உள்ளடக்கத்துக்குச் செல்

சிவந்தி ஆதித்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவந்தி ஆதித்தன்
பிறப்பு(1936-09-24)செப்டம்பர் 24, 1936
இறப்புஏப்ரல் 19, 2013(2013-04-19) (அகவை 76)
சென்னை
இருப்பிடம்சென்னை
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
எசு. மாலதி ஆதித்தன் (இ.2026)
பிள்ளைகள்எசு. பாலசுப்பிரமணியன் ஆதித்தன்,மாலா,அனிதாகுமரன்

சிவந்தி ஆதித்தன் (Sivanthi Adithan, 24 செப்டம்பர் 1936 – 19 ஏப்ரல் 2013) தமிழ்ச் செய்தி நாளேடுகள் தினத்தந்தி, மாலைமலரின் உரிமையாளராகவும், முதன்மைத் தொகுப்பாசிரியராகவும் இருந்தவர்[1]. தினத்தந்தி நிறுவனர் சி. பா. ஆதித்தனார் - கோவிந்தம்மாள் இணையரின் இரண்டாவது மகன் ஆவார். கைப்பந்தாட்டத்தில் மிகுந்த முனைப்பு உடையவர். இந்தியக் கைப்பந்து விளையாட்டுச் சங்கத் தலைவராகவும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர்.[2]

2008ஆம் ஆண்டில் இலக்கியம்/கல்விப் பிரிவில் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது[3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chaiman and Chief Editor of Dailythanthi
  2. "தினத்தந்தி' அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் வாழ்க்கைக் குறிப்பு". நக்கீரன். ஏப்ரல் 20, 2013. Retrieved ஏப்ரல் 20, 2013. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. Padmashri in the year 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவந்தி_ஆதித்தன்&oldid=4486093" இலிருந்து மீள்விக்கப்பட்டது