யோவான் (நற்செய்தியாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நற்செய்தியாளரான புனித
யோவான்
நற்செய்தியாளர், சீடர்
பிறப்புசுமார் கி.பி 15
யெரூசலம் (?)
இறப்புசுமார் கி.பி 100
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை
ஆங்கிலிக்க ஒன்றியம்
திருவிழாடிசம்பர் 27 (மேற்கு கிறித்தவம்]]); மே 8 மற்றும் செப்டம்பர் 26 (இறப்பு) (கிழக்கு மரபுவழி திருச்சபை)
சித்தரிக்கப்படும் வகைகழுகு, ஏட்டுச்சுருள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்யோவான் நற்செய்தி
1 யோவான் (நூல்)
2 யோவான் (நூல்)
3 யோவான் (நூல்)

நற்செய்தியாளரான புனித யோவான் (יוחנן எபிரேயம் Yoḥanan, பொருள் "யாவே இரக்கமுள்ளவர்", கிரேக்கம்: Εὐαγγελιστής Ἰωάννης) என்பவர் பாரம்பரியப்படி யோவான் நற்செய்தியின் ஆசிரியராவார். இவரே யோவான் எழுதிய மூன்று திருமுகங்களின் ஆசிரியராகவும் நம்பப்படுகின்றார். ஒருசாரார் திருவெளிப்பாட்டினை எழுதியவரும் இவரே என்கின்றனர்.[1] மேலும் யோவான் நற்செய்தியில் குறிக்கப்படும் இயேசுவால் அதிகம் அன்பு செய்யப்பட்டவர் இவரே என்கின்றது பாரம்பரியம்.[2] இயேசுவின் உருமாற்றம் உட்பட ஒரு சில சிறப்பான நிகழ்வுகளில் பங்கேற்ற பெருமை இவருக்கு உண்டு. இவர் அதிக ஆண்டுகள் வாழ்ந்து, அப்போசுதலர்களிலேயே இறுதியாக இறந்தார் எனச் சொல்லப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Eusebius of Caesarea, Ecclesiastical History Book vi. Chapter xxv.
  2. Van den Biesen, Christian. "Apocalypse." The Catholic Encyclopedia. Vol. 1. New York: Robert Appleton Company, 1907. 6 Feb. 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோவான்_(நற்செய்தியாளர்)&oldid=3539069" இலிருந்து மீள்விக்கப்பட்டது