வலைவாசல்:கிறித்தவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கிறித்தவம் வலைவாசல்


Christ Pantokrator, Cathedral of Cefalù, Sicily.jpg


கிறித்தவம் வலைவாசல் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Sermon on the Mount

கிறித்தவம் ஓரிறைக் கொள்கையுடைய (Monotheism) சமயமாகும். தமிழில் கிறித்தவம், கிறித்துவம், கிறிஸ்தவம் என்றும் குறிப்பர். இது நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது படிப்பினைகளையும் மையப்படுத்தி செயற்படுகிறது. கிறிஸ்தவர் இயேசுவை யூதர்களால் எதிர்பார்க்கப்பட்ட மெசியா (மீட்பர்) என்றும் கிறிஸ்து (ஆசிர்வதிக்கப் பட்டவர்) எனவும் நம்புகின்றனர். 2.1 பில்லியன் விசுவாசிகளை கொண்டு உலகின் பெரிய சமயமாக இது காணப்படுகிறது. கிறிஸ்தவம் பல உட்கிளைகளைக் கொண்டுள்ளது. இதில் கத்தோலிக்கம் மிகப்பெரியதாகும். கிறிஸ்தவம் யூத மதத்தின் நிறைவாக தன்னை கருதுவதால் யூத மதத்தின் புனித நூலை, பழைய ஏற்பாடு என்னும் பெயரில் கிறிஸ்தவ விவிலியத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளது. யூதம் மற்றும் இசுலாம் சமயங்களைப் போலவே கிறிஸ்தவமும் அபிரகாமிய சமயமாகும்.

தொகு  

சிறப்புக்கட்டுரை


Hw cineret sea.JPG
கலிலேயக் கடல் என்றும் கெனசரேத்து ஏரி என்றும் அழைக்கப்படுகின்ற பெரும் நீர்த்தேக்கம் இசுரயேல் நாட்டில் உள்ளது. மனித இதயம் போன்ற வடிவம் கொண்ட இந்த ஏரிப் பகுதியில்தான் இயேசு கிறித்துவின் பணி பெரும்பாலும் நிகழ்ந்தது. விவிலிய வரலாற்றில் இந்த ஏரி சிறப்பான பங்கு வகிக்கிறது. இசுரயேல் நாட்டில் நல்ல தண்ணீர் கொண்ட ஏரிகளுள் மிகப் பெரியதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு பணிசெய்த காலத்திலேயே கலிலேயக் கடல் மிகவும் பேர் போன இடமாக இருந்தது. கடலோர நெடுஞ்சாலை என்னும் பெயர்கொண்ட வணிகப் பாதை அவ்வழியே சென்று, எகிப்தையும் வடக்கு அரசுகளையும் இணைத்தது. அந்த ஏரிக்கரையில் உரோமையர் பல நகர்களை நிறுவினர். இயேசு பலமுறை இக்கடலுக்கு வந்துள்ளார். இந்த ஏரிக்கரையில் மீனவர் குடியிருப்புகள் பல இருந்தன. அங்கு வாணிகம் சிறப்பாக நடைபெற்றது. இயேசு தமது முதல் திருத்தூதர்களை அழைத்தபோது, இக்கடலில்தான் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இவ்வாறு, மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்சென்றவர்கள் திருத்தூதர்கள் பேதுருவும் அவர்தம் உடன்பிறப்பு அந்திரேயாவும், மற்றும் யோவான், அவர்தம் உடன்பிறப்பு யாக்கோபும் ஆவர். கலிலேயக் கடலருகில் அமைந்த ஒரு மலையில்தான் இயேசு ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றியதாக மத்தேயு நற்செய்தியாளர் குறித்துள்ளார்.




தொகு  

பகுப்புகள்


கிறித்தவ பகுப்புகள்

கிறித்தவம் பகுப்பு காணப்படவில்லை
தொகு  

கிறித்தவ நபர்கள்


PiusX, Bain.jpg
திருத்தந்தை பத்தாம் பயஸ் (1835-1914) என்பவர் 1903 முதல் 1914 வரை கத்தோலிக்க திருச்சபையின் 257ஆவது திருத்தந்தையாக இருந்தவர். இவர் திருச்சபையின் கொள்கைகளுக்கு நவீனத்துவ விளக்கம் அளிப்பதை எதிர்த்துப் பாரம்பரிய விளக்கங்களையே ஊக்குவித்தார். இவரின் மிக முக்கியச் செயல்பாடாகக் கருதப்படுவது, இவர் வெளியிட்ட திருச்சபைச் சட்டத் தொகுப்பாகும். இவ்வாறு வெளியிடப்பட்டது அதுவே முதல் முறையாம். இவர் கிறித்துவ ஒழுக்கங்களைத் தனிமனித வாழ்விலும் கடைபிடிப்பதில் ஊக்குவித்தார். இவரின் தொண்டு உள்ளம் வியக்கத்தக்கது. 1908-ல் நடந்த மெசினா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை, இத்தாலிய அரசு உதவி புரிய ஆரம்பிக்கும் முன்பே, தாமாகவே முன்வந்து அப்போஸ்தலர் மாளிகையில் தங்க வைத்தார். இவர் தம் குடும்பத்திற்கு எந்தவித உதவியும் பெறவில்லை. இவரின் மூன்று சகோதரிகளும் ஏழ்மையிலேயே வாழ்வைக் கழித்தனர். பலர் இவரின் இறப்புக்கு பின் இவரைப் புனிதரெனக் கொண்டாடி வெளிப்படையான வணக்கம் செலுத்தினர்.


தொகு  

உங்களுக்குத் தெரியுமா...


Saint eustace.jpg
  • ...விவிலிய சிலுவைப் பாதை என்பது இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வை, முற்றிலுமாக விவிலியத் தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தியானித்து இறைவேண்டல் செய்யும் கிறித்தவ பக்தி முயற்சி ஆகும்
  • ...இந்திய கத்தோலிக்க திருச்சபை இந்திய நாட்டுக்கே உரிய சிறப்புக் கொண்டாட்டங்களை உள்ளடக்கிய நாள்காட்டியை பயன்படுத்துகின்றது
  • ...எஸ்தாக்கியார் நாடகம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்க் கத்தோலிக்க மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற புனித எஸ்தாக்கியாரின் (படம்) வரலாற்றை எடுத்துக் கூறுகின்ற நாடகம் ஆகும்.
  • ...திருத்தந்தையின் மறைவாலோ, அல்லது பணித்துறப்பாலோ ஆட்சிபீடம் காலியாகும் போது புதியதொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கர்தினால்களின் மிக முக்கிய பணி ஆகும்.
தொகு  

விவிலிய வசனங்கள்


Ichthus.svg

எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.
- 1 தெசலோனிக்கர் 5 :16-18
தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்
  • கிறித்தவம் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|கிறித்தவம்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • கிறித்தவம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கிறித்தவம் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • கிறித்தவம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • கிறித்தவம் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

இதே மாதத்தில்


வில்லியம் கேரி



தொகு  

சிறப்புப் படம்


தனுஷ்கோடி தேவாலயத்தின் இடிபாடுகள்
படிம உதவி: Clt13

டிசம்பர் 23, 1964 அன்று தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடி ஒரு பெரும் புயலால் தாக்கப்பட்டு அழிந்து போனது. மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது சுனாமி போன்ற ராட்சத அலை எழுந்து ஊருக்குள் புகுந்து நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கு போய்க் கொண்டிருந்த தொடருந்தும் பேரலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டது. மொத்தம் சுமார் 2000 பேர் உயிரிழந்தனர். தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. புயலின் அடையாளமாக இன்று சிதிலமடைந்த ஒரு தேவாலயமும் சில கட்டடங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன. படத்தில் தனுஷ்கோடி தேவாலயத்தின் இடிபாடுகள் காட்டப்பட்டுள்ளன.


கிறித்தவம் தொடர்பானவை


தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:கிறித்தவம்&oldid=2295471" இருந்து மீள்விக்கப்பட்டது