சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மஞ்சக்குடி
வகைசுயநிதிக் கல்லூரி
உருவாக்கம்2001
கல்வி பணியாளர்
57
மாணவர்கள்1618
அமைவிடம், ,
வளாகம்மஞ்சக்குடி
சேர்ப்பு[பாரதிதாசன் பல்கலைக்கழகம்]
இணையதளம்[1]

சுவாமி தயானந்தா கலை அறிவியல் கல்லூரி (Swami Dayananda College of Arts & Science)[1] என்பது 2001ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்ட தனியார் சுயநிதிக் கல்லூரி ஆகும். இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனமாகும்.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் பிரிவு 12பி படி மானியங்களைப் பெறுவதற்கு தகுதிபெற்ற கல்லூரியாக புது தில்லி, பல்கலைக்கழக மானிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3]

அமைவிடம்[தொகு]

இக்கல்லூரி தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திலுள்ள மஞ்சக்குடியில் அமைந்துள்ளது.

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் கணினி அறிவியல், இளங்கலை ஆங்கிலம், இளங்கலை கணிதம், வர்த்தக பயன்பாடு என 20க்கும் மேல் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

  • இளநிலை வணிகவியல்
  • இளநிலை வணிகவியல் (வங்கி மேலாண்மை)
  • இளநிலை வணிகவியல் (கணினி பயன்பாடு)
  • இளநிலை வணிக நிர்வாகவியல்
  • இளநிலை கணினி பயன்பாடு
  • இளம் அறிவியல் கணினி பயன்பாடு
  • இளம் அறிவியல் தகவல் தொழில்நுட்பவியல்
  • இளம் அறிவியல் இயற்பியல்
  • இளம் அறிவியல் வேதியியல்
  • இளம் அறிவியல் கணிதம்
  • இளங்கலை ஆங்கிலம்
  • முதுநிலை கணினி அறிவியல்
  • முதுநிலை வேதியியல்
  • முதுநிலை வணிகவியல்

மேற்கோள்கள்[தொகு]