சிவந்தி ஆதித்தன்
தோற்றம்
சிவந்தி ஆதித்தன் | |
|---|---|
| பிறப்பு | செப்டம்பர் 24, 1936 |
| இறப்பு | ஏப்ரல் 19, 2013 (அகவை 76) சென்னை |
| இருப்பிடம் | சென்னை |
| சமயம் | இந்து |
| வாழ்க்கைத் துணை | எசு. மாலதி ஆதித்தன் (இ.2026) |
| பிள்ளைகள் | எசு. பாலசுப்பிரமணியன் ஆதித்தன்,மாலா,அனிதாகுமரன் |
சிவந்தி ஆதித்தன் (Sivanthi Adithan, 24 செப்டம்பர் 1936 – 19 ஏப்ரல் 2013) தமிழ்ச் செய்தி நாளேடுகள் தினத்தந்தி, மாலைமலரின் உரிமையாளராகவும், முதன்மைத் தொகுப்பாசிரியராகவும் இருந்தவர்[1]. தினத்தந்தி நிறுவனர் சி. பா. ஆதித்தனார் - கோவிந்தம்மாள் இணையரின் இரண்டாவது மகன் ஆவார். கைப்பந்தாட்டத்தில் மிகுந்த முனைப்பு உடையவர். இந்தியக் கைப்பந்து விளையாட்டுச் சங்கத் தலைவராகவும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர்.[2]
2008ஆம் ஆண்டில் இலக்கியம்/கல்விப் பிரிவில் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது[3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chaiman and Chief Editor of Dailythanthi
- ↑ "தினத்தந்தி' அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் வாழ்க்கைக் குறிப்பு". நக்கீரன். ஏப்ரல் 20, 2013. Retrieved ஏப்ரல் 20, 2013. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Padmashri in the year 2008