கல்லாட நாகன்
கல்லாட நாகன் | |
---|---|
அனுராதபுர அரசர் | |
ஆட்சி | கி.மு. 109 – கி.மு. 103 |
முன்னிருந்தவர் | லஞ்ச திச்சன் |
வலகம்பாகு | |
அரச குலம் | விசய வம்சம் |
தந்தை | சத்தா திச்சன் |
இறப்பு | கி.மு. 103 |
கல்லாட நாகன் என்பவன் கி.மு. 109 தொடக்கம் கி.மு. 103 வரை இலங்கையின் அனுராதபுர இராச்சியத்தை ஆண்ட அரசனாவான். இவன் சத்தா திச்சனின் இளைய மகனாவான். துலத்தன் மற்றும் லஞ்ச திச்சன் ஆகியோரின் தம்பியும் ஆவான். இவனின் பின் வலகம்பாகு ஆட்சிபீடம் ஏறினான். இவனுக்கு எதிராக இவனின் ஆட்சிக்காலத்தில் இரண்டு சதிகள் நடைபெற்றன; அதில் ஒன்று திச்ச, அப, உத்தர எனும் இளவரசிகள் கலகங்களை உண்டாக்கி இவனது ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தனர். மற்றையது அரசனின் படைத்தலைவன் மஹாரத்தக என்பவனால் ஏற்பட்டது. இச்சதிகாரணமாக மன்னன் உயிரிழந்தான். அவன் உயிரிழந்ததுடன் படைத்தலைவன் அரசானானான். எனினும் இவனது ஆட்சி சில நாட்களே நீடித்தது. [1]
இவற்றையும் பார்க்க[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ இலங்கை வரலாறு, முதலாம் பாகம், அனுராதபுர காலம், இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பக்.இல. 108
வெளி இணைப்புக்கள்[தொகு]
விசய வம்சம் (கி.மு. 477–கி.மு. 237, கி.மு. 215–கி.மு. 205) |
|
---|---|
சோழ வம்சம் (கி.மு. 205 – கி.மு.161) |
|
விசய வம்சம் (கி.மு. 161 –கி.மு.103 ) |
|
பஞ்ச பாண்டியர் (அநுராதபுரம்) (103 BC–89 BC) |
|
விசய வம்சம் (89 BC–66 AD) |
|
House of Lambakanna I (66–436) |
|
இராசராட்டிரப் பாண்டியர் (436–463) |
|
House of Moriya (463–691) |
|
House of Lambakanna II (691–1017) |
|
சாய்வெழுத்தில் உள்ளவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களைக் குறிக்கும். |