புளியோதரை
| பகுதி | தென்னிந்தியா |
|---|---|
| முக்கிய சேர்பொருட்கள் | நெல், முருகல், நாரத்தம் அல்லது புளி |
| வேறுபாடுகள் | முருகல், நாரத்தம் அம்புலா (மாவடு), புளி, எலுமிச்சை, தேசிப்பழம், நாரத்தம், வெங்காயம்[1][2] |
புளியோதரை (puliyodharai) அல்லது புளியோதுரை, புளி சாதம் தென்னிந்தியாவில் அதிகமாக உண்ணப்படும் காரம் சேர்த்து புளியால் தயாராக்கபட்ட சாந்தை சாதத்தில் கலந்து தயாரிக்கபடும் பரவலான உணவு ஆகும். இது பெரும்பாலும் வைணவக் கோயில்களில் பிரசாதமாக வழங்கப்பட்டாலும், வீட்டில் சமைத்தும் உண்பர். புளி+ ஓரை (சமைத்த அரிசி) = புளியோரை. புளியோரை என்பதே பின்னர் மருவி புளியோதரை என்றாகியது. கன்னடத்தில் ஹுளியன்னா (புளி + அன்னம்) எனவும் தெலுங்கில் புலிஹோரா (புளி + ஓரை) என்றும் அழைக்கின்றனர். தமிழ் பிராமண அய்யங்கார்களே இதை அதிகம் விரும்பி உண்பர். புளிக் கரைசல், வேர்க்கடலை, மிளகாய், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை, தேங்காய் ஆகியனவற்றை வெந்த அரிசியுடன் கலந்து புளியோரை செய்யப்படும்.[3] இது விரைவில் கெடாது என்பதால் நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்பவர்கள் இதை கட்டுச்சோறாக எடுத்துச் செல்வார்கள்.
சான்றுகள்
[தொகு]- ↑ "Pulihora recipe | How to make pulihora (chintapandu pulihora)". Swasthi's Recipes (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-08-16. Retrieved 2021-04-20.
- ↑ "Pulihora". N.T.R District. Retrieved 20 October 2022.
- ↑ "புளியோதரை". Archived from the original on 2015-06-03. Retrieved ஆகத்து 22, 2015.