முதலாம் மரீனுஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் மரீனுஸ்
108ஆம் திருத்தந்தை
Marinus I.jpg
ஆட்சி துவக்கம்டிசம்பர் 16, 882
ஆட்சி முடிவுமே 15, 884
முன்னிருந்தவர்எட்டாம் யோவான்
பின்வந்தவர்மூன்றாம் ஹேட்ரியன்
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்பு???
கலீசி, உரோமை நகரம்
இறப்பு(884-05-15)மே 15, 884
???
மரீனுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

முதலாம் மரீனுஸ் (அல்லது இரண்டாம் மார்டீன்), கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக டிசம்பர் 16, 882 முதல் மே 15, 884 வரை இருந்தவர். இவர் டிசம்பர் 882-இல் எட்டாம் யோவானுக்குப் பின் திருத்தந்தையானவர்..

திருத்தந்தையாவதற்கு முன்[தொகு]

இவர் திருத்தந்தையாவதற்கு முன் சேயிரி நகரின் ஆயராக இருந்தார். காண்ஸ்டான்டினோபிலின் மூப்பரான முதலாம் போதியோஸால் எழுந்த சர்ச்சைகளை தீர்க்க இவருக்கு முன் இருந்த மூன்று திருத்தந்தையர்கள் இவரை தம் தூதுவராக அனுப்பினர்.

திருத்தந்தையாக[தொகு]

இவர் திருத்தந்தையான பின் முதலில் ஃபொர்மோசுஸை போர்தஸ் நகரின் கர்தினால் ஆயராக நியமித்தார்.[1] இவருக்கு பெரிய ஆல்பர்டின் (r. 871-899) மீது இருந்த மரியாதையின் நிமித்தம், உரோமையில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சன் மக்களை வரிச்சுமையிலிருந்து விடுவித்தார்.[1] இவர் மே அல்லது ஜூன் 884-இல் இறந்திருக்கலாம். இவருக்கு பின் மூன்றாம் ஹேட்ரியன் திருத்தந்தையானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Pope Marinus I; Martin II". New Catholic Dictionary. 2008 [last update]. 2012-02-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 பெப்ரவரி 2011 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |year= (உதவி)

 இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Marinus (popes)". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
  "Pope Marinus I". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 

வெளி இணைப்புகள்[தொகு]

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
எட்டாம் யோவான்
திருத்தந்தை
882–884
பின்னர்
மூன்றாம் ஹேட்ரியன்