சத்திராசு லட்சுமி நாராயணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்திராசு லட்சுமி நாராயணா
பிறப்புசத்திராசு லட்சுமி நாராயணா
திசம்பர் 15, 1933(1933-12-15)
நர்சபூர் , பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்புஆகத்து 31, 2014(2014-08-31) (அகவை 80)
சென்னை, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னைப் பல்கலைக்கழகம்
வலைத்தளம்
bapuartcollection.com

சத்திராசு லட்சுமி நாராயணா (திசம்பர் 15, 1933 – ஆகத்து 31, 2014[1]), தொழில்முறையாக பப்பு என்று அழைக்கப்பட்ட ஒரு ஆந்திரத் திரைப்படத்துறை இயக்குநராவார் .[2]மேலும் , அவர் ஒரு ஓவியர் , வரைகலைஞரும் ஆவார் .இந்திய கலை மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2013இல் இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது .அவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளும், ஐந்து மாநில நந்தி விருதுகளும், இரண்டு தென் இந்திய பிலிம்பேர் விருதுகள் , 2012 ஆம் ஆண்டிற்கான தென் இந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார் [3]

மேற்கோள்கள்[தொகு]