பெரணமல்லூர்

ஆள்கூறுகள்: 12°34′05″N 79°26′05″E / 12.5680816°N 79.4346349°E / 12.5680816; 79.4346349
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரணமல்லூர்
PERANAMALLUR
இரண்டாம் நிலை பேரூராட்சி
பெரணமல்லூர் is located in தமிழ் நாடு
பெரணமல்லூர்
பெரணமல்லூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
பெரணமல்லூர் is located in இந்தியா
பெரணமல்லூர்
பெரணமல்லூர்
பெரணமல்லூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°34′05″N 79°26′05″E / 12.5680816°N 79.4346349°E / 12.5680816; 79.4346349
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தொண்டை மண்டலம்
வருவாய் கோட்டம்செய்யாறு
சட்டமன்றத் தொகுதிவந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைஇரண்டாம் நிலை பேரூராட்சி
 • நிர்வாகம்பெரணமல்லூர் பேரூராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்ஆரணி
 • மக்களவை உறுப்பினர்திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு.
 • மாவட்ட ஆட்சியர்திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
பரப்பளவு[1]
 • மொத்தம்15.02 km2 (5.80 sq mi)
பரப்பளவு தரவரிசைமீட்டர்கள்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்5,801
 • அடர்த்தி390/km2 (1,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN 97
கல்வி மாவட்டம்ஆரணி
சென்னையிலிருந்து தொலைவு129 கி.மீ
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு66 கி.மீ
வந்தவாசியிலிருந்து தொலைவு25 கி.மீ
ஆரணியிலிருந்து தொலைவு22 கிமீ
செய்யாரிலிருந்து தொலைவு26 கிமீ
காஞ்சிபுத்திலிருந்து தொலைவு48 கிமீ
இணையதளம்பெரணமல்லூர் பேரூராட்சி

பெரணமல்லூர் (ஆங்கிலம்:Peranamallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ள பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் பேரூராட்சியும் ஆகும். இது வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

பெரணமல்லூர் பேரூராட்சியிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் இஞ்சிமேடு பெரியமலை சிவனாலயம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்திலும் திருவண்ணாமலை தீபம் ஏற்றுவதை போல இங்கும் கார்த்திகை தீபம், 1999-ம் ஆண்டு முதல் ஏற்றப்படுகிறது.மேலும் பிரசித்தி பெற்ற  செங்கம்பூண்டி சித்தாத்தூர் அம்மன் ஆலயம் 2 கி.மீ  தொலைவில் அமைந்துள்ளது

அமைவிடம்[தொகு]

திருவண்ணாமலையிலிருந்து 63 கிமீ தொலைவில் உள்ள பெரணமல்லூர் பேரூராட்சிக்கு கிழக்கே வந்தவாசி 23 கிமீ; மேற்கே ஆரணி 22 கிமீ; வடக்கே செய்யாறு 25 கிமீ மற்றும் தெற்கில் பெரிய கொழப்பலூர் 14 கிமீ தொலைவிலும், தேசூர் 23 கிமீ தொலைவிலும் உள்ளது.இங்கிருந்து சென்னை, தாம்பரம்,புதுச்சேரி,காஞ்சிபுரம்,திண்டிவனம், பெங்களூரு,வேலூர் போன்ற நகரங்களுக்கு நேரடி போக்குவரத்து வசதிகள் உள்ளது

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

15.02 சகிமீ பரப்பும் , 12 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வந்தவாசி சட்டமன்றத் தொகுதி க்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [2] 2011 சட்டமன்ற  பொதுத்தேர்தல் வரை தமிழக சட்டமன்ற தொகுதியாக விளங்கியது.கேரளாவின் ஆளுநராக 27 அக்டோபர் 1982 முதல் 23 பெப்ரவரி 1988 வரை பதவி வகித்த பா.ராமச்சந்திரன் அவர்கள் 1962 ஆம் ஆண்டு தேர்தலில் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

நிர்வாகம் மற்றும் அரசியல்[தொகு]

இந்நகரம் இரண்டாம் நிலை பேரூராட்சியாகஇன்று வரை செயல்பட்டு வருகிறது. பெரணமல்லூர் நகரம்,தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இரண்டாம் நிலை பேரூராட்சியாகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இந்த நகரை பெரணமல்லூர் பேரூராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.

பேரூராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்றத் தொகுதி வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)
சட்டமன்ற உறுப்பினர் திரு.எசு.அம்பேத்குமார்
மக்களவைத் தொகுதி ஆரணி மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர் திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்

மக்கள் தொகை பரவல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6945மக்கள்தொகை கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.8% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 869 மற்றும் 54 ஆகவுள்ளனர். [3]பெரும்பாலும் விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12°34′N 79°26′E / 12.57°N 79.43°E / 12.57; 79.43 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 135 மீட்டர் (442 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வரலாறு[தொகு]

இரு அரச படையினர் போர் செய்ததால் ஊருக்கு "பேரணிமல்லூர்' என்ற பெயர் ஏற்பட்டு, பேரணிநல்லூர் என மருவியது. காலப்போக்கில் பெரணமல்லூர் ஆகிவிட்டது. பனையாற்றின் குறுக்கே பெரிய அணை கட்டப்பட்டதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். சோழ மன்னன் தன் படைகளுடன் பழையாறைக்குச் செல்லும்போது, இங்குதான் தங்கி ஓய்வெடுப்பார். இதனால், இந்த ஊர் சுற்று வட்டார கிராமங்களுக்கு தலைமையிடமாக இருந்துள்ளது.பழமை வாய்ந்த சிவன் கோயில்,பெருமாள் கோயில்,வரத ஆஞ்சநேயர் கோயில்,எட்டியம்மன் ஆலயம்,கங்கை அம்மன் கோயில் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளது

கல்வி நிலையங்கள்[தொகு]

பெரணமல்லூரில் உள்ள இவ்விரு பாடசாலைகளில் இருந்து பல்வேறு கல்வியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி - பெரணமல்லூர்
அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி - பெரணமல்லூர்

ஆதாரங்கள்[தொகு]

  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
  2. பெரனமநல்லூர் பேரூராட்சியின் இணையதளம்
  3. Peranamallurm Population Census 2011
  4. "Peranamallur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரணமல்லூர்&oldid=3594716" இலிருந்து மீள்விக்கப்பட்டது