கொல்லன்கோயில்
கொல்லன்கோயில் | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | கொடுமுடி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
9,196 (2011[update]) • 759/km2 (1,966/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 12.12 சதுர கிலோமீட்டர்கள் (4.68 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/kollankoil |
கொல்லன்கோயில் (ஆங்கிலம்:Kollankoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
33 குக்கிராமங்களைக் கொண்ட இப்பேரூராட்சியில், பெரும்பான்மையான மக்கள் விவசாயமும், கைத்தறி நெசவுத்தொழிலும் செய்து வருகின்றனர். இப்பேரூராட்சி பகுதியில் 13 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கங்கள் உள்ளன. கொல்லன்கோவில் பேரூராட்சியில், சடையீஸ்வர சுவாமி கோவில் உள்ளது.
அமைவிடம்[தொகு]
ஈரோடு - வெள்ளக்கோயில் சாலையில் அமைந்த கொல்லன்கோயில் பேரூராட்சிக்கு வடக்கில், 35 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் கரூர் 40 கி.மீ.; வட கிழக்கில் நாமக்கல் 40 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
12.12 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 42 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,833 வீடுகளும், 9,196 மக்கள்தொகையும் கொண்டது. [4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ கொல்லன்கோயில் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Kollankoil Population Census 2011