செய்யார்
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
![]() | இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருவத்திபுரம் TIRUVATHIPURAM செய்யார் | |
---|---|
இரண்டாம் நிலை நகராட்சி | |
அடைபெயர்(கள்): செய்யார், திருவோத்தூர், திருவத்திபுரம் | |
இந்திய வரைபடத்தில் உள்ள இடம். | |
ஆள்கூறுகள்: 12°40′00″N 79°32′24″E / 12.6667164°N 79.5399414°Eஆள்கூறுகள்: 12°40′00″N 79°32′24″E / 12.6667164°N 79.5399414°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மாகாணம் | தொண்டை நாடு |
வருவாய் கோட்டம் | செய்யார் |
சட்டமன்றத் தொகுதி | செய்யார் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
நிர்மாணித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | இரண்டாம் நிலை நகராட்சி |
• Body | திருவத்திபுரம் நகராட்சி |
• வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) | ஆரணி |
• மின்பகிர்மான வட்டம் | ஆரணி |
• மக்களவை உறுப்பினர் | திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத் |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு. தூசி.மோகன் |
• மாவட்ட ஆட்சியர் | திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப. |
பரப்பளவு[1] | |
• இரண்டாம் நிலை நகராட்சி | 72 km2 (28 sq mi) |
பரப்பளவு தரவரிசை | மீட்டர்கள் |
மக்கள்தொகை (2011) | |
• பெருநகர் | 37,986 |
இனங்கள் | திருவண்ணாமலையன் |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 604407 |
இந்தியாவில் தொலைபேசி எண்கள் | 91-4182 |
வாகனப் பதிவு | TN 97 |
சென்னையிலிருந்து தொலைவு | 110 கி.மீ (68மேல்) |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 93 கி.மீ (58மைல்) |
ஆரணியிலிருந்து தொலைவு | 33 கிமீ (21மைல்) |
ஆற்காடிலிருந்து தொலைவு | 41 கி.மீ (25மைல்) |
செங்கல்பட்டிலிருந்து தொலைவு | 61 கிமீ |
காஞ்சிபுரத்திலிருந்து தொலைவு | 30 கிமீ (19மைல்) |
வேலூரிலிருந்து தொலைவு | 65 கிமீ |
இணையதளம் | திருவத்திபுரம் நகராட்சி |
திருவத்திபுரம் (Thiruvathipuram) அல்லது செய்யார் (Cheyyar) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யார் வட்டம், செய்யார் ஊராட்சி ஒன்றியம், செய்யார் வருவாய் கோட்டம், செய்யார் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் 27 நகராட்சி உறுப்பினர்களுடன் கூடிய இரண்டாம் நிலை நகராட்சியாகவும் அமைந்துள்ளது. இது ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். செய்யாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருவத்திபுரம் நகரம் இங்கு அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் ஆலயம் மற்றும் செய்யாறு ஆற்றின் மூலம் நன்கு அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் திருவத்திபுரம் நகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
திருவத்திபுரம் நகரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐந்தாவது பெரிய நகரமாகும். இது திருவண்ணாமலை மாவட்டத்தின் வடமேற்கு மூலையில் செய்யாறு நதிக்கரையில் மற்றும் ஆற்காடு- வந்தவாசி - திண்டிவனம் மாநில நெடுஞ்சாலை மற்றும் ஆரணி - காஞ்சிபுரம் ஆகிய பட்டு நகரங்களை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இந்நகரம் பட்டு மற்றும் அரிசி நகரான ஆரணிக்கும் மற்றும் காஞ்சிபுரம் நகருக்கு மிக அருகாமையில் உள்ளது.
திருவத்திபுரம் நகரில் இருந்து தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட செய்யார் சிறப்பு பொருளாதார மண்டலம் (செய்யார் சிப்காட்) ஒன்று இயங்கி வருகிறது.
திருவத்திபுரம் நகரம் உருவாக்கம்[தொகு]
- இந்திய விடுதலையின் போது மாநிலம் மற்றும் மாவட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. கிராமமாக இருந்த திருவத்திபுரம் வட ஆற்காடு மாவட்டத்தில் இருக்கும் போது 1959 ஆம் ஆண்டு புதிய செய்யார் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது.
- 1965 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை பேரூராட்சியாக செயல்பட்டது.
- 1989க்கு முன் வட ஆற்காடு மாவட்டமாக இருந்த காலக் கட்டத்தில் திருவத்திபுரம் பேரூராட்சியாக விளங்கியது.
- 1989 ஆம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வேலூர் மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்த திருவத்திபுரம் நகராட்சி, செய்யார் வட்டம் மற்றும் செய்யார் (சட்டமன்றத் தொகுதி) ஆகியப் பகுதிகளை திருவண்ணாமலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
- செய்யார் வட்டம், செய்யார் வருவாய் கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
- அதேபோல் செய்யார் (சட்டமன்றத் தொகுதி) 2007 ஆம் ஆண்டு அரக்கோணம் மக்களவைத் தொகுதியின் ஒரு அங்கமாக இருந்து வந்தது. தற்போது தொகுதி மறுசீரமைப்பு காரணமாக 2008 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆரணி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டு அந்த மக்களவைத் தொகுதியின் அங்கமாக செய்யார் (சட்டமன்றத் தொகுதி) உள்ளது.
- செய்யார் வட்டம், திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் TN25 மூலம் இயங்கி வந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு செய்த மறுசீரமைப்பு காரணமாக ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உருவாக்கப்பட்டது (TN97).இதன் கீழ் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் (Motor Vechile inspector unit office) செய்யாரில் உருவாக்கப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. [2]
- செய்யார் வட்டம், திருவண்ணாமலை மின்பகிர்மான வட்டம் ஒரு அங்கமாக இருந்து வந்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டு செய்த மறுசீரமைப்பு காரணமாக ஆரணி மின் பகிர்மான வட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு செய்யார் வட்டம் ஆரணி மின்பகிர்மான வட்டத்துடன் இணைக்கப்பட்டது. [3]
- பேரூராட்சியாக இருந்த திருவத்திபுரம் நகரம் 1978 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
- அதன்பின்னர் 1993 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது.
வரலாறு[தொகு]
பல்லவர்கள், சோழர்கள் ஆட்சிப்பகுதியின் முக்கிய இடமாக இந்த திருவோத்தூர் பகுதி இருந்து வருகிறது[4] இத்திருத்தலம் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட சிவத்தலமாகும்.
அமைவிடம்[தொகு]
- திருவத்திபுரம் நகரம் ஆரணி - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
- ஆற்காடு - திண்டிவனம் மாநில நெடுஞ்சாலையில் இணைக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.
- மாவட்ட தலைமையிடம் மற்றும் ஆண்மீக நகரான திருவண்ணாமலையிலிருந்து 94 கிமீ தொலைவிலும், பட்டு மற்றும் அரிசி நகரான ஆரணியிலிருந்து 33 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
- ஆற்காடிலிருந்து 41 கிமீ தொலைவிலும், வேலூரிலிருந்து 65 கிமீ தொலைவிலும், பட்டு நகரான காஞ்சிபுரத்திலிருந்து 30 கிமீ தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 21 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
- பெரணமல்லூரிலிருந்து 21 கிமீ தொலைவிலும் மற்றும் மாநில தலைமையிடமான சென்னையிலிருந்து 110 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
பெயர் காரணம்[தொகு]
செய்யார் என்ற பெயர் செய்யாறு என்ற நதி இங்கு ஓடுவதால்தான் தோன்றியது. 'சேய்' என்ற வார்த்தை பிள்ளை என்பதயும், 'ஆறு' என்ற வார்த்தை நதி என்பதயும் குறிக்கிறது. வரலாற்றில் பார்வதி (சிவன் மனைவி) அவரது மகன் முருகன் விளையாட தனது திரிசூலம் மூலம் உருவாக்கிய ஆறுதான் �'சேயாறு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊரின் பழைய பெயர் சேயாறு. இதுதான் று மருவி செய்யாறு என்றழைக்கப்படுகிறது. அதேபோல, திருவத்திபுரம் என்ற பெயர் இங்குள்ள இறைவன் உயர்த்த மந்திரமான வேதத்தை ரிஷிகளுக்கு உரைத்ததால் வந்தது. 'திரு' என்ற சொல் இறைவனையும் 'ஓதுதல்' என்ற சொல் உரைத்தல் என்பதையும் குறிக்கிறது. இதன் பழைய பெயர் திருவோத்தூர் என்பதாகும். இதுதான் இன்று மருவி திருவத்திபுரம் என்று அழைக்கப்படுகிறது.[5].
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 37,802 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். திருவத்திபுரம் மக்களிள் கல்வியறிவு பெற்றோர் 76.59% ஆகும்.[6]
மக்கள்தொகை வளர்ச்சி | ||
---|---|---|
ஆண்டு | ம.தொ. | %± |
1951 | 14,451 | — |
1961 | 15,386 | +6.5% |
1981 | 19,274 | +25.3% |
1991 | 25,067 | +30.1% |
2001 | 35,201 | +40.4% |
2011 | 37,802 | +7.4% |
Sources: |
[[2]]
நிர்வாகம் மற்றும் அரசியல்[தொகு]
நகராட்சி[தொகு]
- பேரூராட்சியாக இருந்த திருவத்திபுரம் நகரம் 1978 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
- அதன்பின்னர் 1993 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. திருவத்திபுரம் நகரம்,தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இரண்டாம் நிலை நகராட்சியாகும். இந்த நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த நகரை திருவத்திபுரம் நகராட்சி நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.[9]
நகராட்சி அதிகாரிகள் | |
---|---|
தலைவர் | |
ஆணையர் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
சட்டமன்றத் தொகுதி | செய்யார் (சட்டமன்றத் தொகுதி) |
சட்டமன்ற உறுப்பினர் | திரு.தூசி.மோகன் |
மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
மக்களவை உறுப்பினர் | திரு.எம்.கே. விஷ்ணு பிரசாத் |
சட்டமன்றத் தொகுதி[தொகு]
- தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் செய்யார் தொகுதி ஒன்றாகும். திருவத்திபுரம் நகராட்சியானது, செய்யார் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
- 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சேர்ந்த திரு. தூசி.மோகன் வென்றார்.
வருவாய் வட்டம்[தொகு]
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் செய்யார் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக திருவத்திபுரம் உள்ளது. இந்த வட்டத்தில் 131 வருவாய் கிராமங்களும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த வட்டத்தில் மக்கள் தொகை 2,18,188 ஆகும். இந்த வட்டத்தில் செய்யார் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் ஆகிய ஒன்றியங்கள் இந்த வட்டத்தில் அமைந்துள்ளது [10]. அதுமட்டுமில்லாமல் இந்த வட்டத்தில் திருவத்திபுரம் நகராட்சி அமைந்துள்ளது.
வருவாய் கோட்டம்[தொகு]
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3 வருவாய் கோட்டங்களில் இதுவும் ஒன்றாகும். செய்யார் வருவாய் கோட்டம் 01.04.1959 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வருவாய் கோட்டத்தின் கீழ் செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டுஆகிய தாலுகாக்கள் அடங்கியுள்ளது. செய்யாறு வருவாய் கோட்டத்தில் 459 வருவாய் கிராமங்கள் உள்ளன இந்த வருவாய் கோட்டத்தின் தலைமையகம் திருவத்திபுரம் நகரில் அமைந்துள்ளது.
வருவாய் கிராமங்கள்[தொகு]
தாலுகா வாரியாக மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி)வ.எண் | வட்டம் | மக்கள் தொகை | வருவாய் கிராமங்கள் | வருவாய் கோட்டம் |
---|---|---|---|---|
1. | செய்யார் | 218188 | 131 | செய்யார் |
2. | வந்தவாசி | 274079 | 161 | செய்யார் |
3. | சேத்துப்பட்டு | 146806 | 76 | செய்யார் |
4. | வெம்பாக்கம் | 124188 | 91 | செய்யார் |
மொத்தம் | 763261 | 459 | செய்யார் |
போக்குவரத்து[தொகு]
சாலை வசதிகள்[தொகு]
திருவத்திபுரம் நகரானது ஆரணி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பட்டு நகரங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 5A உம் மற்றும் திண்டிவனம், வந்தவாசி மற்றும் ஆற்காடு நகரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 5 உம் இந்த நகரத்தை இணைக்கும் வகையில் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது.
- மாநில நெடுஞ்சாலை SH5: திண்டிவனம் - வந்தவாசி - திருவத்திபுரம் - ஆற்காடு
- மாநில நெடுஞ்சாலை SH5A : ஆரணி - ச.வி.நகரம் - மாம்பாக்கம் - திருவத்திபுரம் - மாங்கால் கூட்ரோடு - தூசி - காஞ்சிபுரம்
- மாவட்ட சாலை: திருவத்திபுரம் - பெரணமல்லூர்
ஆகிய சாலைகள் திருவத்திபுரம் நகரத்தை இணைக்கிறது.
பேருந்து வசதிகள்[தொகு]
திருவத்திபுரம் நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கிமீ தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் மற்றும் ஆரணி , காஞ்சிபுரம் மற்றும் வந்தவாசியுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மாவட்ட தலைநகரம் திருவண்ணாமலை செல்லவேண்டும் என்றால் ஆரணி, போளூர் வழியாக தான் செல்லமுடியும். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகளை பொறுத்தவரை மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. ஆனாலும், பெரிய நகரங்களான சென்னைக்கு 30பேருந்துகளும், சேலத்திற்கு 8 பேருந்துகளும், பெங்களூருக்கு 3பேருந்துகளும், திருச்சிக்கு 1பேருந்து வீதமும் மற்றும் 30கிமீ தொலைவுள்ள கிராமப்புறங்களை இணைக்கும் வகையில் 12பேருந்துகளும் திருவத்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.
சென்னை, காஞ்சிபுரம், ஆரணி, வந்தவாசி, பெரணமல்லூர், திருவண்ணாமலை, ஆற்காடு, வேலூர் ஆகிய நகரங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தாம்பரம், செங்கல்பட்டு, அடையாறு, போளூர், செங்கம், மேல்மருவத்தூர், திண்டிவனம், சேத்துப்பட்டு, பிரம்மதேசம், வெம்பாக்கம், திருத்தணி, திருப்பதி, பெங்களூரு, புதுச்சேரி, உத்திரமேரூர், திருச்சி, சிதம்பரம், படவேடு ஆகிய நகரங்களுக்கு குறிப்பிட்ட சேவைகளும் உள்ளது.
இரயில் போக்குவரத்து[தொகு]
செய்யார் நகரில் இரயில் போக்குவரத்து தற்போது வசதிகள் ஏதுமில்லை. இருந்தாலும் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது திண்டிவனம் - நகரி இரயில் பாதை ஆகும். இந்த இரயில் பாதை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து, ஆந்திர மாநிலம், நகரி வரை அதாவது வந்தவாசி - செய்யார் - ஆரணி - ஆற்காடு - இராணிப்பேட்டை வழியாக இரயில் போக்குவரத்து இணைக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு அதற்கான இரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றது. [12].
செய்யாரிலிருந்து 33கிமீ தொலைவுள்ள காஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து சென்னை, திருப்பதி, மும்பை, புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இரயில் வசதி உள்ளது. அதேபோல் செய்யாரிலிருந்து 67 கிமீ தொலைவு உள்ள வேலூர் காட்பாடி இரயில் நிலையத்தில் இருந்து வடமாநிலங்களுக்கும் மற்றும் செய்யாரிலிருந்து 58கிமீ தொலைவுள்ள திண்டிவனம் ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்ல இரயில் வசதி உள்ளது.
விமான போக்குவரத்து[தொகு]
செய்யாறு நகரில் விமான போக்குவரத்து தற்போது ஏதுமில்லை. இருந்தாலும் 93 கிமீ தொலைவில் அமைந்துள்ள சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம் மூலம் செய்யலாம். மற்றும் 71 கிமீ தொலைவில் உள்ள வேலூர் விமான நிலையம் மூலமும் மற்றும் 59கிமீ தொலைவில் உள்ள அரக்கோணம் விமான நிலையம் மூலமும் பயணம் செய்யலாம். அதுமட்டுமின்றி, சென்னையின் 2வது சர்வதேச விமான நிலையம் ஆரணி - திருவத்திபுரம் - காஞ்சிபுரம் சாலையில் வெம்பாக்கம் வட்டம், மாத்தூர் எனுமிடத்தில் அரசுக்கு சொந்தமான 1500 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. [13]
தொழில்வளம்[தொகு]
2008 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை தொன்றுதொட்டு செய்யார் மக்களுக்கு வேளாண்மை சார்ந்த தொழிலும் நெசவுத் தொழிலும் மட்டுமே முக்கிய தொழில்களாக இருந்தன. செழிப்பான கிராமங்களால் சூழப்பட்டதால், செய்யார் முக்கிய வேளாண் நகரமாக விளங்குகிறது. நகருக்கு வெளியே ஆற்காடு - வந்தவாசி - திண்டிவனம் சாலையில் 5 கி. மீ தொலைவில் தமிழ்நாட்டின் முக்கிய சர்க்கரை ஆலைகளுள் ஒன்றான செய்யார் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது இங்கு "15மெகாவாட் இணை மின் உற்பத்தி நிலையமும் செயல்படுகின்றது", ஆவின் பால் பதனிடு நிலையமும் அமைந்துள்ளது. சுற்றுப்புற கிராமங்களிருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் பால் குளிரூட்டப்பட்டு சென்னைக்கு செல்கிறது. இவை தவிர தனியாருக்கு சொந்தமான பெரிய பால்கோவா செய்யார் பால்கோவா தயாரிப்பகமும் உள்ளது. இங்கு நாள்தோறும் தயாராகும் பால்கோவா சென்னை, ஓசூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களுக்கு தினமும் அனுப்பப்படுகிறது. அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையமும் உழவர்சந்தையும் சுற்றுப்புற கிராமங்களிருந்து வரும் விவசாயிகளுக்கு பலன் அளிக்கின்றன. நெசவு இங்கு பாரம்பரிய தொழிலாக உள்ளது. கைத்தறி மற்றும் விசைத்தறிகளின் மூலம் பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் நெய்யப்படுகின்றன.
செய்யாரிலிருந்து ஐந்து கிலோ மிட்டர் தொலைவில் உள்ள ஜடேரி என்னும் கிராமத்தில் இருந்து வைணவர் நெற்றிகளில் இடும் திருமண் என்னும் நாம கட்டி இந்த கிராம மண்ணில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.
செய்யார் சிப்காட்[தொகு]
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர் செய்யார் பெரிய தொழில் வளர்ச்சி கண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செய்யாருக்கு அருகில், ஆரணி - திருவத்திபுரம் - காஞ்சிபுரம் சாலையில் உள்ள மாங்கால் கூட்டு சாலை அருகே செய்யார் தொழிற்பேட்டை (Cheyyaru SIPCOT) மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலமும் (SEZ) அமைக்கப்பெற்று வருகின்றன. இந்த சிப்காட் நிறுவனம் திருவத்திபுரம் நகரிலிருந்து 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது சென்னைக்கு அருகில் உள்ளதாலும் திருப்பெரும்புதூர் மற்றும் ஒரகடம் தொழிற்பேட்டைகளின் இடப்பற்றாக் குறையை நீக்க மாற்று இடம் தேவைப்படுவதாலும் செய்யாறு தேர்ந்தெடுக்கப்படுள்ளது. ஆரம்பிக்கப்பெற்று இரு ஆண்டுகளில் தைவான் நாட்டின் Nike & Lotus காலணி தயாரிப்பகம், அசோக் லே-லாண்டின் அலுமினிய வார்ப்பகம், Llyods ஆகிய நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. செய்யார் சிப்காட்டில் மஹேந்திரா மற்றும் ஸ்விங்ஷட்டர் ஆகிய பெருங் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை தொடங்கிவிட்டனர்.மற்றும் இருமந்தாங்கள் அருகே Voltas switch நிறுவனம் தங்களின் உற்பத்தியை தொடங்கிவிட்டனர். நிறுவனத்தின் மூலம் ஏராளமான இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
24-03-2020 நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 660 ஏக்கர் பரப்பளவில் 770 கோடி செலவில் மருந்தியல் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கல்வி[தொகு]
செய்யார் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு தனி கல்வி மாவட்டமாகும். அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளிக் கட்டிடம் ஆகஸ்ட் 31, 1917 இல் திறக்கப்பட்டது. அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி 69 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இந்த கல்லூரி முதலில் சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்தது. 2002 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட பின்னர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இணைந்தது. இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகரிப்பு சபையினால் மூன்று நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளளது. இது பி.ஏ., எம்.ஏ., பி.எஸ்ஸி, எம்.எஸ்ஸி. மற்றும் பிஎச்டி படிப்புகளை வழங்குகிறது. சமீபத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் இங்கு தொடங்கப்பட்டுள்ளது [14].
அருள்மிகு வேதபுரீஸ்வரர் ஆலயம்[தொகு]
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அருள்மிகு பாலகுஜாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் ஆலயம் தொண்டை மண்டலத்தின் 32 பாடல்பெற்ற தலங்களுள் எட்டாவது தலமாகும். இங்கு சிவன் வேதங்களை புரிபவனாக மேற்கு நோக்கி அமைந்துள்ளார். சிவனடியார் ஒருவர் நதிக்கரையில் பனை மரங்களை நட்டு சிவனை வணங்கி வந்தார். அப்பனை மரங்கள் அனைத்தும் கனி தராத ஆண் பனைகளாகின. இதனை கண்டு, சமணர், அச்சிவனடியாரை ஏளனம் செய்தனர். இதனைச் செவியுற்ற திருஞானசம்பந்தர் சமணர்களோடு சொற்போரில் ஈடுபட்டார். இருவரும் தத்தம் இறைவனை வேண்டி தமிழ் செய்யுள் ஏற்றி செய்யாற்றில் விட்டனர். திருஞானசம்பந்தரின் செய்யுள் எதிர் நீந்தி செய்யாறைவென்றான் என்னும் ஊரில் கரை ஒதுங்கியது. சமணர்களின் செய்யுள் ஆற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு அனகப்பதூர் எனுமிடத்தில் ஒதுங்கியது. திருஞானசம்பந்தர் சிவனை வேண்டி பத்து பதிகங்களைப் பாடி ஆண் பனைகளை குழையீன்ற வைத்தார். இன்றும் இத்தல விருட்சமான பனை மரங்கள் கார்த்திகை மாதத்தில் ஆண் பனைகளாக பனை பூக்களையும், சித்திரை மாதத்தில் பெண் பனைகளாக பனை கனிகளையும் ஒரே மரத்தில் விளைவிக்கின்றன. இது வேறு எங்கும் இல்லாத தாவரவியல் விந்தை ஆகும். சிவனை நோக்காது வாயிலை நோக்கி அமர்ந்துள்ள நந்தி இக்கோவிலின் இன்னொரு சிறப்பாகும். வேதங்களை புரியும் இறைவனுக்கு இடையூறுகள் வராமலிருக்க நந்தி சிவனை நோக்காமல் வாயிலை நோக்கி காவல்காப்பதாக நம்பப்படுகிறது. ஒரு சமயம் சிவபக்தரான தொண்டை மன்னனை எதிரிகளிடமிருந்து காப்பதற்காக வாயிலை நோக்கி நந்தி திரும்பியது எனும் செவி வழி கதையும் வழக்கில் உண்டு. உட்பிராகாரத்தில், உயரமான பீடத்தில் நாகலிங்கம் சந்நிதி அமைந்துள்ளது. ஞானசம்பந்தர், திருவோத்தூர் தலம் வந்தபோது, அவரை வெறுக்கும் சமணர்கள் ஒரு வேள்வி செய்து, ஐந்து தலைகளை உடைய ஒரு பாம்பை ஞானசம்பந்தர் மீது ஏவினார்கள். அப்போது, இத்தல இறைவன் ஒரு பாம்பாட்டியாக வந்து, ஐந்து தலை நாகத்தின் தலை மீது ஏறி அதை அடக்கி ஆலயத்தினுள் வந்து அமர்ந்தார். அதுவே இந்த நாகலிங்கம் சந்நிதி. இந்த நாகலிங்கத்தை வழிபட்டுவர, நாக தோஷங்கள் விலகும். நாகலிங்கத்தின் நேர் பார்வையில் சனி பகவான் சந்நிதி அமைந்துள்ளது. ஆகையால், சனியால் ஏற்படும் தொல்லைகள், தோஷங்கள், நாகலிங்கத்தை வழிபடுவதால் தீரும். திருமணம் ஆகாதவர்கள், சனிக்கிழமைகளில் இந்தச் சந்நிதியில் 9.30 - 10.30 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெரும் அந்தசமையத்தில் தீபமேற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று ஐதீகம்.
ஒரே இடத்தில ஐம்பூத(பஞ்ச)தலங்கள், ஆறடி உயரத்தில் தென்முகக் கடவுள் ஆகியவையும் இத்தலத்தின் சிறப்புகளாகும். தொண்டை மன்னர்கள், பல்லவர்கள், விஜய நகர மன்னர்கள் மற்றும் சோழர்கள் இத்தலத்திற்கு திருப்பணிகள் செய்தனர். கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள கன்னட, தெலுங்கு மொழி கல்வெட்டுகள் விஜயநகர மன்னர்களின் பங்களிப்பையும், 11 ஆம் மற்றும் 13 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த சோழர்களின் குறிப்புகளும் இக்கோவிலின் வரலாற்றை பறைசாற்றுகின்றன. சித்திரை மாதத்தில் நடைபெறும் ஆற்றுத்திருவிழா, தெப்பல்-தோப்பு திருவிழா மற்றும் பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் ஆகியவை சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறும் கோலாகலங்களாகும். தினமும் முக்கால பூஜைகள், பிரதோச சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "District Census Handbook : Tiruvannamalai" (PDF). பார்த்த நாள் 21 June 2017.
- ↑ ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அரசானை வெளியீடு
- ↑ ஆரணி மின்பகிர்மான வட்டம் அறிவிப்பு
- ↑ திருவண்ணாமலை மாவட்டம் இணையதளம்
- ↑ செய்யார் பெயர்க்கான வரலாறு
- ↑ திருவத்திபுரம் நகராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ "Population Details". thiruvathipuram municipality (2011). பார்த்த நாள் 2012-12-29.
- ↑ 8.0 8.1 "Census Info 2011 Final population totals – arani". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India (2013). பார்த்த நாள் 26 January 2014. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "2011census" defined multiple times with different content - ↑ | திருவத்திபுரம் நகராட்சியின் மக்கள்தொகை
- ↑ செய்யார் வருவாய் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள்
- ↑ செய்யார் வருவாய் கோட்டத்தின் மக்கள் தொகை
- ↑ |திண்டிவனம் - நகரி ரயில்பாதை திட்டம் மந்தகதியில் நடைபெறும் திட்டப் பணி
- ↑ [1]
- ↑ செய்யார் வட்டத்தில் கல்வி