குளூட்டன் ஒவ்வாமை (Coeliac disease) என்பது சிறுகுடலில் ஏற்படும் தன்னெதிர்ப்பு நோயாகும். இந்நோய் குழந்தைப் பருவத்திலிருந்து முதியவர்கள் வரை மரபியல் முன்னிணக்கம் கொண்டவர்களில் ஏற்படுகிறது. செரிமானப் பாதையில் தொந்தரவு மற்றும் வலி, நாட்பட்ட மலச்சிக்கல், பேதி, குழந்தை மரணம், இரத்தச்சோகை[1], அசதி முதலியவை இந்நோயின் அறிகுறிகளாகும். என்றாலும், இத்தகு அறிகுறிகளில்லாமலும் பிற உடல் உறுப்புகளில் வேறு அறிகுறிகள் காணப்படலாம். உணவிலிருந்து தேவையான உயிர்ச்சத்துகளைச் சிறுகுடல் சரியாக உறிஞ்சுவது குறைபாடடைவதால் உயிர்ச்சத்து ஏ குறைபாடு இந்நோயாளிகளில் காணப்படுகிறது.
கோதுமைப்புரதம் மற்றும் பிற தானியங்களில் (உதாரணமாக வாற்கோதுமை, ராய் (புல்வகை)) உள்ள இதே மாதிரியானப் புரதங்களுக்கெதிராக ஏற்படும் வினைகளினால் குளூட்டன் ஒவ்வாமை ஏற்படுகிறது[2].
↑van der Windt DA, Jellema P, Mulder CJ, Kneepkens CM, van der Horst HE (2010). "Diagnostic testing for celiac disease among patients with abdominal symptoms: a systematic review". JAMA303 (17): 1738–46. doi:10.1001/jama.2010.549. பப்மெட்:20442390.