முதலாம் யோவான் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புனித முதலாம் யோவான்
ஆட்சி துவக்கம் 523
ஆட்சி முடிவு 526
முன்னிருந்தவர் ஹோர்மிஸ்டாஸ்
பின்வந்தவர் நான்காம் ஃபெலிக்ஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர் ???
பிறப்பு ஆண்டு: பிறந்த இடம் 470
துஸ்கானி
இறப்பு ஆண்டு: இறந்த இடம் மே 18, 526
இரவேனா, ஓஸ்த்ரோகாதிக் பேரரசு
கல்லறை புனித பேதுரு பேராலயம்
புனிதர் பட்டம்
திருவிழா மே 18
ஏற்கும் சபை கத்தோலிக்கம், கிழக்கு மரபு

யோவான் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை புனித முதலாம் யோவான் (சுமார் 470 – மே 18, 526) கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 523 முதல் 526 வரை இருந்தவர். சியன்னா நகரில் (Siena) பிறந்த இவர், திருத்தந்தையான போது மிகவும் நலிவுற்று இருந்தார்.

இவரின் எதிர்ப்பையும் மீறி, ஓஸ்த்ரோகாதிக் பேரரசன் தியோடோரிக் (Theodoric the Great) இவரை ஆரியனிச கொள்கையை சட்டப்பூர்வமாக ஏற்க, ஏவினான். இவ்வாறு செய்யாவிடில் கிழக்கில் கிறித்தவர்களுக்கு எதிராக கலகம் எழும் என்று இவரை மிரட்டினார். ஆனால் இவர் இரவேனாவுக்கு திரும்பியபோது, இவர் தனக்கெதிராக திட்டம் தீட்டியதாக அஞ்சி, தியோடோரிக் இவரை சிறையில் அடைத்தான். அங்கே கவனிப்பார் யாருமில்லாமல் இவர் இறந்தார்.

இவரது மீபொருட்கள் பின்னர் உரோமையில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இவர் கலையில் சிறைபட்டவராய் சித்தரிக்கப்படுகின்றார். இவரின் விழாநாள் மே 18.

முன்னர்
ஹோர்மிஸ்டாஸ்
திருத்தந்தை
523–526
பின்னர்
நான்காம் ஃபெலிக்ஸ்