தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு | |
---|---|
தலைவர் | சி. பசுபதி பாண்டியன் |
தொடக்கம் | சூன் 12, 1993 |
தலைமையகம் | தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
கொள்கை | பள்ளர், தேவேந்திரர் சமூதாய முன்னேற்றத்திற்காக |
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு (Devendra Kula Vellalar Federation) ஒரு தமிழ்நாட்டு, அரசியல் கட்சியாகும். இக்கட்சி பெரும்பாலும் பள்ளர் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் சி. பசுபதி பாண்டியன் ஆவார்.
வரலாறு[தொகு]
இது 1993 ஆம் ஆண்டு, சூன் 12 அன்று சி. பசுபதி பாண்டியன் என்பவரால் துவங்கப்பட்டது.[1] இக்கட்சியானது 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டது. மேலும் சனவரி 10, 2012 அன்று திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில், பசுபதி பாண்டியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் மறைவிற்குப் பிறகு, தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரைச் சார்ந்த பா. ராஜேந்திரன் மாநிலச் செயல் தலைவராக செயல்பட்டு வருகிறார்.[2]
கட்சியின் கொள்கைகள்[தொகு]
- பள்ளர் சமூகத்தின் உட்பிரிவுகளான, குடும்பன், தேவேந்திர குலத்தார் காலாடி, பண்ணாடி, கடையன், வயக்காரன், வாதிரியான், மூப்பன் ஆகிய உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அரசு ஆணை வழங்க வேண்டும்.
- இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவக் கொண்டாட வேண்டும்.
- மதுரையில் குறிப்பிட்ட இடத்தில் சுந்தரலிங்கத்தின் முழு உருவ சிலை திறக்க வேண்டும்.[3]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு உதயமான நாள்". India Retailing. 2010-11-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் புதிய தலைவராக திருமதி சி.பார்வதி சண்முகசாமி தேர்வு". India Retailing. 2012-08-13 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்புப்பின் கொள்கைகள்". India Retailing. 2012-07-27 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- தேவேந்திரகுல_வேளாளர்_கூட்டமைப்பு பரணிடப்பட்டது 2013-11-05 at the வந்தவழி இயந்திரம்
- தேவேந்திரகுரல் பரணிடப்பட்டது 2015-11-21 at the வந்தவழி இயந்திரம்