மாற்கு (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying tl:Marcos to tl:Papa Marcos
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ilo:Papa Marcos
வரிசை 79: வரிசை 79:
[[hu:Márk pápa]]
[[hu:Márk pápa]]
[[id:Paus Markus]]
[[id:Paus Markus]]
[[ilo:Papa Marcos]]
[[it:Papa Marco]]
[[it:Papa Marco]]
[[ja:マルクス (ローマ教皇)]]
[[ja:マルクス (ローマ教皇)]]

03:05, 6 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

மாற்கு
34ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்சனவரி 18, 336
ஆட்சி முடிவுஅக்டோபர் 7, 336
முன்னிருந்தவர்முதலாம் சில்வெஸ்தர்
பின்வந்தவர்முதலாம் ஜூலியுஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்மாற்குஸ்
பிறப்பு???
உரோமை நகரம், மேலை உரோமைப் பேரரசு ?
இறப்பு(336-10-07)அக்டோபர் 7, 336
உரோமை நகரம், மேலை உரோமைப் பேரரசு ?
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாஅக்டோபர் 7

திருத்தந்தை புனித மாற்கு (Pope Mark) அல்லது மாற்குஸ் கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் சனவரி 18, 336 முதல் அக்டோபர் 7, 336 வரை, மிகக் குறுகிய காலமே ஆட்சிசெய்தார்.

திருத்தந்தையர்களின் வரலாறு (Liber Pontificalis) என்னும் பண்டைய நூல், இவர் உரோமை நகரில் பிரிகஸ் என்பவருக்கு மகனாகப் பிறந்தார் என்று கூறுகிறது.

இவரது ஆட்சிக்கால நிகழ்வுகள்

ஆயர்களின் பட்டியல் (Depositio martyrum) மற்றும் மறைச்சாட்சிகளின் பட்டியல்(Depositio episcoporum) என்னும் தொகுப்புகள் இவர் காலத்தில்தான் தொடங்கப்பட்டன என்பது மரபுச் செய்தி. புதிதாகத் திருத்தந்தையாகத் தெரிந்தெடுக்கப்படுபவருக்கு அருட்பொழிவு வழங்கும் உரிமைகொண்ட மூன்று ஆயர்களுள் ஓஸ்தியா (Ostia) நகர ஆயருக்கு முதன்மைப்பொறுப்பு உண்டு என்று இவர் உறுதிப்படுத்தினார். இன்றைய திருச்சபை வழக்கப்படி, கர்தினால் குழுவின் தலைவர் ஓஸ்தியா நகர ஆயர் என்னும் மரியாதைப் பொறுப்பு கொண்டுள்ளார்.

இயேசு கிறித்து இறைத்தன்மை கொண்டவர், கடவுளின் மகன் என்று நிசேயா சங்கம் 325இல் அறிவித்திருந்தது. ஆனால் ஆரியுஸ் (Arius) என்பவர் இக்கொள்கையை ஏற்க மறுத்து, இயேசு கடவுளின் படைப்புகளில் மிகச் சிறந்தவரே தவிர கடவுள்தன்மை கொண்டவரல்ல என்று போதித்தார். இந்தத் தவறான போதனையால் திருச்சபைக்குள் குழப்பம் ஏற்பட்டது. இது திருத்தந்தை மாற்குவின் காலத்தில் நிகழ்ந்தது.

இவர் கட்டிய கோவில்கள்

உரோமையில் உள்ள புனித மாற்கு பெருங்கோவிலைக் கட்ட இவரே அடித்தளம் இட்டார் என்று கருதப்படுகிறது. புனித பால்பீனா கோவிலைக் கட்டியவரும் இவரே என்று தெரிகிறது.

இறப்பும் திருவிழாவும்

திருத்தந்தை மாற்கு இயற்கைக் காரணங்களால் இறந்தார். அவரது உடல் புனித பால்பீனா கோவிலின் அடியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

திருத்தந்தை மாற்குவின் திருவிழா அக்டோபர் 7ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

முன்னர்
முதலாம் சில்வெஸ்தர்
உரோமை ஆயர்
திருத்தந்தை

336
பின்னர்
முதலாம் ஜூலியுஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாற்கு_(திருத்தந்தை)&oldid=1315563" இலிருந்து மீள்விக்கப்பட்டது