அநிருத்தப் பிரம்மராயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அநிருத்தப் பிரம்மராயர் சுந்தர சோழரது காலத்தில் சோழதேசத்து அமைச்சராக இருந்தவர்.[1]

அநிருத்திரர் குலம்[தொகு]

மும்முடிச்சோழ பிரம்மராயர் ஸ்ரீ கிருஷ்ணன் ராமன் என்கிற இயற்பெயர் கொண்டவர். அன்பில் அனந்தாழ்வார் சுவாமி என்கிற ரங்கநாதருக்குப் பணி செய்வதையே வாழ்க்கை கொடுத்த பயனாகக் கொண்டிருந்த அந்தணரின் கொள்ளுப் பேரன். அன்பில் அநிருத்தப் பட்டாச்சாரி எனும் நாராயணன் புகழ் பரப்பிய அந்தணரின் பேரன். ஆழ்வார்களின் பாடல்களை பாடி பக்தர்களை மகிழ்விக்கும் நாராயண பட்டாச்சாரியார் என்பவரின் மகன்.[சான்று தேவை]

அன்பில் செப்பேடு[தொகு]

அநிருத்தப் பிரம்மராயருக்கு பத்துவேலி நிலத்தினை சுந்திர சோழர் தந்தாக அன்பில் செப்பேடுகளில் உள்ளன. இந்நிலங்கள் அனைத்தும் இறையிலி நிலமாக கொடுக்கப்பட்டது என்றும் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. [சான்று தேவை]

நூல்கள்[தொகு]

மகாமந்திரி அநிருத்தப் பிரம்மராயரை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "டாக்டர். கலைக்கோவனிடம் கேட்கப்பட்ட கேள்விகள்". Archived from the original on 2012-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-10-01.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அநிருத்தப்_பிரம்மராயர்&oldid=3657850" இலிருந்து மீள்விக்கப்பட்டது