கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() | |
இடம் | அரியலூர் மாவட்டம் |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | ii, iii |
உசாத்துணை | 250 |
UNESCO region | உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1987 (11th தொடர்) |
விரிவாக்கம் | 2004 |
கங்கைகொண்ட சோழபுரம் (ஆங்கிலம்:Gangaikonda Cholapuram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் சோழர்களின் பெருமரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராசேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.[1] இங்கு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் இன்றும் உள்ளது.[2] அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.[3]
பொருளடக்கம்
வேறு பெயர்கள்[தொகு]
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு எண்ணற்ற பெயர்கள் உள்ளன. பண்டையப் புலவர்கள் கங்காபுரி, கங்கைமாநகர் கங்காபுரம் போன்ற பெயர்களில் இவ்வூரை குறித்தனர்.[1] கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயர்மாற்றத்திற்கு முன்பு வன்னியபுரம், வன்னியபுரி என்ற பெயர்களால் இவ்வூர் அழைக்கப்பட்டுவந்துள்ளது.[சான்று தேவை]
வன்னியபுரி என்பதற்கான பெயர்காரணம்[தொகு]
கங்கைகொண்ட சோழபுரம் உருவாகும் முன் அந்த இடம் வன்னியபுரி (அ) வன்னியபுரம் என்ற சிற்றூராக இருந்தது. வன்னியபுரி - வன்னிமரங்களுக்கு சிறப்புபெற்ற வன்னி மரக் காடாக விளங்கியது. இந்த ஊரில் அக்காலத்திலிருந்தே நிறைய வன்னி மரங்கள் இருந்தற்கு சான்றாக இன்றும் தல விருட்சமாக, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் வன்னி மரம் உள்ளது. மேலும், இங்கு வன்னியர் குல க்ஷத்ரியர்கள் என்போர் பெருமளவில் அடர்த்தியாக வாழ்ந்துவருகின்றனர்..
சோழர்களின் புதிய தலைநகர்[தொகு]
மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேர தேசங்களை வெற்றிக் கொண்ட இராஜேந்திர சோழன் 1019இல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றியும் கண்டார். அதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டமும் பெற்றார். அதன் நினைவாக 1023இல் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கினார். இங்கு சிவபெருமானுக்கு கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் எனும் மாபெரும் கோவிலை அமைத்தார்

கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு.[4]
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 கங்கைகொண்ட சோழேச்சரம் (கங்கைகொண்ட சோழபுரம்) - காமகோடி தளம்
- ↑ மன்னர் அரியணை ஏறிய 1,000 ஆண்டு விழா கல்லூரி மாணவர்களின் தீபச்சுடர் ஓட்டம் - தினமலர்
- ↑ சோழ மன்னன் நினைவாக தஞ்சையிலிருந்து தீப ஓட்டம்: கங்கைகொண்ட சோழபுரத்தில் 1,000 தீபம் ஏற்றினர் - தி இந்து சூலை 26, 2014
- ↑ பக் 49, ப.கோமதிநாயகம் (மார்ச், 2000). தமிழகப் பாசன வரலாறு. பக். 87. ISBN 81-87371-07-2.
ஆதார நூல்[தொகு]
தமிழ் நாட்டின் தல வரலாறுகளும்,பண்பாட்டுச்சின்னங்களும், நூலாசிரியர், வி. கந்தசாமி, வரலாற்றுத்துறைத் துணைப் பேராசிரியர், அருள்மிகு பழனியாண்டவர் கலை,பண்பாட்டுக்கல்லூரி, பழனி