சிரூர் தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரூர் தாலுகா
தாலுகா
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் சிரூர் தாலுகாவின் அமைவிடம்
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் சிரூர் தாலுகாவின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே மாவட்டம்
இணையதளம்shirur.mytaluka.com

சிரூர் தாலுகா (Shirur taluka) (மராத்தி: शिरूर तालुका), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் 14 தாலுக்காக்களில் ஒன்றாகும்.[1] சிரூர் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரம் சிரூர் நகராட்சி ஆகும்.

இத்தாலுகா சிரூர் நகராட்சி, கோரேகான் பீமா, சனஸ்வடி எனும் இரு சிற்றூர்களும், 115 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[2]

இத்தாலுகாவில் ரஞ்சன்கோண் கணபதி கோயில் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தாலுகாவின் மொத்த மக்கள்தொகை 3,85,414 ஆகும். அதில் ஆண்கள் 201,152 மற்றும் 184,262 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 916. பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 47921 (12%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.37%. ஆக உள்ளது. இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 32,885 மற்றும் 12,030 ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 359,402 (93.25%), இசுலாமியர் 13,143 (3.41%), பௌத்தர்கள் 7,758 (2.01%), சமணர்கள் 3,631 (0.94%), கிறித்தவர்கள் 581 (0.15%) மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.[3] இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "cOllectorate pune District - In General Climate Of Pune District". 29 ஏப்ரல் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. Shirur Taluka - Pune
  3. Shirur Taluka Population, Caste, Religion Data - Pune district
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரூர்_தாலுகா&oldid=3554189" இருந்து மீள்விக்கப்பட்டது