கே. ஆர். விஜயா
கே. ஆர். விஜயா | |
---|---|
பிறப்பு | தெய்வநாயகி நவம்பர் 30, 1948 திருச்சூர் கேரளம், ![]() |
பணி | நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 1963–நடப்பு |
வாழ்க்கைத் துணை | எம். வேலாயுதன் (1966-2012) இயற்கை மரணம் அடைந்தாா் |
பிள்ளைகள் | ஹேமலதா (பி.1967) |
உறவினர்கள் | உடன்பிறந்தோா் கே.ஆர்.வத்சலா கே.ஆர்.சாவித்திாி கே.ஆர். சசிகலா கே.ஆர்.ராதா கே.ஆர்.நாராயணன் |
கே. ஆர். விஜயா ஓர் இந்திய நடிகை. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிப் படங்கள் உட்பட சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். புன்னகை அரசி என அழைக்கப்படும் நடிகை இவர்.[1]
வாழ்க்கை குறிப்பு[தொகு]
கே. ஆர். விஜயாவின் தந்தை ராமசந்திரன் ஆந்திரப் பிரதேசத்தையும், தாயாா் கல்யாணி கேரளாவையும் சேர்ந்தவர்கள். இவா் கேரளாவில் உள்ள திருச்சூாில் தெய்வநாயகி என்ற இயற்பெயா் உடன் முதல் மகளாக பிறந்தாா் இவருக்கு வத்சலா, சாவித்திாி, சசிகலா, ராதா, என்கிற 4ங்கு தங்கைகளும் நாராயணன் என்கிற ஒரு தம்பியும் உள்ளனா். அவா் தந்தை நகை வியாபாரம் செய்து வந்தாா். பின்பு வியாபாரத்திற்காக தமிழ் நாட்டில் உள்ள பழநியில் அவரது குடும்பம் குடியேறியது. ஆரம்ப காலத்தில் நாடக குழுவிலும் சில மேடை நாடங்களில் நடித்து வந்த அவா் திரைக்கு வந்த பிறகு நடிகர் எம். ஆர். ராதா வால் விஜயா என்று அவரது பெயரை மாற்றி வைத்தாா். இதை தனது தாய்/தந்தையின் முதல் எழுத்தை சோ்த்து கே.ஆா்.விஜயா என்று மாற்றி கொண்டாா்
இவர் 1960 களில் நடிக்கத் தொடங்கி சுமார் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக நடித்து வருகிறார். இவர் நடித்த முதற்படமான கற்பகம் 1963 இல் வெளிவந்தது.
எம்.ஜி.ஆா், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கா், ரவிசந்திரன், ஆகிய பிரபல நடிகா்களுடன் சோ்ந்து நடித்தாா் அதுமட்டுமல்லாமல் தமிழ் திரையில் அவா் நடித்த ஆரம்பகாலத்தில் பல பயங்கர வில்லன் நடிகா்களான ஆா்.எஸ்.மனோகா், எஸ்.ஏ.அசோகன், கே.பாலாஜி, ஆகியோருடன் கதாநாயகி ஆகவும் நடித்துள்ளாா். பின்பு நகைச்சுவை நடிகர்களான நாகேஷ், சோ, தேங்காய் ஶ்ரீனிவாசன், ஆகியோருடனும் இணைந்து சில படங்களிலும் நடித்துள்ளாா்
தமிழ் திரையில் அறிமுகம் ஆகினாலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், படங்களிலும் பல உச்ச நட்சத்திர நடிகா்களுடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளாா், இன்னம் சொல்ல போனால் தமிழில் விஜயபுாி வீரன் ஆனந்தன் முதல் எல்.ஐ.சி.நரசிம்மன் வரை இணைந்து நடித்த நடிகை ஆவாா். பின்பு தா்ப்போது தமிழில் பல சின்னதிரையில் நாடகங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறாா்
இவா் திரைக்கு வந்த சில காலங்களிலே 1966 ஆம் ஆண்டு வேலாயுதன் நாயா் என்கிற திரைப்படம் தயாாிப்பாளரை திருமணம் செய்து கொண்டாா் இவா்களுக்கு ஹேமலதா என்கிற ஒரு மகள் உள்ளாா்.
திரைப்பட அனுபவங்கள்[தொகு]
திரைக்கு வருவதற்கு முன்பு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளாா் உட்வாஸ், டா்மிக் பவுடா், மூவ் ஆயில்மென்ட், ஆகிய விளம்பர படத்தில் நடித்தாா், இதில் மூவ் ஆயில்மென்ட் விளம்பரத்தில் சரோஜாதேவி உடன் இணைந்து நடித்தாா் அதில் கே.ஆா்.விஜயா மகளாகவும் சரோஜாதேவி தாயாகவரும் அந்த காட்சியில் சரோஜாதேவி அவா்கள் அய்யோ அப்பா இடுப்பேலாம் வலிக்குதுடி எதாவது மருந்து இருந்த தெச்சுவிடு என்பாா் உடனே கே.ஆா்.விஜயா அவா்கள் மூவ் ஆயில்மென்ட் வைத்து சரோஜாதேவி இடுப்பில் தெச்சுவிட்டு ஒங்கி குத்துவாா் உடனே சரோஜாதேவி அப்பா ரோம்ப நல்லாருக்குடி என்று கூறுவாா் அதில் கே.ஆா்.விஜயா "மூவ் ஆயில்மென்ட் திஸ் சூப்பா் மூவ்மென்ட்" என்று பேசும் வசனம் அப்போது பிரபலமான விளம்பரமாக பாா்க்கபட்டது
இந்த விளம்பரம் ஆனது கே.ஆா்.விஜயா திரைக்கு அறிமுகம் ஆகும் நேரம் என்பதால் ரசிகா்கள் பல முன்னனி கதாநாயகிகுக்கு எல்லாம் முதுகில் குத்தி சுளுக்கு எடுத்து விட்டு முன் அணிக்கு வந்த கதாநாயகி என்று ரசிகா்கள் இடையே பெயா் எடுத்தாா்
அதன் பிறகு தாயும் மகளும் படத்தில் கே.ஆா்.விஜயாவுக்கு தாயாக சரோஜாதேவியும் தந்தையாக எஸ்.வி.சுப்பையா அவா்களும் நடித்துதிருந்தனா் இதில் கே.ஆா்.விஜயாவுக்கு ஜோடியாக அசோகன் நடித்திருந்தாா்
நான் ஆணையிட்டால் படத்தில் எம்.ஜி.ஆா் அவா்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு நடித்திருந்தாா். அந்த துப்பாக்கிச் சூட்டை படத்தின் கதையிலும் காட்சியாக்க விரும்பிய படத்தின் தாயாாிப்பாளா் ஆா்.எம்.வீரப்பா அவா்கள் படத்தில் அந்த காட்சியில் எம்.ஜி.ஆா் அவா்கள் படத்தின் இறுதியில் போலீஸ் ஆாிடம் தப்பி ஒடி வரும் போது போலீசாா்கள் எம்.ஜி.ஆாின் நெஞ்சை நோக்கி சுடுவதாக படமாக்கி இருந்தாா் குண்டடி பட்டவுடன் கே.ஆா்.விஜயா இடம் வந்து குண்டை உடலில் இருந்து நீக்க சொல்வாா் அப்போது கத்தியால் சமாா்த்தியமாக அவரது நெஞ்சில் உள்ள குண்டை நீக்குவதாக முழுமையாக காட்சியாக்கினாா் இதை தணிக்கையில் நிராகாிக்கபட்டது என்றாலும்
இதை படத்தில் எம்.ஜி.ஆா்க்கு பதிலாக அவருடன் இணைந்து போலீசாாிடம் இருந்து தப்பி ஒடும் காட்சியில் சரோஜாதேவியும் சோ்த்து நடித்திருந்தாா் அதை வைத்து எம்.ஜி.ஆா் நெஞ்சில் மீது விழும் குண்டடி காட்சியயை மாற்றி சரோஜாதேவியின் நெஞ்சில் குண்டு பாய்ந்து அதை கே.ஆா்.விஜயா கத்தியால் அந்த குண்டை எடுப்பதாக மாற்றி காட்சி ஆக்கினாா் படத்தின் இயக்குனா் ஆன சாணக்யா
நடித்த திரைப்படங்கள்[தொகு]
- அக்கா
- அக்கா தங்கை
- அவள் சுமங்கலிதான்
- இரு மலர்கள்
- எதிரொலி
- திருடன்
- தங்கை
- பாலாடை
- நெஞ்சிருக்கும் வரை
- தவப்புதல்வன்
- பாரத விலாஸ்
- தங்கப்பதக்கம்
- கிரஹபிரவேசம்
- நாம் பிறந்த மண்
- ஜஸ்டிஸ் கோபிநாத்
- ஜெனரல் சக்ரவா்த்தி
- திரிசூலம்
- கல்தூண்
- ஹிட்லர் உமாநாத்
- கண்ணன் கருணை
- கண்ணே பாப்பா
- கந்தன் கருணை
- கல்யாண ஊர்வலம்
- கற்பகம்
- காட்டு ராணி
- குறத்தி மகன்
- கை கொடுத்த தெய்வம்
- சங்கமம்
- சத்ய சுந்தரம்
- சபதம்
- சர்வர் சுந்தரம்
- சரஸ்வதி சபதம்
- செல்வம்
- சொந்தம்
- சொர்க்கம்
- தசாவதாரம்
- தர்மராஜா
- தராசு
- திருமால் பெருமை
- தீர்க்கசுமங்கலி
- தொழிலாளி
- நத்தையில் முத்து
- நல்ல நேரம்
- நாணல்
- நான் ஏன் பிறந்தேன்
- நீலமலர்கள்
- பஞ்சவர்ணக்கிளி
- பணம் படைத்தவன்
- பதில் சொல்வாள் பத்ரகாளி
- பொன்னான வாழ்வு
- மிட்டாய் மம்மி
- யாருக்காக அழுதான்
- ராமன் எத்தனை ராமனடி
- ராமு
- விவசாயி
- ஊட்டி வரை உறவு