உள்ளடக்கத்துக்குச் செல்

அவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவல்
மாற்றுப் பெயர்கள்செவ்டா (Hindi चिवड़ा), போகா (Marathi पोहा), அட்டுகுலு (Telugu), அவலக்கி (Kannada), பஜ்ஜில் (துளு), அவல்l (தமிழ்), அவல் (மலையாளம்; അവൽ), செவ்ரா (நேபாளி, चिउरा), சூடா (பீகாரி, Hindi चूड़ा, மைதிலிi, மாக்கை, ஒடியா ଚୁଡ଼ା), சிரா (வங்காளம் চিরা), சிரா (அசாம் চিৰা), beaten rice
பரிமாறப்படும் வெப்பநிலைசிற்றுண்டி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிமகராட்டிரம், இந்தியா
பரிமாறப்படும் வெப்பநிலைதயிருடன்
முக்கிய சேர்பொருட்கள்உமி நீக்கப்பட்ட அரிசி

அவல் (அல்லது) தட்டையான அரிசி (Flattened rice) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் அரிசியினை தட்டை வடிவத்தில் தயார் செய்து பயன்படுத்தும் பொருளாகும். அரிசியானது தட்டையாக்குவதற்கு முன் அவிக்கப்படுகிறது. இவ்வாறாகத் தயாரிக்கப்படும் அவலை அதிகமாகச் சமைக்காமல் உணவாக உண்ணலாம். அவலுடன் தண்ணீர், பால் அல்லது வேறு எந்த திரவத்தினையும் சேர்க்கும்போது, இது திரவத்தினை உறிஞ்சுகின்றது. சூடான அல்லது குளிரான திரவத்தில் அவலினைச் சேர்க்கும்போது தண்ணீரை உறிஞ்சுவதால், இந்த அரிசி செதில்கள் அளவில் பெரிதாகின்றன. செதில்களின் தடிமன் ஒரு சாதாரண அரிசி தானியத்தை விடக் கிட்டத்தட்ட நான்கு மடங்கு மாறுபடும். இந்த தட்டையான அரிசியை முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் மத்திய-மேற்கு இந்திய உணவான போகாவுடன் குழப்பமடையக்கூடாது என்பதற்காக இது "இடிக்கப்பட்ட அரிசி" என்றும் அழைக்கப்படுகிறது.

எளிதில் செரிமானம் ஆகக்கூடிய இந்த அவல் இந்தியா, இலங்கை, நேபாளம் மற்றும் வங்காளதேசம் முழுவதும் மிகவும் பிரபலமானது. மேலும் இது பொதுவாகப் பலவகையான இந்திய உணவு வகைகளில் தின்பண்டமாகவோ, துரித உணவாகவோ பயன்படுகிறது. ஒரு சில வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட நீண்ட கால நுகர்வுக்குக் கூட . இது பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறது. அவையாவன: அவல்க்கி (ಅವಲಕ್ಕಿ) கன்னடம், பாஜில் (ಬಜಿಲ್) துளுவம், பாவா/பாஉனுவா (પૌંઆ) குஜராத்தி, போயா இராச்சுத்தானி, சூடா ஒடியா (ଚୁଡ଼ା) மற்றும் மைதிலி, அட்டுகுலு தெலுகு (అటుకులు ) அவல் தமிழ் மற்றும் அவல் மலையாளம் (അവൽ), சிறு பீகார் மற்றும் சார்கண்ட், சிரா அசாமி (চিৰা) மற்றும் சில்கெட்டி, (ꠌꠤꠠꠣ) திரைப்படத்தில் சிரா வங்காள மொழி (চিঁড়া), சியுரா (चिउरा / 𑒔𑒱𑒅𑒩𑒰) நேபாளி, போச்புரி மற்றும் சத்திசுகரி மொழியில், போகா [1] அல்லது பாவுவா [2] இந்தி, பாஜி நேபால் பாசா, போகி (पोहे) மராத்தி, மற்றும் போவ் (फोव) கொங்கணி . [3]

வெள்ளை அவல்
அவலில் செய்யப்பட்ட சிற்றுண்டி
சமைக்கப்பட்ட அவல்
தென்னிந்திய அவல் சிற்றுண்டி

தட்டையான அரிசியைச் சுடுநீரிலோ அல்லது பாலிலோ, சுவைக்காக உப்பு மற்றும் சர்க்கரையுடன் இலேசாக வறுக்கப்பட்ட கொட்டைகள், திராட்சை, ஏலக்காய் மற்றும் பிற மசாலாப் பொருட்களைச் சேர்த்து உண்ணலாம். மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதியில் (உஜ்ஜைன் மற்றும் இந்தூர்) பகுதிகளில் இலேசாக வறுத்த அவலானது காலை உணவாக பெரும்பாலான நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது. சேர்க்கப்படும் நீரின் விகிதத்தைப் பொறுத்து கஞ்சி அல்லது பொங்கல் போன்று தயாரிக்கலாம். கிராமங்களில், குறிப்பாக சத்தீஸ்கரில், தட்டையான அரிசியினை வெல்லத்துடன் கலந்து சாப்பிடுகிறார்கள்.

மகாராட்டிராவில், அவலை இலேசாக வறுத்த கடுகு, மஞ்சள், பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், வறுத்த வேர்க்கடலை சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுகின்றனர். இந்த ஈரப்பதமான தட்டையான அரிசியினை காரமான கலவையில் சேர்த்து வேகவைத்துப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் போஹா அல்லது பாவா என அழைக்கப்படும் அவல் தயாரிப்பு

அவலிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள்

[தொகு]

சமய் பாஜி (நெவார்) : அவலானது, முட்டை மீன், இறைச்சி, உருளைக்கிழங்கு, சோய்லா (நெவாரி டிஷ்), பீன்ஸ், பொரியல் பூண்டு மற்றும் இஞ்சி, பரா உள்ளிட்ட பொருட்களுடன் கலந்து உணவு தயாரிக்கப்படுகிறது. பல்வேறு சிறப்பு விழாக்களின்போது பரிமாறப்படும் உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.

  • அவில் நனாசத்து (അവൽ നനച്ചത്)/அவல் குதிர்தத்து (അവൽ കുതിർത്തത്) (கேரளா): அவல், பால், சர்க்கரை, தேங்காய்த் துருவல் மற்றும் வாழை துண்டுகளுடன் வேர்க்கடலை அல்லது முந்திரி சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது.
  • அவில் விலயெச்சது (അവൽ വിളയിച്ചത്) (கேரளா): நெய்யில் வறுத்த அவலுடன் வெல்லம், பருப்பு, முந்திரி, வேர்க்கடலை தேங்காய்த் துருவல் கலந்து தயாரிக்கப்படுகிறது.
  • தாகி சூரா (பிஹாரி, நேபாளி): பழுத்த வாழைப்பழம், தயிர் மற்றும் சர்க்கரை கலந்தது. "எப்போது வேண்டுமானாலும்" சிற்றுண்டியாக உண்ணக்கூடியது என்றாலும், பாரம்பரியமாக நேபாளத்தில் நெல் நடவு பருவத்தில் விவசாயிகளால் உண்ணப்படுகிறது.
  • தா பாஜி (நெவார் ): அவலினை வாணலியில் வறுத்து, பின்னர் தயிர் மற்றும் சர்க்கரையுடன் கலந்து தயாரிப்பது.[4]
  • சிண்டெர் புலாவ்: குளிர்ந்த நீரில் அரிசி அவலினை இட்டு, பின் உலர்த்தி பிலாஃப் போன்று பருப்பு, திராட்சை, கருப்பு மிளகு, பச்சை மிளகாய், உப்பு மற்றும் சர்க்கரை கொண்டு தயார்செய்வது. இது காலை அல்லது மாலை உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • சிண்டே பீஜா : அவலினை ஒரு கிண்ண நீரில் இட்டு எலுமிச்சை சாறு, உப்பு, சர்க்கரை மற்றும் கருப்பு மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது.
  • சூடா கடலி சகாதா (ଚୁଡା କଦଳୀ କଦଳୀ- ஒடிசா): கழுவப்பட்ட அவல், பால், பிசைந்த பழுத்த வாழைப்பழங்கள், அரைத்த தேங்காய், சர்க்கரை அல்லது வெல்லத்துடன் கலக்கப்படுகிறது. ஒடியாகாரர்கள் சாப்பிடும் பாரம்பரிய காலை உணவு இதுவாகும்.
  • சூடா கடம்பா (ଚୁଡା କଦମ୍ବ - ஒடிசா): முதலில் ஒரு பாத்திரத்தில் நெய்யைச் சூடாக்கிய பின் முந்திரி, திராட்சையும் சேர்த்து வறுக்கப்படுகிறது. ஏலக்காய், சர்க்கரை, அரைத்த தேங்காய், மற்றும் லேசான பால் ஆகியவற்றைச் சேர்த்து அவலினை இட்டு சிறிய பந்துகள் போன்று நெய்யுடன் தயாரிக்கப்படுகின்றது.
  • பஜீல் ஓகார்னே அல்லது அவலாக்கி ஓக்ரேன் (கர்நாடகா): அவல், கறிவேப்பிலை, கடுகு, கிராம், வேர்க்கடலை, எண்ணெய் மற்றும் சிவப்பு மிளகாய் ஆகியவற்றில் ஊறவைத்தது பதப்படுத்தப்படுகிறது. அரைத்த தேங்காய், வெங்காயம், கொத்தமல்லி இலைகள் போன்ற பொருட்களும் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது.
  • கோஜ்ஜு அவலக்கி அல்லது ஹூலி அவலக்கி (கர்நாடகா)
  • தயிர் அவல்: அவலானது ஊறவைக்கப்பட்டு வடிகட்டி, தயிரும் உப்பும் சேர்த்து, மா அல்லது எலுமிச்சை ஊறுகாயுடன் சாப்பிடலாம்.
  • காந்தா போஹே : சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு, வேகவைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், கடுகு, மஞ்சள் மற்றும் சிவப்பு மிளகாய் ஆகியவற்றின் சிறிய துண்டுகளுடன் அவலானது பதப்படுத்தப்பட்டு அரிசிச் சோற்றுடன் சூடாகப் பரிமாறப்படுகின்றன.
  • டாட்பே போஹே : மெல்லிய அல்லது நடுத்தர அளவிலான அவலுடன், தேங்காய், துருவிய மாங்காய், மிளகாய்த் தூள் மற்றும் கொத்தமல்லி கலந்து. பின்னர் உப்பு சேர்த்து வறுத்தெடுத்த வேர்க்கடலை எண்ணெய், கடுகு, மஞ்சள், மற்றும் இறுதியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றுடன் வறுத்த கலவையுடன் பதப்படுத்தப்படுகிறது.
  • தாஹி சூடா : அவலினை தண்ணீரில் சுத்தம் செய்து, தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்து உண்ணும் முறை பீகார் மற்றும் அசாமில் பிரபலமாக உள்ளது, மேலும் இது அசாமில் மாக் பிஹு மற்றும் மகர சங்கராந்தியில் பண்டிகையின் போது முதல் உணவாக உண்ணப்படுகிறது.
  • முட்டை புலாவ் (நேபாளி):
  • போஹா ஜலேபி : மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதி முழுவதும் குறிப்பாக சாகர், இந்தூர், உஜ்ஜைன், ரத்லம், மாண்ட்சார், போபால், ஹோஷங்காபாத் ஆகிய இடங்களில் இது மிகவும் பிரபலமான காலை உணவாகும்.
  • கர்பூஜாச் போஹே : [5] முலாம் பழத்துடன் சேர்த்த அவல் தயாரிப்பு.
  • புல் (முட்டை) சியுரா (நேபாளி): காத்மாண்டு வீடுகளில் பொதுவானது, அவலினை ஆழமான வாணலியில் எண்ணெய்யில் பொரித்து உப்பு சேர்க்கப்படுகிறது. தட்டையான அரிசி தங்கம் / சிவப்பு நிறமாக மாறும் போது, ஒரு முட்டையினை அதன் மீது ஊற்றி, முட்டையானது வேகும் வரை மூடப்படும்.
  • தேங்காய் மற்றும் ஹிங் (கொங்கணி) உடன் தேக் (காரமான) போவு : அவல், தேங்காய்த் துருவல், பெருங்காயம், உப்பு, பச்சை மிளகாய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் கலவையுடன் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து, மென்மையாக்கப் போவினை சேர்க்கின்றனர்.

அவலானது கம்போடியர்களால் அக் அம் போக்கின் போது (நவம்பர் நான்காவது வாரத்தில்) பந்தன்னா பழத்துடன் சாப்பிடப்படுகிறது.

பிரபலமான கலாச்சாரத்தில்

[தொகு]

மராத்தி திரைப்படமான சனாய் சவுகதேவில், காண்டே போகே எனும் பாடலில் அவல் குறித்துக் குறிப்பிடப்படுகிறது. [6]

மேலும் காண்க

[தொகு]
  • சுருட்டப்பட்ட ஓட்ஸ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Raghunandana, K. "Avalakki Oggrane'it contains 100 g of iron". Retrieved 2009-02-09.
  2. "The Vocabulary of Indian Food". Retrieved 2009-02-09.
  3. Raghunandana, K. "Avalakki Oggrane'". Retrieved 2009-02-09.
  4. "magazineoftheworld.com". magazineoftheworld.com. Retrieved 2013-12-15.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Yes, Muskmelon Pohe". Retrieved 2011-12-18.
  6. Sanai Choughade
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவல்&oldid=3793138" இலிருந்து மீள்விக்கப்பட்டது