ஏழாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தந்தை
ஏழாம் இன்னசெண்ட்
ஆட்சி துவக்கம்17 அக்டோபர் 1404
ஆட்சி முடிவு6 நவம்பர் 1406
முன்னிருந்தவர்ஒன்பதாம் போனிஃபாஸ்
பின்வந்தவர்பன்னிரண்டாம் கிரகோரி
திருப்பட்டங்கள்
ஆயர்நிலை திருப்பொழிவு5 டிசம்பர் 1387
கர்தினாலாக உயர்த்தப்பட்டது18 டிசம்பர் 1389
பிற தகவல்கள்
இயற்பெயர்கொசிமோ தெ மிகிலியோராதி
பிறப்பு1339
சுல்மோனால், நேபில்சு
இறப்பு(1406-11-06)6 நவம்பர் 1406
உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள்
இன்னசெண்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை ஏழாம் இன்னசெண்ட் (இலத்தீன்: Innocentius VII; 1339[1] – 6 நவம்பர் 1406), என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 17 அக்டோபர் 1404 முதல் 1406இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். இவரின் இயற்பெயர் கொசிமோ தெ மிகிலியோராதி ஆகும் மேற்கு சமயப்பிளவின்போது (1378–1417) இவர் திருத்தந்தையாக இருந்தார். இவருக்கு எதிராக எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட், அவிஞ்ஞோனில் ஆட்சி செய்தார்.

திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபாஸ் இவரை 1389இல் இவரை கர்தினால்-குருவாக உயர்த்தினார். ஒன்பதாம் போனிஃபாஸின் இறப்புக்குப்பின்பு உரோமையில் இருந்த எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்டினின் தூதுவர்களிடம் கர்தினால்கள் பெனடிக்டிக்ட் பதவி விலகினால் தாங்கள் திருத்தந்தை தேர்தலை தள்ளிப்போட விருப்பம் தெரிவித்தனர். இதை அவர்கள் ஏற்காததால் அவர்கள் ஏழாம் இன்னசெண்டை தேர்வு செய்தனர்.

இவர் உரோமையில் 6 நவம்பர் 1406 அன்று இறந்தார். இவருக்குப்பின்பு திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி திருத்தந்தையானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The single contemporary source that refers to his age (chronicle of Dietrich von Nieheim) says that he became Pope at the age of 65. A. Kneer: Zur Vorgeschichte Papst Innozenz VII., Historisches Jahrbuch, 1891, p. 347-348. Several modern sources (incl. The Catholic Encyclopedia or Encyclopædia Britannica) put his birth ca. 1336
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
ஒன்பதாம் போனிஃபாஸ்
திருத்தந்தை
17 அக்டோபர் 1404 – 6 நவம்பர் 1406
பின்னர்
பன்னிரண்டாம் கிரகோரி