ஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
ஆருர் அரநெறி அகிலேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):ஆருர் அரநெறி
பெயர்:ஆருர் அரநெறி அகிலேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவாரூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அகிலேசுவரர்
தாயார்:வண்டார்குழலி, புவனேசுவரி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்

ஆரூர் அகிலேசுவரர் கோயில் (ஆரூர் அரநெறி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 88ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராசசுவாமி கோயிலின் தெற்குச் சுவற்றில் அமைந்துள்ளது.

வழிபட்டோர்[தொகு]

இத்தலத்தில் நமிநந்தியடிகள் வழிபட்டார் எனப்படுகிறது.

சிறப்பு[தொகு]

அசலேசுவரம் என்று வழங்கப்படும் இக்கோயிலின் மூலவர் அசலேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். [1]இத்தலத்தில் இயமசண்டர், ஆதிசண்டர் என்று இரண்டு சண்டேசுவரர் சந்நிதிகள் உள்ளன.[2] இங்கு கமலாலயக் குளத்தின் கரையில் சுந்தரருக்கு இறைவனார் தந்த பொன்னை அவர் எடுக்கும் போது அதனை மாற்று உரைத்து சரி பார்த்துச் சொன்ன ’மாற்றுரைத்த விநாயகர்’ சந்நிதி உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009, ப.640
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 354

இவற்றையும் பார்க்க[தொகு]