யாங்சே சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Warning: Value not specified for "common_name"
யாங்சே சமஸ்தானம்
ယွင်ႈႁူၺ်ႈ
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா

1359–1959
Location of
Location of
சான் மாகாணத்தின் பழுப்பு நிறத்தில் யாங்சே சமஸ்தானம்
வரலாற்றுக் காலம் குடிமைப்பட்ட கால மியான்மர்
 •  யாங்சே இராச்சியம் 1359
 •  இறுதியாக பர்மாவின் சாவ்பாவுடன் இணைத்தல் 1959
Population
 •  1901 95,339 
யாங்சே சமஸ்தான இளவரசி சாவ் நாங் ஹெரன் காம், ஆண்டு 1947
பவுங் தா ஊ பகோடா திருவிழா

யாங்சே சமஸ்தானம் (Yawnghwe), தற்கால பர்மா எனும் மியான்மர் நாட்டின் விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் நியாங் சவே நகரம் ஆகும்.[1] இது தற்கால மியான்மர் நாட்டின் சான் மாகாணத்தின் தெற்கில் யாங்சே இராச்சியப் பகுதிகளை கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, யாங்சே சமஸ்தானம் 2241 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 95,339 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

வரலாறு[தொகு]

1359-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட யாங்சே இராச்சியம், நவம்பர் 1885-ஆம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாம் ஆங்கிலேய-பர்மியப் போரின் முடிவில் பர்மா முழுவதும் பிரித்தானிய இந்தியாவின் கீழ் வந்தது. 1887-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற யாங்சே இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். யாங்சே இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1948-ஆம் ஆண்டில் பர்மாவின் விடுதலைக்குப் பின்னர் யாங்சே இராச்சியம், 1959-ஆம் ஆண்டில் பர்மாவின் சாவ்பா மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "WHKMLA : History of the Shan States". 18 May 2010. பார்க்கப்பட்ட நாள் 21 December 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாங்சே_சமஸ்தானம்&oldid=3886232" இலிருந்து மீள்விக்கப்பட்டது