சிவப்பு தாழ்வாரம்
சிவப்பு தாழ்வாரம் (Red Corridor) என்பது இந்தியாவில் குறிப்பாக பிகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கும் பெரிதும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் பகுதிகளை சிவப்பு தாழ்வாரம் எனப்படுகிறது.[1][2][3]
பழங்குடி மக்கள் அதிகம் வாழும் சத்தீஸ்கர் மாநிலத்திலும், சுரங்கத் தொழிலாளர்கள் அதிகம் கொண்ட ஜார்கண்ட், மாநிலத்திலும், வேளாண் கூலித் தொழிலாளர்கள் அதிகம் கொண்ட தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஒரிசா போன்ற மாநிலங்களில் அரசுக்கு எதிரான நக்சலைட்டு - மாவோயிஸ்டு போராளிகளின் நடவடிக்கைகள் அதிகம் உள்ளது.
இப்பகுதிகளில் நிலவும் ஏழ்மை, கல்லாமை, அறியாமை, சுரண்டல், தீண்டாமை போன்ற காரணங்களால் அப்பாவி மக்கள் நக்சலைட்டு - மாவோயிஸ்டு போராளிகளால் எளிதில் வயப்படுகின்றனர்.[2][3][4]
அரசுக்கு எதிரான அனைத்து வகையான நக்சலைட்டு அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகள் என இந்திய அரசின் சட்டங்கள் விளக்குகிறது.[5][6][7][8] சூலை 2011 ஆண்டில் வெளியிட்ட இந்திய அரசின் அறிவிக்கையின் படி, இந்தியாவின் 83 மாவட்டங்கள் சிவப்பு தாழ்வாரமாக, அதாவது நக்சலைட்டு மற்றும் மாவோயிஸ்டு போராளிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.[9][10]
4 ஏப்ரல் 2021 அன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டம், பிஜப்பூர் மாவட்டம் மற்றும் தந்தேவாடா மாவட்டங்களின் காட்டுப் பகுதிகளில் பாதுகாப்புப் படைப்படைகளின் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மாவோயிஸ்டு தீவிரவாதிகளை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபட்ட போது, [சுக்மா மாவட்டம்|சுக்மா மாவட்டத்தின்]] காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கு நடைபெற்ற சன்டையில் 22 பாதுகாப்புப் படைவீரர்களும், 9 மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.[11][12]இதில் ஒரு பாதுகாப்புப் படைவீரரை மாவோயிஸ்டுகள் பிடித்துக் கொண்டனர். 8 ஏப்ரல் 2021 அன்று மாவோயிஸ்டுகள் பிடித்து வைத்திருந்த படைவீரரை திரும்ப ஒப்படைந்தது. [13]
பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்[தொகு]
நக்சலைட்டு- மாவோயிஸ்ட் போராளிகளால் பாதிக்கப்பட்டுள்ள எழுபத்து எட்டு இந்திய மாவட்டங்களின் விவரம்;[9][10]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Agarwal, Ajay. "Revelations from the red corridor". பார்த்த நாள் 27 April 2012.
- ↑ 2.0 2.1 "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium (2008-06-25). பார்த்த நாள் 2008-10-17.
- ↑ 3.0 3.1 "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post (2008-06-09). பார்த்த நாள் 2008-10-17.
- ↑ "Rising Maoists Insurgency in India". Global Politician (2007-05-13). பார்த்த நாள் 2008-10-17.
- ↑ ::Ministry of Home Affairs::
- ↑ "Maoist Communist Centre - Left Wing Extremism, India, South Asia Terrorism Portal". பார்த்த நாள் 1 April 2015.
- ↑ "People's War Group - Left Wing Extremism, India, South Asia Terrorism Portal". பார்த்த நாள் 1 April 2015.
- ↑ Sukanya Banerjee, "Mercury Rising: India’s Looming Red Corridor", Center for Strategic and International Studies, 2008.
- ↑ 9.0 9.1 "Centre to declare more districts Naxal-hit". பார்த்த நாள் 1 April 2015.
- ↑ 10.0 10.1 "The Union Government of India to Bring 20 More Districts in the Naxal-hit states". பார்த்த நாள் 1 April 2015.
- ↑ சத்தீஸ்கரை அதிர வைத்த என்கவுண்டர்... வீரர்கள் பலி 22 ஆக உயர்வு
- ↑ சத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: இந்திய படையினர் திட்டமிட்டு கொல்லப்பட்டது எப்படி?
- ↑ சத்தீஸ்கர் தாக்குதலில் காணாமல் போன வீரரை விடுவித்த மாவோயிஸ்டுகள்
- ↑ "83 districts under the Security Related Expenditure Scheme". IntelliBriefs (2009-12-11). பார்த்த நாள் 2015-09-17.
- ↑ Sukma Naxal Attack: 25 CRPF Men Killed By Maoists In Chhattisgarh