திருவாவடுதுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 11°02′25″N 79°31′05″E / 11.040362°N 79.51817°E / 11.040362; 79.51817
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23: வரிசை 23:


==நிருவாகத் தகவல்==
==நிருவாகத் தகவல்==
மாவட்டம்: நாகப்பட்டினம்<br />
மாவட்டம்: மயிலாடுதுறை<br />
வட்டம்: குத்தாலம்<ref>[http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=19&centcode=0008&tlkname=Kutthalam#MAP குத்தாலம் வட்டம் வருவாய் கிராமங்கள்]</ref><br />
வட்டம்: குத்தாலம்<ref>[http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=19&centcode=0008&tlkname=Kutthalam#MAP குத்தாலம் வட்டம் வருவாய் கிராமங்கள்]</ref><br />
அஞ்சல்: திருவாவடுதுறை, 609803<br />
அஞ்சல்: திருவாவடுதுறை, 609803<br />

14:10, 7 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

திருவாவடுதுறை
திருவாவடுதுறை
இருப்பிடம்: திருவாவடுதுறை

,

அமைவிடம் 11°02′25″N 79°31′05″E / 11.040362°N 79.51817°E / 11.040362; 79.51817
நாடு  இந்தியா
மாவட்டம் மயிலாடுதுறை
ஊராட்சி தலைவர் சாந்திதர்மன்

[1]

மக்களவைத் தொகுதி திருவாவடுதுறை
மக்கள் தொகை 7,093 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


திருவாவடுதுறை (Thiruvavaduthurai also written as Thiruvaduthurai) என்பது தென்னிந்தியா, தமிழ் நாடு, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திலுள்ள 55 வருவாய் கிராமங்களுள் ஒன்றாகும்.

நிருவாகத் தகவல்

மாவட்டம்: மயிலாடுதுறை
வட்டம்: குத்தாலம்[2]
அஞ்சல்: திருவாவடுதுறை, 609803
தொலைபேசி. குறிஎண்: 04364
மக்கள் தொகை: 2011 கணக்கெடுப்பின்படி திருவாவடுதுறையில் 1567 குடும்பங்களைச் சேர்ந்த 7093 நபர்கள் (3389 ஆண்கள் + 3704 பெண்கள்) வசிக்கிறார்கள்.[3]

அமைவிடம்

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது. (கிடைக்கோடு 11°2'30"வ நெடுங்கோடு 79°31'16"கி)[4]

சமயத் தலங்கள்

இங்குள்ள திருவாவடுதுறை ஆதீனம் பிரசித்தி பெற்றது.

அருள்மிகு ஒப்பிலாமுலையம்மை உடனுறை மாசிலாமணியீசுரர்[5] (திருவிழாவின் முடிவில் கோமுத்தி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருளுபவராதலால் கோமுக்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்)[6]முதற் பராந்தகன் காலத்திய கல்வெட்டிலிருந்து இக்கோவில் புரட்டாசி விழாவில் ஒருநாளில் திருமூலர் நாடகமும் - ஆரியக் கூத்தும் நடந்து வந்ததாகத் தெரிய வருகிறது. [7]

ஊர் சிறப்பு

திருவாவடுதுறைக்கு நவகோடி சித்தர்புரம் என்ற ஒரு பெயரும் உண்டு ஒன்பது சித்தர்கள் இவ்விடத்தில் ஒன்பது திசையில் வாழ்ந்ததால் இப்பெயர் வரலாயிற்று. [8]

சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையும் உலகப் புகழ் பெற்றதுமான திருமந்திரத்தை திருமூலர் திருவாவடுதுறையிலேயே இயற்றியதோடு அவர் அங்கேயே சமாதிநிலை அடைந்தார்..[9]

ஊர்க்கோவிலில் வெள்ளை வேம்பு மரம் காணப்படுகிறது.[10]

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் திருக்கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, திருத்தென்குரங்காடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய தலங்களாகும். [11]

ஊரின் பிரபல நபர்கள்

நாதசுவர வித்துவான் டி. என். ராஜரத்தினம் பிள்ளை இந்த ஊரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்தார்.

அண்மையிலுள்ள நகரங்கள்

மயிலாடுதுறை, கும்பகோணம்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாவடுதுறை&oldid=3031241" இலிருந்து மீள்விக்கப்பட்டது