அரசு கலை அறிவியல் கல்லூரி, திருக்காட்டுப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு கலை அறிவியல் கல்லூரி, திருக்காட்டுப்பள்ளி
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2022 சூலை
சார்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்இராஜா வரதராஜா (பொறுப்பு)[1]
மாணவர்கள்226
அமைவிடம்
திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்
, ,

அரசு கலை அறிவியல் கல்லூரி, திருக்காட்டுப்பள்ளி (Government Arts and Science College, Thirukattupalli) என்பது தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி 2022 சூலை மாதம் தமிழக அரசால் துவக்கப்பட்டது.[2] இக்கல்லூரி முதலில் தற்காலிகமாக பூதலூர் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கிவருகிறது. முதல் ஆண்டில் ஐந்து பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன.

தற்காலிக இடம்[தொகு]

இக்கல்லூரி தற்காலிகமாக பூதலூர் ஊராட்சி ஒன்றிய பழைய அலுவலகத்தில் 2022-23 கல்வியாண்டு முதல் செயல்படுகிறது. திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 25 கோடி நிதியில் கட்டிடப் பணிகள் முடிவடைந்ததும் கல்லூரி புதிய கட்டிடத்திலிருந்து செயல்படும்.

பாடப்பிரிவுகள்[தொகு]

இளங்கலை[தொகு]

  • தமிழ்,
  • ஆங்கிலம்

அறிவியல்[தொகு]

  • கணினி அறிவியல்

வணிகவியல்[தொகு]

  • வணிகவியல்
  • வணிகநிர்வாகவியல்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மலர், மாலை (2022-06-25). "அரசு கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
  2. "20 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் - மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-07-07. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.

வெளியிணைப்புகள்[தொகு]