நவம்பர் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28: | வரிசை 28: | ||
*[[1910]] – [[கொத்தமங்கலம் சுப்பு]], தமிழக எழுத்தாளர், நடிகர் (இ. [[1974]]) |
*[[1910]] – [[கொத்தமங்கலம் சுப்பு]], தமிழக எழுத்தாளர், நடிகர் (இ. [[1974]]) |
||
*[[1910]] – [[சாண்டில்யன்]], தமிழக எழுத்தாளர் (இ. [[1987]]) |
*[[1910]] – [[சாண்டில்யன்]], தமிழக எழுத்தாளர் (இ. [[1987]]) |
||
*[[1916]] – [[அ. ச. ஞானசம்பந்தன்]], தமிழறிஞர், இலக்கிய விமர்சகர் (இ. [[2002]]) |
|||
*[[1917]] – [[சோ. தம்பிராஜா]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி |
*[[1917]] – [[சோ. தம்பிராஜா]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி |
||
*[[1918]] – [[சுந்தர் லால் குரானா]], இந்திய அரசியல்வாதி |
*[[1918]] – [[சுந்தர் லால் குரானா]], இந்திய அரசியல்வாதி |
07:34, 13 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
<< | நவம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
நவம்பர் 10 (November 10) கிரிகோரியன் ஆண்டின் 314 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 315 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1444 - ஹங்கேரி, போலந்து ஆகியவற்றின் அரசன் மூன்றாம் விளாடிஸ்லாஸ் பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் ஒட்டோமான் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
- 1520 - டென்மார்க் மன்னன் இரண்டாம் கிறிஸ்டியான் சுவீடனை முற்றுகையிட்டபோது ஸ்டொக்ஹோம் நகரில் பலரைக் கொன்றான்.
- 1580 - மூன்று நாள் முற்றுகையை அடுத்து, ஆங்கிலேய இராணுவம் கிட்டத்தட்ட 600 திருத்தந்தை நாடுகளின் இராணுவத்தினரையும், பொதுமக்களையும் அயர்லாந்தில் தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்தனர்.
- 1674 - ஆங்கிலேய-டச்சு போர்: வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாட்டின் படி புதிய நெதர்லாந்தை நெதர்லாந்து இங்கிலாந்திடம் ஒப்படைத்தது.
- 1847 - ஸ்டீவன் விட்னி என்ற பயணிகள் கப்பல் அயர்லாந்தின் தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
- 1871 - காணாமல் போனதாகக் கருதப்பட்ட ஸ்கொட்லாந்தின் நாடுகாண் பயணியும் மிஷனரியுமான டேவிட் லிவிங்ஸ்டனைத் தான்சானியாவில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான ஹென்றி மோர்ட்டன் ஸ்டான்லி அறிவித்தார்.
- 1887 - ஹே சந்தைக் கலவரத்தின் போது மரண தண்டனை விதிக்கப்பட்ட லூயிஸ் லிங் என்ற தொழிலாளர் தலைவர் லண்டனில் டைனமைட் வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
- 1918 - யாழ்ப்பாணம், சுன்னாகம், பருத்தித்துறை ஆகிய நகரங்களில் இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல கடைகள் சூறையாடப்பட்டன.
- 1928 - ஹிரொஹீட்டோ ஜப்பானின் 124வது மன்னரானார்.
- 1970 - சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு "லூனாகோட்" எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.
- 1971 - கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் புனோம் பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று பல விமானங்களை அழித்தனர்.
- 1972 - பேர்மிங்ஹாமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு ஹவானாவில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.
- 1993 - தவளை நடவடிக்கை, 1993: யாழ்ப்பாணத்தில் பூநகரி, நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1995 - நைஜீரியாவில் சுற்றுச் சூழல் ஆதரவாளர் கென் சரோ-வீவா என்பவரும் அவரது 8 சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.
- 1999 - பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
- 2006 - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- 2008 - செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்சு விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.
பிறப்புகள்
- 1483 – மார்ட்டின் லூதர், கிறித்தவச் சீர்த்திருத்த இயக்கத் தலைவர், செர்மானிய மதகுரு (இ. 1546)
- 1697 – வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (இ. 1764)
- 1759 – பிரெடிரிக் சில்லர், செருமானியக் கவிஞர் (இ. 1805)
- 1905 – லூயி ஹெரால்டு கிரே, பிரித்தானிய இயற்பிலாளர் (இ. 1965)
- 1910 – கொத்தமங்கலம் சுப்பு, தமிழக எழுத்தாளர், நடிகர் (இ. 1974)
- 1910 – சாண்டில்யன், தமிழக எழுத்தாளர் (இ. 1987)
- 1916 – அ. ச. ஞானசம்பந்தன், தமிழறிஞர், இலக்கிய விமர்சகர் (இ. 2002)
- 1917 – சோ. தம்பிராஜா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- 1918 – சுந்தர் லால் குரானா, இந்திய அரசியல்வாதி
- 1919 – மிக்கைல் கலாசுனிக்கோவ், ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்த உருசியர் (இ. 2013)
- 1934 – அ. துரைராஜா, இலங்கைக் கல்வியாளர், பொறியியலாளர் (இ. 1994)
- 1934 – கேசரிநாத் திரிபாதி, இந்திய அரசியல்வாதி
- 1953 – எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி (இ. 2014)
- 1957 – டக்ளஸ் தேவானந்தா, இலங்கை அரசியல்வாதி
- 1960 – நீல் கெய்மென், ஆங்கிலேய எழுத்தாளர்
- 1989 – தரோன் எகேர்டன், ஆங்கிலேய நடிகர்
- 1994 – சோயி டொச், அமெரிக்க நடிகை
இறப்புகள்
- 461 – முதலாம் லியோ (திருத்தந்தை) (பி. 400)
- 1549 – மூன்றாம் பவுல் (திருத்தந்தை) (பி. 1468)
- 1891 – ஆர்தர் ராம்போ, பிரான்சியக் கவிஞர் (பி. 1854)
- 1938 – முஸ்தாபா கெமால் அத்தாதுர்க், துருக்கியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1881)
- 1977 – தமிழ்வாணன் தமிழக எழுத்தாளர், இதழாசிரியர். (பி.1926)
- 1982 – லியோனிட் பிரெஷ்னெவ், சோவியத் ஒன்றியத்தின் 4வது அரசுத்தலைவர் (பி. 1906)
- 1995 – கென் சரோ விவா, நைஜீரிய எழுத்தாளர் (பி. 1941)
- 2006 – நடராஜா ரவிராஜ், இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1962)
- 2013 – புஷ்பா தங்கதுரை, தமிழக எழுத்தாளர் (பி. 1931)
- 2014 – எம். எஸ். எஸ். பாண்டியன், சமூக ஆய்வாளர், பேராசிரியர்