காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காயுதே மில்லத் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி (தன்னாட்சி)
வகைமகளிருக்கான அரசினர் தன்னாட்சிக் கலைக்கல்லூரி
உருவாக்கம்1974
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்வி. இராதா
மாணவர்கள்4300
அமைவிடம், ,
இணையதளம்http://www.qmgcw.in

காயுதே மில்லத் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையில் செயல்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1974ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தன்னாட்சித் தகுதியுடன் சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. முனைவர் வி. இராதா தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[3]

வரலாறு[தொகு]

1974 ஆவது ஆண்டில் 30 ஏக்கர் பரப்பளவில், ஐந்து பட்டப் படிப்புகளில் சில நூறு மாணவிகளுடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது 12 இளநிலை, 6 முதுநிலைப் படிப்புகளில் 4300கும் அதிகமான மாணவிகளுடன் செயல்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் எண்ணிக்கை அதிகமானதை அடுத்து 2006-07 கல்வியாண்டில் இருசுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளில் பெரும்பாலானவர்கள் முதலாம் தலைமுறை பட்டதாரிகள் ஆவர்.

வழங்கும் படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

அமைவிடம்[தொகு]

காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமலர் கல்விமலர்
  2. Colleges in Tamil Nadu
  3. "காயுதே மில்லத் அரசினர் கலைக்கல்லூரி முதல்வர்". Archived from the original on 2016-12-23. பார்க்கப்பட்ட நாள் 2017-03-31.

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

இதனையும் காண்க[தொகு]