சரோஜினி நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரோஜினி நாயுடு
பிறப்புசரோஜினி சட்டோபாத்தியாயா
(1879-02-13)13 பெப்ரவரி 1879
ஐதராபாத்
இறப்பு2 மார்ச்சு 1949(1949-03-02) (அகவை 70)
லக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
தொழில்கவிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர்
தேசியம்இந்திய பெங்காலி
கல்வி நிலையம்கிங் கல்லூரி, லண்டன்
கிரிடன் கல்லூரி, கேம்ப்ரிட்ஜ்
துணைவர்டாக்டர். முத்தியாலா கோவிந்தராஜுலு நாயுடு
பிள்ளைகள்ஜயசூரியா, பத்மஜா, ரண்தீர், லீலாமணி

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா [1] (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும்[2] உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.[3] அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.[4]

இளமைக் காலம்[தொகு]

சரோஜினி சட்டோபாத்தியாயா, பின்னாளில் சரோஜினி நாயுடு, இந்தியாவின் ஹைதாராபாத் மாநிலத்தில் ஒரு வங்காள குலின் பிராமணக் குடும்பத்தில் மூத்த மகளாக 13 பிப்ரவரி 1879 அன்று பிறந்தார். இவர் இவரது குடும்பத்தின் 8 குழந்தைகளில் மூத்தவராவார். இவரது தந்தை விஞ்ஞானியும் தத்துவவியலாளரும் கல்வியாளராகவும் விளங்கிய அகோரநாத் சட்டோபத்யாயா. இவரது தாய் வரதா சுந்தரி ஒரு பெண் கவிஞர் ஆவார். இவரது தந்தை நிசாம் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும் இவரது நண்பர் முல்லா அப்துல் காமுடன் இந்திய தேசிய காங்கிரசின் முதல் உறுப்பினராக விளங்கினார். அவர் பின்னர் அரசியலில் ஈடுபட்டதற்காக அவரது தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

கல்வி[தொகு]

12 ஆவது வயதில் சரோஜினி நாயுடு அவரது மெட்ரிகுலேஷன் பரீட்சையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றார். அவர் மாநில அளவில் முதலிடம் பெற்றார். 1891 முதல் 1894 வரை அவர் தன்னுடைய படிப்பில் சிறு இடைவெளி விட்டு, பல்வேறு தலைப்பிலான புத்தகங்களைப் படித்தார். 1895 ஆம் ஆண்டு, பதினாறு வயதில் முதன் முதலாக நிஜாம் அறக்கட்டளையின் உதவித்தொகை லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் மூலம் படிப்பதற்காக சென்றார்.

உருது, தெலுங்கு, ஆங்கிலம், பாரசீகம், பெங்காலி ஆகிய மொழிகளைப் பேச சரோஜினி நாயுடு கற்றுக்கொண்டார். அவருக்கு பிடித்தமான கவிஞர் பெர்சி பைஷ் ஷெல்லி ஆவார்.

திருமணம்[தொகு]

இங்கிலாந்தில் தங்கியிருந்த போது தனது 17 வயதில் முத்யாலா கோவிந்தராஜுலு நாயுடு என்ற ஒரு பிராமணர் அல்லாத தொழில்ரீதியான ஒரு மருத்துவரை சந்தித்து, அவரைக் காதலித்து தனது 19வது வயதில் திருமணம் செய்து கொண்டார். 1898 ஆம் ஆண்டு சட்டப்படி சென்னையில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். சாதியிடை திருமணங்கள் அனுமதிக்கப்படாத காலகட்டத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு முற்போக்கு சிந்தனையுள்ள அவரது தந்தையின் ஒப்புதலும் கிடைத்தது. அவரது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருந்தது.

இவர்களது திருமணம் சென்னையில் டாக்டர் நஞ்சுண்டராவ்வின் ’சசி விலாஸ்’ இல்லத்தில் நடைபெற்றது.அவர் சாதீயக் கட்டுப்பாடுகளின் தீவிர எதிர்ப்பு அலைகளைத் தாண்டி இத்திருமணத்தை நடத்தி வைத்தார்.[5]

ஜெயசூர்யா, பத்மஜா, ரந்தீர், லீலாமணி என அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். பின்னர் அவரது மகள் பத்மஜா மேற்கு வங்காளத்தின் ஆளுனர் ஆனார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

மகாத்மா காந்தியுடன் சரோஜினி நாயுடு

இந்திய சுதந்திர போராட்டம்[தொகு]

1905 ஆம் ஆண்டில் வங்காளம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். 1903-17 காலகட்டத்தில் சரோஜினி அவர்கள் கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநாத் தாகூர், முகம்மது அலி ஜின்னா, அன்னி பெசண்ட், சி.பி.ராமஸ்வாமி ஐய்யர், மோகன்தாஸ் காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் அறிமுகத்தைப் பெற்றார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார். காந்தி, அப்பாஸ் தியாப்ஜி மற்றும் கஸ்தூரி பாய் காந்தி ஆகியோர் கைதுக்குப் பின் தர்சண சத்தியாகிரகத்தில் துடிப்புடன் பங்கேற்றார்.

1915 முதல் 1918 ஆண்டுகளுக்கிடையில் அவர் இந்தியா முழுவதும் இளைய சமுதாயத்தினரின் நல்வாழ்வு, பணியாளர் நலன், பெண் கொடுமை மற்றும் தேசியப் பற்று குறித்து பல்வேறு சொற்பொழிவுகளை மேற்கொண்டார். ஜவகர்லால் நேருவை 1916 ஆம் ஆண்டு சந்தித்ததற்குப் பின் அவர் சம்பரன் இன்டிகோ பணியாளர்கள் பிரச்சினையைக் கையில் எடுத்தார். 1925 ஆம் ஆண்டில் அவர் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே ஆவார்.

1919 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ரௌலெட் சட்டத்தினைப் பிறப்பித்தது. இதன் வழியாக விழிப்புணர்வு ஆவணங்களை வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானதாகக் கருதப்பட்டது; மோகன் தாஸ் காந்தி அவர்கள் எதிர்த்துப் போராட ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார், இதில் முதலில் இணைந்தவர் சரோஜினி நாயுடு ஆவார்.

ஜுலை 1919 ஆம் ஆண்டு சரோஜினி அவர்கள் இங்கிலாந்திற்கான ஹோம் ரூல் லீக்கின் தூதர் ஆனார். ஜுலை 1920 இல் அவர் இந்தியாவிற்கு திரும்பினார். ஆகஸ்ட் 1 அன்று மகாத்மா காந்தி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். 1924 ஆம் ஆண்டு, கிழக்கு ஆப்பிரிக்க இந்திய காங்கிரசில் பங்கேற்ற இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுள் ஒருவராக சரோஜினி அவர்கள் திகழ்ந்தார்.

அக்டோபர் 1928 ஆம் ஆண்டு நாயுடு நியூ யார்க்கிற்கு சென்றார். அங்கு நிலவிய ஆப்ரிக்க அமெரிக்க மற்றும் அமெரிக்க இந்திய இனப் பாகுபாடுகளைக் கண்டு கவலையுற்றார். அங்கிருந்து திரும்பிய பின்னர் காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினரானார்.

ஜனவரி 26, 1930 இல் தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் கோரியது. மே 5, அன்று மோகன் தாஸ் காந்தி கைது செய்யப்பட்டார். அதன் பின் சில நாட்களிலேயே நாயுடு அவர்களும் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தி அவர்களுடன் ஜனவரி 31, 1931 இல் அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். மோசமான உடல் நிலை காரணமாக நாயுடு உடனடியாகவும் காந்தி 1933 ஆம் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டனர். 1931 ஆம் ஆண்டு அவர் காந்திஜி மற்றும் பண்டிட் மாலவியாஜி ஆகியோருடன் இணைந்து வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றார். அக்டோபர் 2, 1942 ஆம் ஆண்டு அவர் வெள்ளையனே வெளியேறு போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டார். அவர் காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். மோகன் தாஸ் காந்தி அவர்களுடன் நாயுடு அவர்கள் ஒரு பாசமான உறவினைக் கொண்டிருந்தார். காந்தி அவரை செல்லமாக "மிக்கி மவுஸ்" என்று அழைப்பார்.

1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய உறவுகள் மாநாட்டில் நாயுடு பங்கேற்றார்.

இந்தியாவின் முதல் பெண் ஆளுனர்[தொகு]

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுநராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுநரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.

கவிதைத் துறை[தொகு]

அவரது முக்கிய பங்களிப்பும் ஆர்வமும் கவிதை துறையில் இருந்தது. சரோஜினி நாயுடு கவிதைத் துறைக்காக பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இவரது கவிதைகளில் அழகான வார்த்தைகள் இருக்கும், மேலும் அது பாடக் கூடிய வகையிலும் இருக்கும். 1905 ஆம் ஆண்டு அவரது முதல் பாடல்கள் தொகுப்பு தி கோல்டன் த்ரெஷோல்டு என்னும் பெயரில் வெளியிடப்பட்டது[6]. மேலும் இரண்டு பகுதிகள் வெளியிடப்பட்டது: தி பேர்ட் ஆஃப் டைம் (1912) மற்றும் தி புரோக்கன் விங் (1917). 1918 ஆம் ஆண்டு, பீஸ்ட் ஆப் யூத் வெளியிடப்பட்டது. பின்னர் அவரது தி விஸார்டு மாஸ்க் மற்றும் எ டிரஷரி ஆஃப் போயம்ஸ் ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1961 ஆம் ஆண்டு அவரது மகள் பத்மஜா தனது தாயின் வெளியிடப்படாத கவிதைகளை தி ஃபெதர் ஆஃப் டான் என்னும் தலைப்பில் வெளியிட்டார்.[7]

அவரது படைப்புகள்[தொகு]

  • தி கோல்டன் த்ரெஷோல்டு (1905)
  • தி பேர்டு ஆஃப் டைம்: சாங்க்ஸ் ஆஃப் லவ், டெத் அண்டு தி ஸ்பிரிங்(1912)
  • தி புரோக்கள் விங்: சாங்க்ஸ் ஆஃப் லவ், டெத் அண்டு தி ஸ்பிரிங்(1917)
  • தி ஸ்கெப்ட்ரெட் ஃப்ளுட்: சாங்ஸ் ஆஃப் இந்தியா(1928)
  • தி ஃபெதர் ஆஃப் டான்(1961)
  • தி கிஃப்ட் ஆஃப் இந்தியா

சரோஜினியின் வரிகள்[தொகு]

:Shall hope prevail where clamorous hate is rife,

Shall sweet love prosper or high dreams have place
Amid the tumult of reverberant strife
'Twixt ancient creeds, 'twixt race and ancient race,
That mars the grave, glad purposes of life,
Leaving no refuge save thy succoring face?'

நாயுடு அவர்கள், "ஒரு எதிர்ப்பு ஏற்பட்டால், நாம் வெளிப்படுத்த வேண்டிய ஒரே ஒரு சுயமரியாதை, இது இன்று நிறைவடையும் ஏனெனில் என்னுடைய உரிமையே நியாயம்." என்று கூறுகிறார். நாயுடு அவர்கள், "நீங்கள் வலிமையானவராக இருப்பின், வலிமை குறைந்த ஆண் அல்லது பெண்ணிற்கு பணி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டிலும் உதவி புரிய வேண்டும்." என்று கூறுகிறார்.'

பங்கேற்ற போராட்டங்கள்[தொகு]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Colors of India". First Woman Governor of a State in India. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012.
  2. editor; Ramchandani, vice president Dale Hoiberg; editor South Asia, Indu (2000). A to C (Abd Allah ibn al-Abbas to Cypress).. New Delhi: Encyclopædia Britannica (India). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780852297605. http://books.google.co.in/books?id=ISFBJarYX7YC&pg=PA76&dq=naidu+-+President+of+the+Indian+National+Congress&hl=en&sa=X&ei=XMVuT8GDEtHjrAeUkbGgDg&ved=0CDQQ6AEwAA#v=onepage&q=naidu%20-%20President%20of%20the%20Indian%20National%20Congress&f=false. 
  3. "SRIMATI SAROJINI NAIDU, Governor of UP". National Informatics Centre, UP State Unit. Archived from the original on 21 ஜனவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Live India".
  5. அளசிங்கப் பெருமாள் சுவாமி விவேகானந்தரின் அருமைச் சீடர்; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; சென்னை;பக்கம் 10,11
  6. Sarkar, [editors], Amar Nath Prasad, Bithika (2008). Critical response to Indian poetry in English. New Delhi: Sarup & Sons. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7625-825-8. http://books.google.co.in/books?id=4NcHdrqUJpYC&pg=PA11&dq=%22The+Broken+Wings%22+was+published+1905+naidu&hl=en&sa=X&ei=nNRuT-irE4PnrAfCnIGgDg&ved=0CDgQ6AEwAQ#v=onepage&q=%22The%20Broken%20Wings%22%20was%20published%201905%20naidu&f=false. 
  7. "Family of Naidu".

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Indian National Congress Presidents

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜினி_நாயுடு&oldid=3784499" இலிருந்து மீள்விக்கப்பட்டது