ஐந்தாம் யோவான் (திருத்தந்தை)
Appearance
திருத்தந்தை ஐந்தாம் யோவான் | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | 12 ஜூலை 685 |
ஆட்சி முடிவு | 2 ஆகஸ்ட் 686 |
முன்னிருந்தவர் | இரண்டாம் பெனடிக்ட் |
பின்வந்தவர் | கோனோன் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ??? |
பிறப்பு | 635 Syria, பைசாந்தியப் பேரரசு |
இறப்பு | உரோமை நகரம் | 2 ஆகத்து 686
யோவான் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தை ஐந்தாம் யோவான் (இலத்தீன்: Ioannes V; 635 – 2 ஆகஸ்ட் 686) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 12 ஜூலை 685 முதல் 686இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார்.[1] பைசாந்தியப் பேரரசரின் அனுமதியில்லாமல் பதவியேற்ற பத்து திருத்தந்தையருள் இவர் முதலாமவர் ஆவார். இவரின் ஆட்சியில் உரோமை நகருக்கும் பைசாந்தியப் பேரரசுக்கும் இடையே ஒற்றுமை நிலவியது.
இவர் ஆந்தியோக்கியாவில் பிறந்த ஒரு சிரியன் கிறிஸ்தவர் ஆவார். இவருடைய கிரேக்க மொழியின் புலமையால் மூன்றாம் ஆயர்களின் பேரவைக்கு அப்போதைய திருத்தந்தையின் பிரதிநிதியாக கான்ஸ்டாண்டிநோபிலுக்கு அனுப்பப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑
"திருத்தந்தை ஐந்தாம் யோவான்". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.