பகவல்பூர் இராச்சியம்

ஆள்கூறுகள்: 28°50′N 71°43′E / 28.833°N 71.717°E / 28.833; 71.717
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகவல்பூர் இராச்சியம்
பிரித்தானிய இந்தியாவின் கீழ் சுதேச சமஸ்தானம் 1833–1947
பாகிஸ்தானின் சுதேச சமஸ்தானம் 1947–55

1609–1955
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of பகவல்பூர்
Location of பகவல்பூர்
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவில் பகவல்பூர் இராச்சியம்
தலைநகரம் பகவல்பூர்
அரசு முடியாட்சி (1690–1955)
நவாப் நவாப் முகமது பகவல் கான் அப்பாசி (முதல்)
 •  1907 to 1966 சாதிக் முகமது கான் அப்பாசி V (இறுதி)
பிரதம அமைச்சர்
 •  1942–1947 சர் ரிச்சர்டு மார்ஷ் குரோப்டன்
 •  1948–1952 சர் ஜான் டிரிங்க்
 •  1952 - 14 அக்டோபர் 1955 ஏ. ஆர். கான்
வரலாற்றுக் காலம் முகலாயப் பேரரசு (1802–1858), பிரித்தானிய இந்தியா (22 பிப்ரவரி 1858-1947), பாகிஸ்தானின் சுதேச சமஸ்தானம் (1947-1955), மேற்கு பாகிஸ்தானின் பகுதி (1955-1970) பஞ்சாப் (1970-தற்போது வரை), இராச்சியத்தின் பகுதிகள் பகவல்பூர் மாவட்டம் மற்றும் ரகீம் யார் கான் மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.
 •  நிறுவப்பட்டது 1609
 •  பாகிஸ்தானில் இணைக்கப்பட்டது 14 அக்டோபர் 1955
தற்காலத்தில் அங்கம் பகவல்பூர் மாவட்டம் மற்றும் ரகீம் யார்கான் மாவட்டம், பஞ்சாப் மாகாணம், பாக்கித்தான்
பகவல்பூர்
சுதேச சமஸ்தானம் பாகித்தான்
1609–14 அக்டோபர் 1955

Flag of பகவல்பூர் இராச்சியம்

கொடி

Location of பகவல்பூர் இராச்சியம்
Location of பகவல்பூர் இராச்சியம்
பாகிஸ்தான் வரைபடத்தில் பகவல்பூர் இராச்சியத்தின் அமைவிடம்
தலைநகரம் பகவல்பூர்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1609
 •  Disestablished 14 அக்டோபர் 1955
பரப்பு 45,911 km2 (17,726 sq mi)
பகவல்பூர் நவாப் முகமது கான் V (1883–1907).
புகழ்பெற்ற நவாப் சாதிக் முகமது கான் V

பகவல்பூர் இராச்சியம் (Bahawalpur state (உருது: بہاولپُور) இந்தியப் பிரிவினைக்கு முன்னர் வரை பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் பகவல்பூர் மாவட்டம் மற்றும் ரகீம் யார் கான் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் பகவல்பூர் நகரம் ஆகும். 1941-ஆம் ஆண்டில் பகவல்பூர் இராச்சியம் 45,911 சதுர கிலோ மீட்டர் (17,494 sq மைல்) பரப்பளவும், மக்கள் தொகை 13,41,209 ஆகவும் இருந்தது. பகவல்பூர் இராச்சியத்தை 1609-ஆம் ஆண்டில் நிறுவியவர் நவாப் பகவல் கான் அப்பாசி ஆவார்.

வரலாறு[தொகு]

முகலாயப் பேரரசு மற்றும் துராணிப் பேரரசில் சிற்றரசாக இருந்த பகவல்பூர் இராச்சியம், 1857 சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் 22 பிப்ரவரி 1858 அன்று பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற பகவல்பூர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். பகவல்பூர் இராச்சியம் பஞ்சாப் மாகாண ஆளுநரின் கீழ் செயல்பட்டது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள், பகவல்பூர் நவாப்புக்கு 19 துப்பாக்கி குண்டுகள் சுட்டு மரியாதை வழங்கினர்.[1]

1947-இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், 14 அக்டோபர் 1955 அன்று பகவல்பூர் இராச்சியம், பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

ஆடசியாளர்கள்[தொகு]

பகவல்பூர் இராச்சிய அரண்மனை
ஆட்சிக் காலம் நவாப்
1723 - 11 ஏப்ரல் 1746 சாதிக் I
11 ஏப்ரல் 1746 – 12 சூன் 1750 பகவல் I
12 சூன் 1750 – 4 சூன் 1772 முபாரக் II
4 சூன் 1772 – 13 ஆகஸ்டு 1809 பகவல் II
13 ஆகஸ்டு 1809 – 17 ஏப்ரல் 1826 சாதிக் II
17 ஏப்ரல் 1826 – 19 அக்டோபர் 1852 பகவல் III
19 அக்டோபர் 1852 – 20 பிப்ரவரி 1853 சாதிக் III
20 பிப்ரவரி 1853 – 3 அக்டோபர் 1858 பாத் முகமது கான்
3 அக்டோபர் 1858 – 25 மார்ச் 1866 பகவல் IV
25 மார்ச் 1866 – 14 பிப்ரவரி 1899 சாதிக் முகமது கான் IV
14 பிப்ரவரி 1899 – 15 பிப்ரவரி 1907 முகமது பகவல் கான் V
15 பிப்ரவரி 1907 – 14 அக்டோபர் 1955 சாதிக் முகமது கான் V
14 அக்டோபர் 1955 பகவல்பூர் இராச்சியம் கலைக்கப்பட்டது.
பதவிக் காலம் பிரதம அமைச்சர்
1942 – 1947 ரிச்சர்டு மார்ஷ் குரோப்டன்
1948 – 1952 ஜான் டிரிங்க்
1952 – 14 அக்டோபர் 1955 ஏ. ஆர். கான்
14 அக்டோபர் 1955 பகவல்பூர் இராச்சியம் கலைகக்ப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Nazeer 'Ali Shah, The History of the Bahawalpur State. Lahore: Maktaba Jadeed, 1959.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவல்பூர்_இராச்சியம்&oldid=3381432" இலிருந்து மீள்விக்கப்பட்டது