கே. எம். முன்ஷி
Jump to navigation
Jump to search
குலபதி கே. எம். முன்ஷி | |
---|---|
![]() முன்ஷி அவரது அறுபதுகளில் | |
பிறப்பு | 30 டிசம்பர் 1887 |
இறப்பு | பிப்ரவரி 8, 1971 மும்பை, ![]() |
பணி | இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, வக்கீல், எழுத்தாளர் |
அறியப்படுவது | பாரதீய வித்யா பவன் நிறுவனர் (1938), உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சர் (1952-53),உத்தரப்பிரதேச ஆளுநர் (1952-57).. |
அரசியல் கட்சி | சுவராஜ் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், சுவதந்தரா கட்சி, ஜன் சங் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | ஆதிலட்சுமி பதக், லீலாவதி சேத் |
பிள்ளைகள் | ஜகதீசு முன்சி, சரளா சேத், உஷா ரகுபதி, லதா முன்ஷி, கிரிஷ் முன்ஷி |
கன்னையாலால் மனேக்லால் முன்ஷி (கே. எம். முன்ஷி) (Kanhaiyalal Maneklal Munshi, குசராத்தி: કનૈયાલાલ માણેકલાલ મુનશી) (திசம்பர் 30, 1887 - பிப்ரவரி 8, 1971) குசராத் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற கல்வியாளர், அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர்.
தொழில்முறை வழக்கறிஞரான இவர் பின்னாளில் இலக்கியம் மற்றும் அரசியலில் ஈடுபாடு கொண்டார். குசராத் இலக்கியத்தில் மிகவும் அறியப்பட்டவர். மகாத்மா காந்தியின் ஆசியுடன், கே. எம். முன்ஷி 1938ல் பாரதிய வித்தியா பவன் எனும் கல்வி அறக்கட்டளையை நிறுவினார்.[1][2]