ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருளாளர்
ஒன்பதாம் பயஸ்
ஆட்சி துவக்கம்16 ஜூன் 1846
ஆட்சி முடிவு7 பெப்ரவரி 1878
முன்னிருந்தவர்பதினாறாம் கிரகோரி
பின்வந்தவர்பதின்மூன்றாம் லியோ
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு10 ஏப்ரல் 1819
ஆயர்நிலை திருப்பொழிவு3 ஜூன் 1827
திருத்தந்தை எட்டாம் பயஸ்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது14 டிசம்பர் 1840
திருத்தந்தை பதினாறாம் கிரகோரி-ஆல்
பிற தகவல்கள்
இயற்பெயர்ஜியோவானி மரிய மாஸ்தாய்-ஃபெரெத்தி
பிறப்பு(1792-05-13)13 மே 1792
திருத்தந்தை நாடுகள்
இறப்பு7 பெப்ரவரி 1878(1878-02-07) (அகவை 85)
திருத்தூதரக அரண்மனை, உரோமை நகரம், இத்தாலிய பேரரசு
வகித்த பதவிகள்
கையொப்பம்ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)-இன் கையொப்பம்
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா7 பெப்ரவரி
பகுப்புதிருத்தந்தை
முத்திப்பேறு3 செப்டம்பர் 2000
புனித பேதுரு சதுக்கம், வத்திக்கான் நகர்
திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-ஆல்
பயஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

அருளாளர் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (இலத்தீன்: Pius IX; 13 மே 1792 – 7 பெப்ரவரி 1878), இயற்பெயர் ஜியோவானி மரிய மாஸ்தாய்-ஃபெரெத்தி, என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 16 ஜூன் 1846 முதல் 1878இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். 32 ஆண்டுகள் திருத்தந்தையாக இருந்த இவரே அதிக காலம் இப்பதவியினை வகித்தவர் ஆவார். இவர் கூட்டிய முதல் வத்திக்கான் பொதுச்சங்கம் (1869-1870) திருத்தந்தையின் தவறா வரம் ஒரு விசுவாசக் கோட்பாடு என அறிக்கையிட்டது.

தூய கன்னி மரியாவின் அமலோற்பவத்தை இவர் ஆதரித்தார். மரியாவுக்கு இடைவிடா சகாய மாதா என்னும் பட்டத்தையும் அளித்தார். இப்பட்டத்துக்கு காரணமான கிரீட் தீவு பைசாந்திய ஓவியத்தை உலக இரட்சகர் சபை குருக்களின் பாதுகாவலில் ஒப்படைத்தார்.

திருத்தந்தை நாடுகளின் அரசராக இருந்த இறுதி திருத்தந்தை இவர் ஆவார். 1870இல் அது இத்தாலிய தேசியவாத படையினரால் கைப்பற்றப்பட்டு இத்தாலிய பேரரசுடன் இணைக்கப்பட்டது.

1878இல் இவரின் இறப்புக்குப்பின்பு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 6 ஜூலை 1985 அன்று வணக்கத்திற்குரியவர் என அறிவிக்கப்பட்டார். திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானோடு இவருக்கும் 3 செப்டம்பர் 2000இல் அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரின் விழா நாள் பெப்ரவரி 7 ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
மரியோ அன்சையனி
ஸ்போலேதோவின் பேராயர்
21 மே 1827 – 17 டிசம்பர் 1832
பின்னர்
இக்னேசியோ ஜியோவானி கடோலினோ
முன்னர்
கைகோமோ கிஸ்தினியானி
இமோலாவின் ஆயர்
17 டிசம்பர் 1832 – 16 ஜூன் 1846
பின்னர்
கைதானோ பலிஃபி
முன்னர்
பதினாறாம் கிரகோரி
திருத்தந்தை
16 ஜூன் 1846 – 7 பெப்ரவரி 1878
பின்னர்
பதின்மூன்றாம் லியோ

வார்ப்புரு:Popesதாம்