சோரநாகன்
Jump to navigation
Jump to search
சோரநாகன் | |
---|---|
அனுராதபுர அரசன் | |
ஆட்சி | கி.மு. 62 - கி.மு. 50 |
முன்னிருந்தவர் | மகசுழி மகாதிஸ்ஸ |
குட்ட திச்சன் | |
அரச குலம் | விசய வம்சம் |
தந்தை | வலகம்பாகு |
சோரநாகன் என்பவன் கி.மு. 62 தொடக்கம் கி.மு. 50 வரை இலங்கையின் அனுராதபுர இராசதானியை ஆண்ட அரசன் ஆவான். இவன் இவனுடைய மைத்துனனான மகசுழி மகாதீசனை தோற்கடித்து ஆட்சிபீடம் ஏறினான். இவனுடைய மருமகன் குட திச்சன் இவனின் பின்பு ஆட்சிபிடம் ஏறினான். இவன் வலகம்பா மன்னனின் மகனாவான். மகசுழி மகாதீசன் காலத்தில் இவன் அரசனுக்கு எதிராகக் கலகம் செய்ததால் நாக எனு பெயர் கொண்ட இவனுக்கு சோர எனும் பெயர்ப்பதமும் சேர்க்கப்பட்டது. இவன் விகாரைகளை அழித்துப் பாவச்செயல்கள் செய்ததாக அறியப்படுகின்றான்.[1]
இவற்றையும் பார்க்க[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ இலங்கை வரலாறு, முதலாம் பாகம், அனுராதபுர காலம், இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பக்.இல. 111
வெளி இணைப்புக்கள்[தொகு]
சோரநாகன் பிறப்பு: ? ? இறப்பு: ? ?
| ||
ஆட்சியின்போதிருந்த பட்டம் | ||
---|---|---|
முன்னர் மகசுழி மகாதீசன் |
அனுராதபுர அரசர் கி.மு. 62 – கி.மு. 50 |
பின்னர் குட திச்சன் |