கோபிசெட்டிப்பாளையம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோபிசெட்டிப்பாளையம் வட்டம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக கோபிச்செட்டிப்பாளையம் நகரம் உள்ளது. இந்த வட்டம் கோபிச்செட்டிபாளையம், காசிபாளையம், சிறுவலூர், வாணிப்புத்தூர் என நான்கு உள்வட்டங்களும் (பிர்கா), 60 வருவாய் கிராமங்கள் கொண்டது. [2]

இவ்வட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 376,351 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 186,691ஆண்களும், 189,660 பெண்களும் உள்ளனர்.115,410 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 57.7% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 69.33% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 29784 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 967 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 67,213 மற்றும் 1,531 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 96% , இசுலாமியர்கள் 2.05%, கிறித்தவர்கள் 1.7% மற்றும் பிறர் 0.25% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]