராகக் கொண்டு இயங்கியது. உதய்பூர் இராச்சிய மன்னர்கள் தங்களின் முதல் தலைநகரமான நக்டாவில் சகஸ்ரபாகு கோயில்கள் கட்டினர்.

உதய்பூர் இராச்சியம் 18-19-ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானிய இந்திய அரசின் கீழ் இயங்கிய சமஸ்தானம் ஆகும். இந்திய விடுதலைக்குப் பின்னர் 6 ஏப்ரல் 1949-இல் மேவார் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. [1]

மேவார் இராச்சியத்தை இராசபுத்திர குல கலோத் மற்றும் சிசோதிய வம்சத்தினர் கிபி 730 முதல் 1949 முடிய 1,400 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டனர்.

வரலாறு[தொகு]

மகாராணாக்கள்

மராத்தியப் பேரரசிற்கு எதிராக நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் உதய்பூர் இராச்சியப் படைகள், பிரித்தானியக் கம்பெனி படைகளுக்கு ஆதரவாக போரிட்டனர். பின்னர் உதய்பூர் இராச்சியம் 31 சனவரி 1818 முதல் துணைப்படைத் திட்டத்தின் கீழ் ஆங்கிலேயருக்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக செயல்பட்டது. பிரித்தானிய அதிகார வர்க்கம், மேவார் இராச்சிய மன்னர்களுக்கு, 19 பீரங்கி குண்டுகள் முழங்கி மரியாதை செய்தது.[4]உதய்பூர் இராச்சியத்தின் இறுதி மன்னர் பூபால சிங், உதய்பூர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் 7 ஏப்ரல் 1949 அன்று கையொப்பமிட்டார். பின்னர் உதய்பூர் இராச்சியம் இந்தியாவுடன் இணைந்தது. [5]

மேவாரின் கலோத் வம்சம்[தொகு]

கோசலத்திலிருந்து கி பி இரண்டாம் நூற்றாண்டில் சௌராட்டிர நாட்டில் குடிபெயர்ந்த கனக்சென் என்ற சத்திரியரின் வழித்தோன்றல்களான கலோத்திய வம்சத்தினர் தங்களை வல்லபியின் ஆட்சியாளர்கள் என அழைத்துக் கொண்டனர். பின்னர் இராஜஸ்தானின் இதர் பகுதியைக் கைப்பற்றி ஆண்டனர்.

கி பி 7-ஆம் நூற்றாண்டில் கலோத்திய வம்ச மன்னர்கள், கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு, இராசபுத்திர குல சௌகான்களுடன் இணைந்து இசுலாமிய படையெடுப்புகளை எதிர்த்துப் போரிட்டனர்.

கி பி 12-ஆம் நூற்றாண்டில் இதர் நகரை விட்டு அகன்ற கலோத்திய வம்ச மன்னர் முதலாம் கரன்சிங்கின் மூத்த மகன் துங்கர்பூரிலும், இளையமகன் சிசோதியாவிலும் தங்கள் ஆட்சியை நிறுவினர். [6]

இதரின் கலோத்திய ஆட்சியாளர்கள்[தொகு]

பெயர்[6] ஆட்சி துவக்கம் ஆட்சி முடிவு
1 கிரகாத்தியா 566 586
2 போஜ கலோ 586 606
3 முதலாம் மகேந்திரன் 606 626
  • இவ்வம்சத்தினர் நக்டா எனுமிடத்தில் புதிய தலைநகரை நிறுவினர்.

நக்டாவின் கலோத்திய ஆட்சியாளர்கள்[தொகு]

பெயர் [6] ஆட்சி துவக்கம் ஆட்சி முடிவு
1 நாகாத்தியன் 626 646
2 சிலாதித்தியன் 646 661
3 அபராஜிதன் 661 688
4 இரண்டாம் மகேந்திரன் 688 734
  • "மோரி வம்ச மால்வாவின் இறுதி மன்னர், மூன் சிங் மோரி இரண்டாம் மகேந்திரனை கொன்றார். மோரியின் மைத்துனன் மேவாரைக் கைப்பற்றினார்.
    • இரண்டாம் மகேந்திரனின் மகன் "பப்பா ராவல் என்ற கல்போஜன் தனது கூட்டாளிகளுடன் சித்தோர்காரில் புதிய நகரை நிறுவி ஆண்டான். [6]

சித்தோர்காரின் கலோத் ஆட்சியாளர்கள்[தொகு]

பெயர்[6] ஆட்சி துவக்கம் ஆட்சி முடிவு
1 பப்பா ராவல் 734 753
2 முதலாம் குமான் 753 773
3 மத்தாட் 773 793
4 முதலாம் பாத்திரிபட் 793 813
5 கலோத்தின் சிங்கன் 813 828
6 இரண்டாம் குமான் 828 853
7 மகாயுகன் 853 878
8 மூன்றாம் குமான் 878 942
9 இரண்டாம் பாத்திரிபட் 942 943
10 அல்லாத் சிங் - பரமாரப் பேரரசின் இரண்டாம் சியாகா, சித்தோர்கார் நகரத்தை கைப்பற்றியதால், கலோத்தியர்கள் அஹார் பகுதியில் தங்கள் ஆட்சியை நிறுவினர். 951 953

அஹாரின் கலோத்திய ஆட்சியாளர்கள்[தொகு]

பெயர்[6] ஆட்சி துவக்கம் ஆட்சி முடிவு
1 நரவாகனன் 971 973
2 சல்லிவாகனன் 973 977
3 சக்தி குமார் 977 993
4 அம்பா பிரசாத் 993 1007
5 சுசி வர்மா 1007 1021
6 நரவர்மன் 1021 1035
7 கீர்த்திவர்மன் 1035 1051
8 யோகராஜன் 1051 1068
9 வைரதன் 1068 1088
10 முதலாம் ஹன்ஸ்பால் 1088 1103
11 பயர் சிங் 1103 1107
12 விஜய் சிங் 1107 1127
13 முதலாம் அரி சிங் 1127 1138
14 Chaudh Singh 1138 1148
15 விக்கிரம் சிங் 1148 1158
16 முதலாம் கரன் சிங் 1158 1168
17 சேம் சிங் 1168 1172
  • இசுலாமிய படையெடுப்புகளால் சேம் சிங் வலுக்கட்டாயமாக தலைநகரை துங்கர்பூருக்கு மாற்றினார்.[6]

துங்கர்பூரின் கலோத்திய ஆட்சியாளர்கள்[தொகு]

பெயர் [6] ஆட்சி துவக்கம் ஆட்சி முடிவு
1 சமந்து சிங் 1172 1179
2 குமார் சிங் 1179 1191
3 மந்தன் சிங் - பிருத்திவிராச் சௌகானுடன் இணைந்து கோரி முகமதுவிற்கு எதிராகப் போரிட்டவர். 1191 1211
4 பத்ம சிங் – இவரது வாரிசுகள் நக்டாவில் புதிய அரசை அமைத்தனர். 1211 1213

நக்டாவின் கலோத்திய ஆட்சியாளர்கள்[தொகு]

Name[6] ஆட்சி துவக்கம் ஆட்சி முடிவு
1 ஜெயத்திர சிங் - மால்வாவை தில்லி சுல்தான் சம்சுத்தீன் இல்த்துத்மிசு கைப்பற்றிய பின்னர், ஜெயத்திர சிங் சித்தோர்காரை மீட்டார். 1213 1253

சித்தூரின் கலோத்திய ஆட்சியாளர்கள்[தொகு]

பெயர்[6] ஆட்சி துவக்கம் ஆட்சி முடிவு
1 ஜெயத்திர சிங் 1213 1253
எட்டு ஆண்டுகள் மேவார் ஆட்சியாளர்கள் இல்லாத காலம் 1253 1262
2 தேஜ் சிங் 1262 1273
3 சமர் சிங் 1273 1302
4 முதலாம் ராவல் இரத்தன் சிங் – தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி சித்தோர்கார் கோட்டை மற்றும் மேவாரைக் கைப்பற்றல். மற்றும் 1302 1303
  • "ஒழுங்கான அரசனில்லாக் காலம் - அலாவுதீன் கில்ஜியின் கீழ் சஞ்சோர் ஆட்சியாளர்கள் சித்தூரை ஆண்டனர். (1303–1326)"
    • "கலோத்திய வம்சத்தின் ரகூப் என்பவர் நிறுவிய சிசோதியா வம்சத்தினர் மேவாரை ஆண்டனர்."[6]

மேவாரின் சிசோதியா வம்ச ஆட்சியாளர்கள்[தொகு]

பெயர்[6] ஆட்சி துவக்கம் ஆட்சி முடிவு
1 மகாராணா முதலாம் ஹமீர் சிங் - மேவாரின் மகாராணா பட்டத்தை முதலில் பெற்றவர் 1326 1364
2 மகாராணா கேத்தா - அஜ்மீர் மற்றும் மண்டல்கர் பகுதிகளை கைப்பற்றினார். 1364 1382
3 மகாராணா லக்கா - மேவாரின் தில்லிப் பகுதிகளை போரில் திரும்பப் பெற்றார். 1382 1421
4 மகாராணா மொக்கல் – 24 வயதில் கொலை செய்யப்பட்டார். இவரது மூத்த சகோதரன் சுந்தன் மேவாரின் மன்னரானார். 1421 1433
5 மகாராணா கும்பா 1433 1468
6 மகாராணா முதலாம் உதய் சிங் 1468 1473
7 மகாராணா இராய் மால் 1473 1509
8 பாபரிடம்]] கண்வாப் போரில் தோற்றார். பின்னர் மீண்டும் பாபரை வென்று மேவாரை மீட்டார். 1509 1528
9 மகாராணா இரண்டாம் இரத்தன் சிங் 1528 1531
10 மகாராணா விக்கிரமாதித்தியா சிங் 1531 1537
11 மகாராணா வன்வீர் சிங் 1537 1540
12 மகாராணா இரண்டாம் உதய்சிங் – சித்தோர்கார் கோட்டையை 25 பிப்ரவரி 1568-இல் போரில் அக்பரிடம் இழந்தார். எனவே உதய்பூரை புதிய தலைநகராகக் கொண்டார். 1540 1568

உதய்பூர் சிசோதியா இராசபுத்திர ஆட்சியாளர்கள்[தொகு]

பெயர்[6] ஆட்சி துவக்கம் ஆட்சி முடிவு
1 மகாராணா இரண்டாம் உதய்சிங் 1568 1572
2 மகாராணா பிரதாப் 1572 1597
3 மகாராணா முதலாம் அமர் சிங் 1597 1620
4 மகாராணா இரண்டாம் கரண்சிங் 1620 1628
5 மகாராணா முதலாம் ஜெகத் சிங் 1628 1652
6 மகாராணா முதலாம் இராஜ் சிங் 1652 1680
7 மகாராணா ஜெய் சிங் 1680 1698
8 மகாரானா இரண்டாம் அமர் சிங் 1698 1710
9 மகாராணா இரண்டாம் சங்காராம் சிங் 1710 1734
10 மகாராணா இரண்டாம் ஜெகத் சிங் 1734 1751
11 மகாராணா இரண்டாம் பிரதாப் சிங் 1751 1754
12 மகாராணா இரண்டாம் இராஜ் சிங் 1754 1761
13 மகாராணா இரண்டாம் அரி சிங் 1761 1773
14 மகாராணா இரண்டாம் ஹமீர் சிங் 1773 1778
15 மகாராணா பீம் சிங் 1778 1828
16 மகாராணா ஜவான் சிங் 1828 1838
17 1838 1842
18 மகாராணா சொரூப் சிங் 1842 1861
19 மகாராணா சாம்பு சிங் 1861 1874
20 மகாராணா சஜ்ஜன் சிங் 1874 1884
21 மகாராணா பதே சிங் 1884 1930
22 மகாராணா பூபால் சிங் 1930 1956

இதனையும் காண்க[தொகு]

மேலும் படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Princely States of India
  2. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 116–117. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4. 
  3. John Merci, Kim Smith; James Leuck (1922). "Muslim conquest and the Rajputs". The Medieval History of India pg 67-115
  4. Udaipur (Mewar) Princely State (19 gun salute) பரணிடப்பட்டது 2016-12-27 at the வந்தவழி இயந்திரம்.
  5. Princely States of India
  6. 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 6.10 6.11 6.12 The Rajputs of Rajputana: a glimpse of medieval Rajasthan by M. S. Naravane பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7648-118-1

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதய்பூர்_இராச்சியம்&oldid=3618700" இலிருந்து மீள்விக்கப்பட்டது