மார்ச்சு 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: dv:މާރޗް 21 |
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: ne:२१ मार्च |
||
வரிசை 142: | வரிசை 142: | ||
[[nds:21. März]] |
[[nds:21. März]] |
||
[[nds-nl:21 meert]] |
[[nds-nl:21 meert]] |
||
[[ne:२१ मार्च]] |
|||
[[nl:21 maart]] |
[[nl:21 maart]] |
||
[[nn:21. mars]] |
[[nn:21. mars]] |
14:28, 13 மே 2011 இல் நிலவும் திருத்தம்
<< | மார்ச் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
மார்ச் 21 கிரிகோரியன் ஆண்டின் 80ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 81ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 285 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1413 - ஐந்தாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
- 1556 - கண்டர்பரி பேராயர் தொமஸ் கிரான்மர் ஒக்ஸ்போர்ட் நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
- 1788 - லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் 25 விழுக்காடு நகர மக்கள் கொல்லப்பட்டனர்.
- 1800 - ரோம் நகரில் இடம்பெற்ற கலகங்களை அடுத்து கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர்கள் நகரை விட்டு அகற்றப்பட்டதை அடுத்து, வெனிஸ் நகரில் ஏழாம் பயஸ் பாப்பரசராகப் பதவியேற்றார்.
- 1801 - பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படைகளுக்கிடையில் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரில் போர் இடம்பெற்றது.
- 1844 - பஹாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாள் ஆகும்.
- 1857 - டோக்கியோவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 100,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 1905 - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது புகழ் பெற்ற சிறப்புச் சார்புக் கோட்பாடு கொள்கையை வெளியிட்டார்.
- 1913 - ஒகைய்யோவில் டேட்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 360 பேர் கொல்லப்பட்டு 20,000 வீடுகள் அழிந்தன.
- 1917 - டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1933 - டேச்சு வதை முகாம், நாசிகளின் முதலாவது வதை முகாம், ஜெர்மனியில் அமைக்கப்பட்டது.
- 1935 - பேர்சியா நாட்டை ஈரான் (ஆரியரின் நாடு) என அழைக்கும்படி ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் மண்டலாய் நகரை பிரித்தானியப் படைகள் விடுவித்தனர்.
- 1948 - முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாகிஸ்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.
- 1960 - நிறவெறி: தென்னாபிரிக்காவில் ஷார்ப்வில் என்ற இடத்தில் கறுப்பின தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி காவற்படையினர் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர்.
- 1970 - முதலாவது பூமி நாளுக்கான அழைப்பை சான் பிரான்சிஸ்கோ மேயர் ஜோசப் அலியோட்டோ விடுத்தார்.
- 1980 - ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து மொஸ்கோவில் 1980 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிப்பதாக ஐக்கிய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
- 1984 - மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி இலங்கை அரசு அங்கிருந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.
- 1990 - 75 ஆண்டுகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்றது.
- 1994 - ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கிய Schindler's List ஏழு ஆஸ்கார் விருதுகளை வென்றது.
- 1998 - புனித வெள்ளி உடன்பாடு வடக்கு அயர்லாந்தில் எட்டப்பட்டது.
பிறப்புக்கள்
- 1768 - ஜோசப் ஃபூரியே, பிரெஞ்சுக் கணிதவியலாளர் (இ. 1830)
- 1807 - சைமன் காசிச்செட்டி, 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் தமிழ் புளூட்டாக் நூலை எழுதிய ஈழத்தவர்.
- 1916 - பிஸ்மில்லா கான் உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை (இ. 2006)
- 1922 - முஜிபுர் ரகுமான், வங்காள தேசப் பிரதமர் (இ. 1975)
- 1923 - என். மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர்
- 1932 - வால்டர் கில்பேர்ட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர்.
- 1936 - காமினி பொன்சேகா, சிங்களத் திரைப்பட நடிகர் (இ. 2004)
இறப்புக்கள்
சிறப்பு நாள்
- உலக வன நாள்
- நமீபியா - விடுதலை நாள் (1990)
- தென்னாபிரிக்கா - மனித உரிமைகள் நாள்
- உலக செய்யுள் நாள் - யுனெஸ்கோ