மூன்றாம் ஆங்கிலேய-பர்மியப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் ஆங்கிலேய-பர்மியப் போர்

ஆங்கிலேயப் படைகளிடம் பர்மியப் படைகள் அவா எனுமிடத்தில் 27 நவம்பர் 1885-இல் சரண் அடைதல்
நாள் 7 நவம்பர் 1885 – 29 நவம்பர் 1885
இடம் பர்மா
ஆங்கிலேயர்களுக்கு வெற்றி
  • மேல் பர்மாவில் கொன்பவுங் வம்சத்தின் ஆட்சி முடிவுற்றது.
  • பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் பர்மா இணைக்கப்பட்டது.
  • பிரித்தானியர்களுக்கு எதிரான பர்மியர்களின் இயக்கம் 1885 முதல் 1895 தொடர்ந்தது.
பிரிவினர்
பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் பிரித்தானியப் பேரரசு பர்மியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஹாரி பிரெண்டர்கஸ்ட் திபாவ் மின்

மூன்றாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (Third Anglo-Burmese War, also known as the Third Burma War), ஆங்கிலேய-பர்மியப் போர்களில் இது மூன்றாவதும், இறுதியும் ஆகும். இப்போர் 7 - 29 நவம்பர் 1885 வரை நடைபெற்றது.

ஏற்கனவே இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போரில் கீழ் பர்மாவை ஆங்கிலேயர்களிடம் இழந்திருந்த, பர்மியப் பேரரசு, இப்போரின் முடிவில் மேல் பர்மாவையும் பிரித்தானிய இந்தியாவிடம் வீழ்ந்ததால், முழு பர்மாவும் பிரித்தானிய இந்தியாவின் கீழ் வந்தது. [1] [2] இதனால் பர்மா, பிரித்தானிய இந்தியாவின் ஒரு மாகாணமாக விளங்கியது. 1937-இல் பர்மா பிரித்தானியாவின் தனி காலனி நாடானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1948-இல் பர்மாவிற்கு விடுதலை வழங்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Third Anglo-Burmese War and Annexation of Burma
  2. Annexation of Burma with Britania India

வெளி இணைப்புகள்[தொகு]