ஒன்பதாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தந்தை
ஒன்பதாம் போனிஃபாஸ்
ஆட்சி துவக்கம்2 நவம்பர் 1389
ஆட்சி முடிவு1 அக்டோபர் 1404
முன்னிருந்தவர்ஆறாம் அர்பன்
பின்வந்தவர்ஏழாம் இன்னசெண்ட்
திருப்பட்டங்கள்
ஆயர்நிலை திருப்பொழிவு9 நவம்பர் 1389
கர்தினாலாக உயர்த்தப்பட்டது21 டிசம்பர் 1381
பிற தகவல்கள்
இயற்பெயர்பிரோ தோமசெல்லி
பிறப்புc. 1350
நாபொலி, நேபில்சு பேரரசு
இறப்பு(1404-10-01)1 அக்டோபர் 1404
உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள்
போனிஃபாஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபாஸ் (இலத்தீன்: Bonifatius IX,; c. 1350 – 1 அக்டோபர் 1404), இயற்பெயர் பிரோ தோமசெல்லி, என்பவர் திருத்தந்தையாக 2 நவம்பர் 1389 முதல் 1404இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். மேற்கு சமயப்பிளவின் போது உரோமையிலிருந்து ஆட்சிசெய்தவர் இவர். இவருக்கு எதிராக பிரெஞ்சு அரசின் துணையோடு எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட் மற்றும் எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் ஆகியோர் அவிஞ்ஞோனிலிருந்து ஆட்சி செய்தனர்.

திருத்தந்தை ஆறாம் அர்பனால் 1385இல் கர்தினால் குருவாக உயர்த்தப்பட்டார். ஆறாம் அர்பனுக்குப்பின்பு 1389இல் இவர் திருத்தந்தையானார். செருமனி, இங்கிலாந்து, அங்கேரி, போலந்து, மற்றும் இத்தாலியின் பெரும் பகுதி இவரை ஆதரித்தன. ஐரோப்பாவின் பிற பகுதிகள் எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்டை ஆதரித்தன. இவ்விருவரும் ஒருவர் மற்றவரை திருச்சபையினை விட்டு விலக்கியதாக அறிவித்தனர்.

ஒன்பதாம் போனிஃபாஸ் மேற்கு சமயப்பிளவினை அரசியல் பிரிவாகப்பார்ததால், அரசியல் தீர்வு காணவே முயன்றார். இதனால் இப்பிளவை முடிவுக்கு கொண்டுவராமல் இதனை பெரிதும் விரிவடையச்செய்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pastor, The History of the Popes: From the Close of the Middle Ages (1906), vol. i, p 165.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
ஆறாம் அர்பன்
திருத்தந்தை
2 நவம்பர் 1389 – 1 அக்டோபர் 1404
பின்னர்
ஏழாம் இன்னசெண்ட்