முதலாம் மரீனுஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முதலாம் மரீனுஸ்
108ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம் டிசம்பர் 16, 882
ஆட்சி முடிவு மே 15, 884
முன்னிருந்தவர் எட்டாம் யோவான்
பின்வந்தவர் மூன்றாம் ஹேட்ரியன்
பிற தகவல்கள்
இயற்பெயர் ???
பிறப்பு ஆண்டு: பிறந்த இடம் ???
கலீசி, உரோமை நகரம்
இறப்பு ஆண்டு: இறந்த இடம் மே 15 884
 ???

மரீனுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

முதலாம் மரீனுஸ் (அல்லது இரண்டாம் மார்டீன்), கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக டிசம்பர் 16, 882 முதல் மே 15, 884 வரை இருந்தவர். இவர் டிசம்பர் 882-இல் எட்டாம் யோவானுக்குப் பின் திருத்தந்தையானவர்..

பொருளடக்கம்

திருத்தந்தையாவதற்கு முன் [தொகு]

இவர் திருத்தந்தையாவதற்கு முன் சேயிரி நகரின் ஆயராக இருந்தார். காண்ஸ்டான்டினோபிலின் மூப்பரான முதலாம் போதியோஸால் எழுந்த சர்ச்சைகளை தீர்க்க இவருக்கு முன் இருந்த மூன்று திருத்தந்தையர்கள் இவரை தம் தூதுவராக அனுப்பினர்.

திருத்தந்தையாக [தொகு]

இவர் திருத்தந்தையான பின் முதலில் ஃபொர்மோசுஸை போர்தஸ் நகரின் கர்தினால் ஆயராக நியமித்தார்.[1] இவருக்கு பெரிய ஆல்பர்டின் (r. 871-899) மீது இருந்த மரியாதையின் நிமித்தம், உரோமையில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சன் மக்களை வரிச்சுமையிலிருந்து விடுவித்தார்.[1] இவர் மே அல்லது ஜூன் 884-இல் இறந்திருக்கலாம். இவருக்கு பின் மூன்றாம் ஹேட்ரியன் திருத்தந்தையானார்.

மேற்கோள்கள் [தொகு]

  1. 1.0 1.1 "Pope Marinus I; Martin II". New Catholic Dictionary (2008 [last update]). பார்த்த நாள் பெப்ரவரி 7, 2011.

இந்தக் கட்டுரையில் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் 11ம் பதிப்பில் இருந்து உரை எடுத்தாளப்பட்டுள்ளது. இது தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ளது.
  "Pope Marinus I". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 

வெளி இணைப்புகள் [தொகு]

முன்னர்
எட்டாம் யோவான்
திருத்தந்தை
882–884
பின்னர்
மூன்றாம் ஹேட்ரியன்