வத்திக்கான் நகர்
| வத்திக்கான் நகர-நாடு Status Civitatis Vaticanae
Stato della Città del Vaticano |
||||||
|---|---|---|---|---|---|---|
|
||||||
| நாட்டுப்பண்: ஓ பேறுபெற்ற உரோமையே (இலத்தீன் மொழி) Hymn and Pontifical March |
||||||
| தலைநகரம் | வத்திக்கான் நகர்1 41°54′N 12°27′E / 41.900°N 12.450°E |
|||||
| பெரிய நகர் | தலைநகர் | |||||
| ஆட்சி மொழி(கள்) | இலத்தீன்2, இத்தாலிய மொழி, பிரெஞ்சு மற்றும் யேர்மன் மொழி. | |||||
| அரசாங்கம் | சமயச் சார்புடைய முடியாட்சி elective3 monarchy |
|||||
| • | திருத்தந்தை | பிரான்சிசு | ||||
| • | வெளியுறவு அமைச்சர் Secretary of State | கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே Tarcisio Cardinal Bertone | ||||
| • | பொறுப்பாளர் | பேராயர் ஜொவான்னி லஜோலோGiovanni Lajolo | ||||
| தன்னாட்சி இத்தாலி பேரரசிடமிருந்து | ||||||
| • | இலாத்தரன் உடன்படிக்கை | பெப்ரவரி 11 1929 | ||||
| பரப்பு | ||||||
| • | மொத்தம் | 0.44 கிமீ2 (232வது) 0.17 சதுர மைல் |
||||
| மக்கள் தொகை | ||||||
| • | 2009 கணக்கெடுப்பு | 826 (229வது) | ||||
| நாணயம் | ஐரோ (€)4 (EUR) | |||||
| நேர வலயம் | CET (ஒ.அ.நே+1) | |||||
| • | கோடை (ப.சே) | CEST (ஒ.அ.நே+2) | ||||
| அழைப்புக்குறி | 395 | |||||
| இணையக் குறி | .va | |||||
| 1வத்திக்கான் நகர் ஒரு நகர அரசு ஆகும். 2 இத்தாலியம், இடாய்ச்சு, எசுப்பானியம், பிரெஞ்சு, மற்றும் போர்த்துக்கேயம் இங்கே அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகலாம். The language of the Papal Swiss Guard is German. The diplomatic language is French. 3 நாட்டு குடியுரிமை கர்தினால்களுக்கு மட்டுமே உரியது. 4 Prior to 2002, the Vatican lira (on par with the Italian lira). 5 ITU-T assigns code 379 to Vatican City. However, Vatican City is included in the Italian telephone numbering plan and uses the Italian country code 39. |
||||||
வத்திக்கான் நகர் (Vatican City) இத்தாலி நாட்டின் உரோமை நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய சுதந்திர நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 44 எக்டேர், (108.7 ஏக்கர்) ஆதலால் இதுவே உலகின் மிகச் சிறிய நாடு ஆகும். இதன் அரசியல் தலைவர் திருத்தந்தையாவார். வத்திக்கான் நகரத்தில் இவரின் அதிகாரப்பூர்வ உறைவிடமும் அலுவலகமும் அமைந்துள்ள கட்டடம் திருத்தூதரக அரண்மனை என அழைக்கப்படுகிறது. எனவே கத்தோலிக்க கிறித்தவத்தின் தலைமை மையமாக வத்திக்கான் நகரம் திகழ்கிறது. இதன் மொத்த மக்கள் தொகை சுமார் 804 ஆகும்.இதுவே பரப்பளவு மற்றும் மக்கட்தொகை அடிப்படையில் உலகின் மிகச்சிறிய நாடாகும்.
வத்திக்கான் நகரம் 1929ஆம் ஆண்டு முதல் நிலைத்திருக்கும் ஒரு நகர-நாடு. 1929இல் தன்னாட்சி நாடாக உருவெடுத்த வத்திக்கான் நகரத்தைக் கிறித்தவ சமயத்தின் தொடக்கத்திலிருந்தே நிலைத்துவருகின்ற திருப்பீடத்திலிருந்து (Holy See) வேறுபடுத்திக் காண வேண்டும். வத்திக்கான் நகரின் அரசாணைகள் இத்தாலிய மொழியிலும்; திருப்பீடத்தின் அரசாங்க ஆவணங்கள் இலத்தீன் மொழியிலும் வெளியிடப்படுகின்றன. இரு ஆட்சியமைப்புககளுக்கும் வெவ்வேறு கடவுச்சீட்டுக்கள் உள்ளன: நாடில்லாத திருப்பீடம் வெறும் அரசுதொடர்புடைய மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை பிறப்பிக்கின்றது; வத்திக்கான் நகரம் குடியுறிமை கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றது. இரண்டு அரசுகளுமே குறைந்த அளவிலேயே கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றன.
1929ஆம் ஆண்டு இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக உருவான வத்திக்கான் நகர் ஒரு புதிய உருவாக்கமாகவே அமைந்தது. முந்தைய மத்திய இத்தாலியை உள்ளக்கியிருந்த திருத்தந்தை நாடுகளின்(756-1870) சுவடாக இதனை யாரும் கருதுவதில்லை. 1860-ஆம் ஆண்டு திருத்தந்தை நாடுகள் முழுதும் இத்தாலி முடியரசோடு சேர்க்கப்பட்டது. இருதியாக உரோமை நகரமும் அதன் சுற்று பகுதியும் 1870இல் சேர்க்கப்பட்டது.
பொருளடக்கம்
நில அமைப்பு[தொகு]
- "வத்திக்கான்" என்ற பெயர் வத்திக்கான் மலை என பொருட்படும் லத்தீன் வார்த்தையான வட்டிகனசில் இருந்து பெறப்பட்டது.இதன் ஆட்சிப்பகுதியானது புனித பேதுரு பேராலயம், திருத்தூதரக அரண்மனை, சிசுடைன் சிற்றாலயம் மற்றும் பல அருங்காட்சியக கட்டிடங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இப்பகுதியானது 1929 வரை இத்தாலிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. 1929இல் இலாத்தரன் ஒப்பந்தத்தின் போது, முன்மொழியப்பட்ட பகுதிகளின் எல்லைகள் ஏற்கனவே இருந்த சுற்று சுவர் மூலம் வரையறுக்கப்பட்டது. மேலும் இந்நகரத்தின் எல்லைகள் இத்தாலியில் இருந்து ஒரு வெள்ளை கொடு மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இலாத்தரன் உடன்படிக்கை படி இந்நகரின் பகுதிகள் மட்டுமல்லாது இத்தாலிய ஆட்சிப்பகுதிக்குள் அமைந்துள்ள ஆலயங்களும் வத்திக்கான் நகர ஆட்சிப்பகுதியாக அமைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்பகால வரலாறு[தொகு]
| வத்திக்கான் நகர் Vatican City |
|
|---|---|
| Name as inscribed on the World Heritage List | |
| வகை | கலாச்சாரம் சார் |
| ஒப்பளவு | i, ii, iv, vi |
| உசாத்துணை | 286 |
| UNESCO region | ஐரோப்பா |
| Inscription history | |
| பொறிப்பு | 1984 (8ஆவது தொடர்) |
- "வத்திக்கான்" என்ற பெயர் ரோமன் குடியரசின் காலத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றது.
- ரோம பேரரசரான முதலாம் ஆக்ரிப்பினா(கி.மு.1418-அக்டோபர் கி.பி.33 )ஆட்சி காலத்தின் கீழ் கி.பி. 1 வது நூற்றாண்டில் இப்பகுதியில் தோட்டங்கள் மாளிகைகள் போன்றவை கட்டப்பட்டன
- பின்னர் கி.பி.40 ல் அவரது மகன் பேரரசர் கலிகுல்லா தனது தோட்டங்களில் நீரோ கேளிக்கை கூடத்தை அமைத்தார்.
- கி.பி. 64 ல் ரோமில் பெரும் தீ விபத்திற்கு பிறகு பல கிரிஸ்துவர்களின் பலியிடும் இருப்பிடமாக மாறியது.பண்டைய வழக்கப்படி இங்கு புனித பீட்டர் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்தார் என கூறப்படுகிறது.
- 4 வது நூற்றாண்டின் முதல் பாதியில் புனித பீட்டர் என்ற காண்ஸ்டாண்டீனிய பசிலிக்கா கட்டப்பட்டது.
- 1939 ல் இருந்து 1941 வரை மறுமலர்ச்சி காலத்தின் போது திருத்தந்தை பன்னிரண்டாம் பையசின் ஆணைப்படி தோண்டியபோது பண்டைய இடுகாடின் எஞ்சியுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டது.
- திருத்தந்தை அரண்மனை திருத்தந்தை சிமாசஸ் ஆட்சிக்காலத்தின் போது 5 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டது.
பொருளாதாரம்[தொகு]
- வத்திக்கான் நகரின் வருவாயானது வத்திக்கான் அருங்காட்சியகங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலமும்,நாணயங்கள்,பதக்கங்கள் மற்றும் சுற்றுலா பரிசு விற்பனை மூலம் வருகிறது.அருங்காட்சியகங்களின் அனுமதி கட்டணம் மூலமும் மற்றும் வெளியீடுகள் விற்பனை மூலம் . வேத தொழிலாளர்கள் வருமானம் வழங்கப்படுகிறது.மற்ற துறைகளானது அச்சுத்துறை,பளிங்குகல் உற்பத்தி மற்றும் ஊழியர்களின் சீருடை உற்பத்தி முதலியவை ஆகியவை ஆகும்.
மேலும் வத்திக்கான் வங்கி என்று அழைக்கப்படும் IOR வங்கி உலகளாவிய நிதி நடவடிக்கைகளை நடத்துகிறது வத்திக்கான் நகரம் அதன் நாணயங்களை சொந்தமாக தயாரிக்கின்றது.ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு சிறப்பு ஒப்பந்தம் காரணமாக ஜனவரி 1, 1999 முதல் அதன் நாணயமாக யூரோ பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 2,000 பேர் வேலைக்கு எந்த வத்திக்கான் நகர நிர்வாகத்தில் 2007 ஆம் ஆண்டில் 6.7 மில்லியன் யூரோக்கள் ஒரு உபரி இருந்தது ஆனால் 2008 ல் 15 மில்லியன் யூரோக்கள் ஒரு பற்றாக்குறை ஏற்ப்பட்டது.
குற்றங்கள்[தொகு]
வாடிகன் நகரில் அதிகமாக பதிவாகும் குற்றங்கள் வழிப்பறி மற்றும் திருட்டு ஆகும்.முக்கியமாக தேவலயபகுதியில் இவை அதிகம் நடக்கின்றது.வாடிகன் நகர காவல்துறையினர் பொதுவாக எல்லை பாதுகாப்பு,போக்குவரத்து,சட்டம் ஒழுங்கு பராமரிப்பு ஆகிய பணிகளை கவனிகின்றது.இந்நகரில் சிறை அமைப்பு ஏதும் இல்லாததால் இந்நகரில் குற்றம் புரிவோர் இட்லலி நாட்டு சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.
குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் போப் தலைமையில் நடந்த விசாரணைகளைத் தொடர்ந்து 384 பாதிரியார்களை போப் பெனடிக்ட் நீக்கினார்.[1][2][3]