பூந்தி சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bundi State
बूँदी रियासत
1342–1949
கொடி of பூந்தி சமஸ்தானம்
கொடி
சின்னம் of பூந்தி சமஸ்தானம்
சின்னம்
குறிக்கோள்: "தர்மம் வெல்லும்;அதர்மம் தோற்கும்"
Let religion prevail, iniquity perish
இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் (இளஞ்சிவப்பு நிறத்தில்) புந்தி சமஸ்தானத்தின் அமைவிடம்
இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் (இளஞ்சிவப்பு நிறத்தில்) புந்தி சமஸ்தானத்தின் அமைவிடம்
சமயம்
இந்து சமயம்
வரலாறு 
• தொடக்கம்
1342
1949
பரப்பு
• மொத்தம்
5,750 km2 (2,220 sq mi)
மக்கள் தொகை
• 1931
216,722
பின்னையது
}
Republic of India
தற்போதைய பகுதிகள்பூந்தி மாவட்டம், இராஜஸ்தான், இந்தியா
 இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Bundi". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
பூந்தி இராச்சியத்தின் கார் அரண்மனை
பூந்தி இராச்சியத்தின் கார் அரண்மனையின் சித்திரசாலை
யாணை மீது பயணிக்கும் பூந்தி மகாராஜா பாவோ சிங், 1675
பூந்தி மகாராஜா உமேத் சிங்

பூந்தி சமஸ்தானம் பூந்தி இராச்சியம் (Bundi State) இந்தியாவின் கிழக்கில் உள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் பழைய பூந்தி மாவட்டத்தின் நிலப்பரப்பளவைக் கொண்டது. இந்த இராச்சியத்தை ஹட இராசபுத்திரர் குலம் ஆட்சி செய்தது.[1] இதன் தலைநகரமாக பூந்தி நகரம் இருந்தது. பூந்தி இராச்சியத்தின் பரப்ப்ப்ளவு 5,750 சதுர மைல் ஆகும். இதன் மக்கள் தொகை 2,16,722 ஆகும். 1947=இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் பூந்தி இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் பான்ஸ்வாரா சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கப்பட்டது

வரலாறு[தொகு]

சுக் நிவாஸ் அரண்மனை, ஆண்டு 1900

மத்தியகாலம்[தொகு]

கிபி 1242-இல் பூந்தி பகுதியை ஜெய்த்திய மீனா இன குலத்தினர் ஆண்டு வந்தனர். இதனை 1342-இல் இராவ் தேவன் என்ற சௌகான் இராஜபுத்திர குலத் தலைவர் கைப்பற்றி ஆண்டார். 1632-இல் ராவ் இராஜா சத்தர் சல் பூந்தி இராச்சிய மன்னரானார். இவர் அவுரங்கசீப் படைகளுடன் வீரமாக போரிட்டு இறந்தார்.[2][3] சத்தர் சல் சிங்கின் மகன் இராவ் பாவோ சிங் (1658–1678) பூந்தி இராச்சிய மன்னரானார். 1707-ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசர் முதலாம் பகதூர் ஷா, பூந்தி இராச்சிய மன்னர் பூத் சிங்கிற்கு மகாராஜா எனும் பட்டம் வழங்கினார்.[4]

பிரித்தானிய இந்தியா[தொகு]

1804-இல் மராத்தியப் பேரரசின் கீழ் இருந்த ஓல்கர்களுக்கு எதிராக படையெடுத்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஆதரவாக பூந்தி மன்னர் இராஜா பிஷண் சிங் (1773–1821) படையுதவி செய்தார். 1895-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியா கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பான்ஸ்வாரா இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [5][6][7] இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும்.

இந்தியாவுடன் இணைத்தல்[தொகு]

1947=இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் பூந்தி இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் பான்ஸ்வாரா சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[8]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூந்தி_சமஸ்தானம்&oldid=3291848" இலிருந்து மீள்விக்கப்பட்டது