மித்திரவிந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணனுடன் எண்மனையாட்டி - 19ஆம் நூற்றாண்டு மைசூர் ஓவியம்.

மித்திரவிந்தை என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். எண்மரில் இவள் ஐந்தாவது ஆவாள். இவள் வரலாறு, மகாபாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், அரிவம்சம், முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.[1]


வாழ்க்கை[தொகு]

பாகவதம், இவள் குந்தியின் தமக்கை இராசாத்தி தேவி்யினதும், அவந்தி நாட்டரசன் ஜெயசேனனதும் மகள் என்கின்றது. இவளது தமையர்களான விந்தன், அனுவிந்தன் துரியோதனனின் தோழர்கள் என்றும் அது சொல்கின்றது.[2][3] விஷ்ணு புராணத்தில் மித்திரவிந்தை, "சைப்பியை" ( சிபி வம்சத்தவள்) என்ற பெயரால் அவள் சுட்டப்படுகின்றாள். அரி வம்சம் கூறுவதன் படி, அவள் சிபி மன்னனின் மகளான "சுதத்தை".[4]


பாகவதத்தில், மித்திரவிந்தையின் கண்ணனுடனான திருமணம், சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அவளது குடும்பத்தவர், அவளைத் துரியோதனனுக்கு மணக்க முடிவு செய்திருந்ததாகவும், அவளோ கண்னனைக் காதலித்ததாகவும், அவளுக்கு வைக்கப்பட்ட மணத்தன்னேற்பில், கண்ணன் அவளைக் கவர்ந்து சென்றதாகவும் பாகவதம் சொல்கின்றது.[5][2]

இன்னொரு கதையில், பலராமரின் ஆணைப்படி, அவந்தி நாடு கௌரவருடன் இணைவது துவாரகைக்கு அச்சுறுத்தல் என்பதால், கண்ணன் தன் மைத்துனியான மித்திரவிந்தையை மணக்க வற்புறுத்தப்பட்டதாகவும், அவன் சுபத்திரையை அழைத்துச் சென்று அவள் மனமறிந்து, மித்திரவிந்தையின் சம்மதத்துடன் அவளைக் கவர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.[6]

விருகன், கர்சன், அண்ணிலன், கிரீத்திரன், வர்த்தனன், உன்னடன், மகாம்சன், பவணன், வக்கினி, சுதி எனும் பதின்மர் மித்திரவிந்தையின் மைந்தர்களாகச் சொல்லப்படுகின்றனர்.[7][8] சங்கிராமசித்து முதலான பல மைந்தர்கள் அவளுக்கு இருந்ததாக விஷ்ணு புராணம் சொல்கின்றது.[4] கண்ணனின் மறைவுக்குப் பின், அவனது ஏனைய தேவியர் போலவே இவளும் உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.[9] [10]

மேலும் பார்க்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Vettam Mani (1975). Puranic Encyclopaedia: a Comprehensive Dictionary with Special Reference to the Epic and Puranic Literature. Motilal Banarsidass Publishers. பக். 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8426-0822-0. https://archive.org/details/puranicencyclopa00maniuoft. 
  2. 2.0 2.1 Prabhupada. "Bhagavata Purana 10.58". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2013-08-26. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
  3. Prabhupada. "Bhagavata Purana 9.24.39". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2009-09-18. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
  4. 4.0 4.1 Horace Hayman Wilson (1870). The Vishńu Puráńa: a system of Hindu mythology and tradition. Trübner. பக். 79-82. http://books.google.com/books?id=RO8oAAAAYAAJ&pg=PA82. பார்த்த நாள்: 22 February 2013. 
  5. V. R. Ramachandra Dikshitar (1995). The Purana Index. Motilal Banarsidass Publishe. பக். 705–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-1273-4. http://books.google.com/books?id=z7bFwZhfSOsC&pg=PA705. பார்த்த நாள்: 7 February 2013. 
  6. "Discussions at Dwaraka". Protagonize.com of TauntMedia.com. Archived from the original on 12 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 9 February 2013.
  7. "The Genealogical Table of the Family of Krishna". Krsnabook.com. பார்க்கப்பட்ட நாள் 5 February 2013.
  8. Prabhupada. "Bhagavata Purana 10.61.16". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2010-10-21. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
  9. Prabhupada. "Bhagavata Purana 11.31.20". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2010-06-13. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
  10. Kisari Mohan Ganguli. "Mahabharata". Sacred-texts.com. பார்க்கப்பட்ட நாள் 18 March 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மித்திரவிந்தை&oldid=3801532" இலிருந்து மீள்விக்கப்பட்டது